20 ஜனவரி, 2010

மறுமை நாளில் மனிதர்களின் நிலை.

1817. ”நீங்கள் மறுமை நாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் ‘இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்)அவர்கள் ‘அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று கூறினார்கள்.
புஹாரி : 6527 ஆயிஷா (ரலி).
1818. நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்றபடி உரையாற்றினார்கள். அப்போது (பின் வருமாறு) கூறினார்கள்: (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள். அல்லாஹ் கூறினான்: முதன் முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்வோம். (திருக்குர்ஆன் 21:104). மறுமை நாளில் படைப்பினங்களிலேயே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள். மேலும், என் சமுதாயத்தாரில் சில பேர் இடப்பக்கமாக (நரகம் நோக்கி)க் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் ‘என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்” என்பேன். அப்போது அல்லாஹ் ‘இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்பான். அப்போது நான், நல்லடியார் (நபி ஈஸா (அலை) அவர்கள்) சொன்னதைப் போன்று ‘நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்” (திருக்குர்ஆன் 05:117) என்று சொல்வேன். அப்போது ‘இவர்கள் தம் குதிகால்(சுவடு)களின் வழியே மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டேயிருந்தார்கள்” என்று கூறப்படும்.
புஹாரி : 6526 இப்னு அப்பாஸ் (ரலி).
1819. (மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் போராகச் செல்வார்கள்.அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்று திரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும் போதும், மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீஅவர்களுடனேயே இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6522 அபூஹூரைரா (ரலி).
மாலை நேரம் பிள்ளைகளை வெளியில் விடாதே.

1310. இரவின் முற்பகுதி வந்துவிட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால் உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல)விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான்.
புஹாரி :3307 ஜாபிர் (ரலி).
1311. நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6293 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
1312. மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது ‘நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்” என்றார்கள்.
புஹாரி : 6294 அபூமூஸா (ரலி).

நாவினைப் பேணுதல்.

நாவினைப் பேணுதல்.
எழுதியவர்/பதிந்தவர்/உரை ஜாஃபர் அலி
1881. ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6477 அபூஹுரைரா (ரலி).

17 ஜனவரி, 2010

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) - புகாரி) (Volume 8, Book 73, Number 135)"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்... கோபம் ஏன் ஏற்படுகின்றது?
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.
· நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...
· நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...
· நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...
· எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...இப்படியே பல காரணங்கள் உள்ளன.ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.கோபம் தன்னையே அழித்து விடும்மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும். கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்...
· வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)
· திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.
· தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.
· மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.
· முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது....கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.
· கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.
· இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.
· மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம். கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.கோபத்தை குறைக்க சில வழிகள்:
1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.
2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.
3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்
4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.
5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்
7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.
10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
11. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.

11 ஜனவரி, 2010

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஒரு நாளில் நூறு தடவைسُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِசுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?
ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?
ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?
நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?
விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?
ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?
சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْمசுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
..........................................................................................................................................................................

சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று...?

சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று...?
(ஆடி அடங்கும் வாழ்கையடா. ஆறடி நிலமே சொந்தமடா.?)
எல்லாம் வல்ல இறைவன் மனித வர்க்கத்தை ஆதம்-ஹவ்வா (அலை) என்ற ஒரே ஜோடியிலிருந்தே படைத்திருக்கிறான். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தை வழியில் வந்தவர்கள். அவர்களது இறைவனும் ஒருவனே. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை நெறி நேர்வழி ஒன்றே. இறைவனால் அனுப்பப்ட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஒரே குரலில் அந்த ஒரே கொள்கையை போதித்துள்ளனர். இந்த நிலையில் மனிதரிடையே பற்பல மதங்கள். அந்த பற்பல மதங்களிலும் பற்பல பிரிவுகள் - பிளவுகள் - வேற்றுமைகள். மனிதர்களில் இந்த பிளவுகளும் பிரிவுகளும் ஏற்படக் அடிப்படைக் காரணம் என்ன?ஆதம் (அலை) அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பும்போதே அல்லாஹ் தெளிவாக இவ்வாறு எச்சரித்துள்ளான்.நாம் சொன்னோம்: :நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது, யார் என்னுடைய நேர்வழியை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அன்றி யார் மறுத்து, நமது வசனங்களைப் பொய்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக நெருப்பின் தோழர்கள் ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அல்குர்ஆன் 2:38,39)ஆதம் (அலை) அவர்களை வானவர்களைவிடவும் உயர்ந்தவர்களாக சிறப்பித்துக் காட்டினான். அப்படிப்பட்ட ஒரு நபியை தன் சொந்த அபிப்பிராயப்படி செயல்படக்கூடாது எனவும் எனது கட்டளைப்படியே செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினான். அவனது கட்டளைக்கு மாறு செய்தால் அடையப்போவது மீளா நரகமாகும் என்று எச்சரிக்கவும் செய்கிறான். அல்லாஹ்வுடைய வஹி மூலம் தொடர்பு கொண்டிருந்த நபிமார்களின் நிலையே இதுவென்றால் மற்ற மனிதர்களின் நிலைப்பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. நிச்சயமாக மனிதர்களில் யாரும் சொந்த அபிப்பிராயங்களை இறைவனது நேர்வழியில் புகுத்த முடியாது. அது மாபெரும் தவறு என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆயினும் மனிதர்களில் யாரும் தன்னைப் படைத்த இறைவனுக்கு மாறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதில்லை. கல்லை வணங்கும் மனிதனும் அது இறைவனுக்கு பிடித்தமான செயல் என்று நம்பியே செயல்படுகிறான். இதற்குக் காரணம் மனிதனை வழிகெடுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஷைத்தான் மனிதனது உள்ளத்தில் நல்லதைப் போன்று தீமையைப் புகுத்தி இறைவனுக்கு மாறு செய்யும் நிலைக்குக் கொண்டு சேர்த்து விடுகிறான். இதனை:செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயணற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல்குர்ஆன் 18:103,104)ஷைத்தான் எவ்வாறு இந்நிலையை உருவாக்குகிறான்?மனிதன் தன்னைப் படைத்த இறைவனுக்கு மாறு செய்யத் துணியமாட்டான் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ள ஷைத்தான், இறை கொடுத்த நேர்வழியில் நடப்பதாக நம்ப வைத்து அந்த நேர்வழியில் பல இடைச் செருகல்களைச் சொருக வைத்து விடுகிறான். நேர்வழியில் நடப்பதும் ஒன்றுதான். அந்த நேர்வழியில் நடந்த சென்ற முன்னோர்களையும் மூதாதையர்களையும் பின்பற்றுவதும் ஒன்றுதான் என்ற வசீகரத் தோற்றத்தை உண்டு பண்ணி விடுகிறான். இதனை சாதாரணமாகப் படிப்பவர்களும் இதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றே நினைப்பார்கள். ஆழ்ந்து நோக்கும்போது இறை கொடுத்த நேர்வழியை அறிந்து நடப்பதற்கும், நேர்வழியை நடந்தவர்களைப் பின்பற்றுவதற்கும் உள்ள வித்தியாசம் தெளிவாகவே புரியும்.நேர்வழி அறிந்து நடப்பதில் தவறு ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பில்லை. ஆனால் நேர்வழி அறிந்து நடந்தவர்களின் செயல்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு சரியாகவே இருக்கும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. அவர்களிலும் இறை கொடுத்த நேர்வழிக்கு முரணாகச் சில சம்பவங்கள் இடம்பெற்று விடலாம். இந்த நிலையில் இறை கொடுத்த நேர்வழி அறியாது நல்லடியார்களைப் பின்பற்றுகிறவர்கள், அவர்கள் அறியாது செய்த தவறுகளையும் மார்க்கமாக நம்பிச் செயல்படும் குற்றத்திற்கு ஆளாகிறார்கள். இங்கு இறைவனது நேர்வழியைப் பார்த்துச் செயல்பட்ட நல்லடியார்களிடம் இடம் பெற்ற தவறுகளை அல்லாஹ் மன்னிக்க வழி இருக்கிறது. காரணம் அல்லாஹ் மனிதன் தனது கட்டளைப்படி நடக்க முற்படுகிறானா? என்றே சோதிக்கிறான். அந்த முயற்சியில் ஈடுபட்டுச் சரியாக நடந்தால் இரண்டு நன்மைகள். முயற்சியில் ஈடுபட்டுப் பின் தவறாக நடந்தால் முயற்சிக்கு ஒரு நன்மை. தவறுக்கு குற்றம் பிடிக்க மாட்டான்.இறைவன் கொடுத்த நேர்வழியை அறியாது முன் சென்ற நல்லடியார்களைப் பின்பற்றுகிறவர்கள் மூன்று தவறுகளைச் செய்கிறார்கள். வசனம் 2:38ன் படி இறைவன் கொடுத்த நேர்வழியை அறிய முயற்சிக்கவில்லை. இது ஒரு தவறு. அடுத்து "உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வெறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்" (அல்குர்ஆன் 7:3) என்ற இறை வசனத்தை பொய்யாக்கி முன் சென்ற நல்லடியார்களைப் பின்பற்றுவது இரண்டாவது பெருங்குற்றமாகும். முன்னோர்களைப் பின்பற்றுவதைக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு முன்னோரைப் பின்பற்றி தங்களுக்குள் பல பிரிவுகளாகப் பிரிந்து விடுகிறார்கள். இது மூன்றாவது பெருங்குற்றமாகும். எனவே இவர்கள் இறைவனது தண்டனையிலிருந்து தப்ப முடியாது.காலங்காலமாக ஆதத்தின் சந்ததிகள் இப்படி முன்னோர்களைப் பின்பற்றித்தான் வழிகேட்டில் சென்றுள்ளார்கள் என்பதற்கு குர்ஆனின் பல வசனங்கள் சான்றுகளாக இருக்கின்றன. உதாரணமாக:மேலும், "அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (அல்குர்ஆன் 2:170)இறை கொடுத்த நேர்வழியிலிருந்து வழி சறுகச் செய்யவே ஷைத்தான் முன்னோர்களைப் பின்பற்றும் மோகத்தை மனிதனுக்கு ஊட்டுகிறான். இதனால் மனிதனை வழிகெடுக்க ஷைத்தானுக்கு இரண்டு வித வாய்ப்புகள் அவனுக்கு கிடைக்கின்றன. மனிதர்கள் அடிப்படையில் முன்னோர்களின் வாழ்க்கையில் இடம் பெற்ற தவறான செயல்களையும் மார்க்கமாக எடுத்து நடந்து வழிதவறிச் செல்லச் செய்யும் சந்தர்ப்பம் ஒன்று. முன்னோர்களின் பெயரால் பொய்யானவைகளை இட்டுக்கட்டி அவற்றை எடுத்து நடப்பதன் மூலம் வழி தவறிச் செல்லச் செய்யும் வாய்ப்பு மற்றொன்று. எப்படியும் முன்னோர்களின் பெயரால் மனிதனை வழி தவறச் செய்து விடுகிறான் ஷைத்தான். இப்படி முன்னோர்களின் பெயரால் வழி தவறிச் சென்று அதன் காரணமாக நரகத்தை அடைந்து, அங்கு கடுமையான வேதனை அளிக்கப்படும் போது தான் அந்தத் தவறை உணர்ந்து கூச்சல் போடுகிறான். அதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்;நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள்."எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவருக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள்."எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களை பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக"(என்பர்) (அல்குர்ஆன் 33:66-68)இந்த அவர்களின் கதறல் அவர்களுக்குப் பலன் அளிக்காது. நரகை விட்டும் தப்ப வேண்டுமென்றால் இவ்வுலகிலேயே முன்னோர்களைப் பின்பற்றுவது தவறு என்று உணர்ந்து, அதை விட்டும் விலகி அல்லாஹ்வின் நேர்வழியான அல்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் விளங்கிப் பின்பற்ற முன்வரவேண்டும்.
..............................................................................................................................................................................

4 ஜனவரி, 2010

ஹலரத் பிலால்(ரலி):

இவர்களின் இயற்பெயர் அபூஅப்தில்லாஹ் என்பதாகும் இவருடைய தந்தையின் பெயர் ரபாஹூல் ஹபஷீ என்பது,. தாயார் பெயர் ஹம்மாமா.இவர்கள் இருவரும் அபிஸீனிய நாட்டில் யுத்தக் கைதிகளாக பிடிக்கப்பட்டு. பின்பு இருவரும் அடிமையாக்கப்பட்டு, சந்தையில் விற்க்கப்பட்டார்கள். இவர்களின் மகனார் தாம் பிலால் இவர்கள் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர் உமய்யா பின் கலப் என்பவனிடத்தில் அடிமையாக இருந்தார். இவர் இஸ்லாத்தைத் தழுவி விட்டார் என்ற செய்தி எஜமான் உமைய்யாவிற்குத் தெரிந்ததும் இவரைக் கடுமையாகக் சுடும் மனலில் படுக்க வைத்து கழுத்தில் கயிற்றினைக் கட்டி சிறுவர்கள் கையில் கொடுத்து வீதி வீதியாக இழுத்துவரச் செய்வான் அப்போது கயிற்றின் அழுத்தத்தால் கழுத்திலிருந்து இரத்தம் கட்டிக் கட்டியாக உறைந்துவிடும் அவரது உடலை ஒட்டகத்தின் பச்சைத் தோல் கொண்டு சுற்றி வெயிலில் நிற்க வைத்து விடுவார்கள். சூரியன் உச்சிக்கு ஏற ஏற அவர்களின் உடம்பின் மீது சுற்றப்பட்ட தோல் நன்கு காய்ந்து சுண்டி அவ்வடிமையின் உடலைக் கவ்வும் அடிமை இருக்கத்தில் மாட்டி புழுவாகத் துடிப்பதைப் பார்த்து குறைஷியர் சிரித்து மகிழ்வர்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால் அவரைப் பாலை மனலில் படுக்க வைத்து பளுவான கல்லைத்தூக்கி நெஞ்சில் வைத்து 'பிலாலே, ஒன்று நீ இப்படியே சாகவேண்டும் இல்லை முஹம்மதைவிட்டு விலகி லாத் உஸ்ஸா(சிலை) என நாங்கள் வணங்கும் தெய்வங்களை வணங்க வேண்டும் இரண்டில் ஒன்று செய்யாமல் உன்னன விடமாட்டேன் இல்லையெனில் இந்த வேதனையிலேயே இப்படியே சாகவேண்டியது தான் எனச் சொல்லிக் கொண்டே அடிப்பான் அப்போதும் அவருடைய புனித வாய் 'அஹ்துன்' 'அஹ்துன்' (ஒருவன் ஒருவன்) என்றே உச்சரித்துக் கொண்டிருக்கும் இன்கொடுமையைப் பல முறை கண்ட ஹலரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் ஹலரத் பிலாலை உமய்யாவிடமிருந்து விலைக்கு வாங்கி அடிமை விலங்கினை அகற்றி எறிந்தார்கள்.

ஹலரத் அபூபக்கர்(ரலி):

இஸ்லாத்தை மக்களிடத்தில் பரவச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினால், "நான் கஃபாவிற்குச் சென்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்யப் போகிறேன்" என்று பெருமானாரிடம் அபூபக்கர்(ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அதற்குரிய காலம் வரும் சற்றுப் பொறுத்திருங்கள் எனப் பெருமானார் அவர்கள் பதிலுரைத்தார்கள். ஆனால் இஸ்லாத்தின் மீதிருந்த பற்றுதலால் முஸ்லிம்கள் அனைவரையும் அழைத்துச் சென்று கஃபாவில் தம் பிரசங்கத்தைத் துவக்கினார்கள். இதைப் பார்த்த குறைஷியர் கடுங்கோபம் அடைந்து அனைவரும் ஒன்று சேர்ந்து அபூபக்கர்(ரலி) அவர்களை தாக்கினார்கள்.அவர்கள் உணர்விழிந்து கீழே விழுந்தும் கூட விடாது தாடியின் ஒரு பகுதியைப் பிய்த்து விட்டார்கள். இந்நிலையிலிருந்து மீண்டும் சுயநினைவிற்கு வந்ததும், அவர்கள் நாவிலிருந்து வந்த முதல் வாக்கியம் "முஹம்மது நலமாக இருக்கிறார்களா?" என்பது தான்.

அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு இயற்கையிலேயே இனிமையான குரலை இறைவன் தந்திருந்தான். இவர்களுடைய திண்ணையிலிருந்து திருக்குர் ஆனை ஒதும் போது அக்கம் பக்கத்திலுள்ளவர்களும், அவ்வழியே செல்பவர்களும் இவர்களின் இனிய குரலைக் கேட்டு மெய்மறந்து நின்று விடுவார்கள். இதைப் பார்த்த குறைஷியர்கள் ஆத்திரமடைந்து பல தொந்தரவுகளைத் தந்தார்கள்., எனவே ஹலரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் மக்காவை விட்டு அபிஸீனியாவிற்கு சொல்லத் தாயாரானார்கள். அவர்களை வழியிலே கண்ட அபூதுஜானா என்ற தலைவர் அவர்களுடைய பயனத்தைத் தடுத்து நிறுத்தி அவர்கள் குர் ஆனை மெளனமாக ஓதிக் கொள்ளஏற்பாடு செய்தார். சில நாட்கள் இவ்வாறு கழிந்தன பின்னர் தமக்கு என்ன நேர்ந்தாலும் சரி என்ற மீண்டும் உரத்தக் குரலில் எதிரிகளைப் பார்த்து மனம் உருகும் வண்ணம் ஓதலானார்கள்.

3 ஜனவரி, 2010

முஸ்லிம்களை துன்புறுத்துதல்...

முஸ்லிம்கள் ஏன் துன்புறுத்தப்பட்டார்கள்?

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புரச்சாரத்தைக் கேட்டு மக்கள் மனவந்து தாமாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க முற்பட்டார்கள் இவர்களின் பெரும்பாலோர் ஏழைகளாகவும் குறைஷிக் காபிர்களான செல்வந்தர்களிடம் அடிமைகளாகவும் இருந்தார்கள். இதன் காரணமாகக் குறைஷி மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அவர்களுக்கு சகிக்க முடியாத அளவிற்கு துன்பத்தைக் கொடுத்தார்கள். இத்தோடல்லாமல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கும் தாங்க முடியாத அளவிற்குத் துன்பத்தைக் தந்தார்கள்.

குறைஷிக் காபிர்களால் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்கள் யார் யார்?

குறைஷிக் காபிர்களால் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஏராளம் இருந்தாலும் அவர்களில் குறிப்பிடத் தகுந்த ஆண். பெண் இருபாலார்களிலும் ஒரு சிலரை மட்டும் காண்போம்.. (தொடரும்)

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கொலை செய்வதற்கு அபூஜஹில் என்ன சூழ்ச்சி செய்தான்?
இஸ்லாத்தின் மீது, இஸ்லாத்தில் இனைந்த முஸ்லிம்கள் மீதும், இஸ்லாமியக் கொள்கைகளை முறைப்படி மக்களுக்கு போதித்துவந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் வெறுப்படைந்த அபூஜஹில் எவ்விதத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கொலை செய்து விட்டால் இஸ்லாம் மென்மேலும் பரவுவதைத் தடுத்து விடலாம் எனக்கருதினான். இதற்காக அவன் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வருகையை எதிர்ப்பார்த்துப் பெரிய பாராங்கல்லினைத் தன் அருகாமையில் வைத்துக்கொண்டு கஃபத்துல்லாஹ்வின் வாசலில் ஒரு புறத்தில் மறைவாக ஒளிந்திடுந்தான். இவனுடைய மற்ற குறைஷி நண்பர்களெல்லாம் சற்று தூரத்திற்கு அருகே கூட்டமாக என்ன நடக்கப்போகிறதென எதிர் பார்த்த வண்ணமாகக் காத்திருந்தார்கள்.
இந்நிலையறியாத பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வழ்க்கம் போல கஃபத்துல்லாஹ்விற்கு வந்து இறைவணக்கத்தில் ஈடுபலானார்கள். இதை எதிர்பார்த்திருந்த அபூஜஹில் தன்னால்தூக்க முடியாத அப்பாறாங்கல்லைத் தன் தலைக்குமேல் உயர்த்தி பெருமானார் இருக்கும் இடத்தை நோக்கி சில அடிகள் தான் முன்னே எடுத்துவைத்தான் அதற்குள்ளாகத் தன் கையிலிருந்த கல்லை கீழே போட்டு விட்டு தன்னை அறியாத நடுக்கத்துடனும் பதற்றத்துடனும் தன் சக்தியனைத்தையும் இழ்ந்தவனாக வேகமாகத் தன்னை எதிர்பார்த்திருந்த குறைஷி நண்பர்களிடம் ஓடினான்.இவனைக் கண்ட நண்பர்கள் இவனது பதற்ற நிலையைப்பார்த்து, ஆவேசத்துடன் என்ன நடந்தது? என அபூஜஹிலிடம் கேட்டார்கள்,. அதற்கு அபூஜஹில் தன்னிடமிருந்த அச்சம் நீங்கியப்பின், " நான் முஹம்மதைக் கொன்று விடலாமென்று நான்கு., ஐந்து அடிகள் தான் அவரை எதிர் நோக்கி எடுத்துவைத்திருப்பேன் அதற்குள்ளாக என் எதிரில் என்னை நோக்கி பயங்கர உருவத்துடனும் கொடூரமான பார்வையுடனும் கூடிய ஒர் ஆண் ஒட்டகம் வருவது கண்டு நான் பயந்து கல்லைக் கீழே போட்டுவிட்டு தங்களிடம் ஓடி வந்தேன்," எனக் கூறினான்.
இதனைக்கேட்டு குறைஷியர்கள் அனைவரும் தம்முடைய செய்ல்கள் பலிக்கவில்லையென வெட்கமும், அச்சமும் அடைந்தவர்களாகத் திரும்பினார்கள். இவ்வாறு இறைவனின் அருக்கொடையால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறைஷியர்களின் இன்னல்களிலிந்தும், கொலைத் திட்டங்களிலிருந்தும் காப்பாற்றப்பட்டார்கள்.
உம்முஜமீல் பெருமானாரைக் கொடுமை செய்தாளா?
ஆம் ! மிக அதிகமாகச் கொடுமை செய்தாள். பெருமானார் அவர்கள் இறை வணக்கத்திற்காக காஃபாவிற்குச் செல்வார்கள் அப்போழுது அவர்கள் நடந்து செல்லும் வழிகளில் இரவோடு இரவாக பள்ளங்களைத் தோண்டி அவற்றின் மீது முட்களையும் ஈச்ச மரத்தின் இலைகளையும் போட்டு மூடி விடுவாள். காரணம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகாலைத் தொழுகைக்காக கஃபாவிற்கு வரும் போது இருள் வேளையில் இந்தக் குழிகளில் விழுந்து உடலில் சேதம் ஏற்பட்டு விட்டால், இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதிலிருந்து விலகிக்கொள்வார் என எண்ணினாள்.
ஒரு நாள் குறைஷியர் கஃபாவிற்கு முன்பு கூட்டமாக நின்று கொண்டிகுந்தனை. அந்த சமயத்தில் தற்செயலாக பெருமானார் அவர்களும் அங்கு சென்று கொண்டிகுந்தார்கள். குறைஷிகளிலே ஒருவன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பார்த்து "இதோ போகின்றானே இம்மனிதனைப் போன்று எம்மனிதனும் எங்களுக்கும்., நாங்கள் வண்ங்குகின்ற தெய்வங்களுக்கும் தொந்தரவு கொடுத்தது கிடையாது" எனச் சொன்னான். இன்னொருவன் "நீர் தானா நாங்கள் உயர்வாக மதிக்கப்போற்றி புகழ்த்து வணங்குகின்ற தெய்வங்களைப் பழித்துக் கூறுபவர்? " என்றான் இதைக் கேட்ட பெருமானார் அவர்கள் சிறிதும் அச்சமின்றி ஆம்! நானே தான் என்று சொல்லி வாயை மூடுவதற்குள் மற்றொருவன் (உக்பா பின் அபீமுயீத் என்பவன்) ஓடிவந்து தோள் மீது கிடந்த துணியை எடுத்து, பெருமானாரின் கழுத்திலே போட்டு முறுக்கிக் கீழே தள்ளி விட்டான். மேலும் தன் பலத்தால் முறுக்கிக் கொண்டேயிருந்தான். முறுக்கு ஏற ஏற பெருமானார் அவர்களுக்கு மூச்சுதிணற ஆரம்பித்தது. இதைக் கண்ட குறைஷியர் கைகொட்டிச் சிரித்தார்களே தவிர பெருமானாருக்கு உதவிசெய்ய எவரும் முன்வரவில்லை. இந்த நேரத்தில் இறைவனின் மாபெரும் கிருபையால் நபியவர்களின் அருமைத் தோழரான அபூபக்கர்(ரலி) அங்கு வந்தார்கள். குறைஷியரின் பிடியிலிருந்து கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பார்த்து, கண்கலங்கியவர்களாக, குறைஷியரே! இறைவன் இறைவன் என்ற உண்மையை சொல்வதற்காகவா, இந்த மனிதரைக் கொலை செய்யப் போகிறீர்கள்? என்று சொன்னவர்களாக ஆவேசத்துடன் கூட்டத்தினுள் புகுந்து, பெருமானாரை அவர்கள் பிடியிலிருந்து விடுவித்தார்கள். ஆனால் எவ்வளவு இன்னல்களைக் குறைஷியர்கள் தந்தாலும் கஃபாவிற்க்குச் சென்று வணங்குவதை மட்டும் பெருமானார் அவர்கள் நிறுத்தவே இல்லை.
ஒரு முறை பெருமானார் கஃஃபாவிற்கு அருகாமையில் தொழுது கொண்டிருந்தார்கள். குறைஷியர்கள் மற்றொருப் பக்கமாக கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒருவர் தொழுதுக் கொண்டிருந்த நாயகம் அவர்களைக் காட்டி, " அதோ அங்கு அமர்ந்திருக்கும் பகட்டுக்காரரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா, அவர் குனிந்து வணங்கி கொண்டிருக்கும்போது, ஒட்டகத்தின் சானம், குடல், உதப்பி போன்றவற்றை எடுத்து வந்து, அவருடைய பிடரியில் வைப்பதற்கு தைரியம் யாருக்கேனும் உண்டா?" எனக் கேட்டான்.
இதைக் கேட்டவுடன் அங்கு இருந்தவர்களில் ஒருவன் நாற்றமடிக்கின்ற குடலையும். சானத்துடன் கூடிய உதப்பியையும் பெருமானார் அவர்கள் ஸுஜூது செய்து கொண்டிருக்கும் பொழுது, இரு தோள்களுக்கு மத்தியில் கழுத்தில் அவர்கள் எழுந்திகுக்க முடியாதபடி வைத்து விட்டான். பெருமானார் அவர்களுக்கு தலையைத் தூக்க முடியாது போயிற்று. குறைஷியரோ ஏளனமாகப் பேசிக் கைக்கொட்டி சிரித்தாட்கள். இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் பாத்திமா(ரலி) அவர்களிடத்துல் போய்ச் சொன்னவுடன்,. சிறுமியாக இருந்த அவர்கள் ஓடோடி வந்து, அவை அனைத்தையும் எடுத்து சுத்தம் செய்து தந்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.
இத்தகைய கொடிய இன்னல்களை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு தந்ததோடல்லாமல், குறைஷி இனத்தலைவர்களில் ஒருவனான அபூஜஹில், அவர்களைக் கொலை செய்யவும் திட்டமிட்டிருந்தான்.
உம்மு ஜமீல் என்பவள் யார்?
பெருமானாரின் பெரிய தந்தையான அபூலஹபின் மனைவி தான் உம்முஜமீல் என்பவள்.........

பூமான் நபியின் புனித வாழ்க்கை

முஸ்லிம்கள் துன்புறுத்தப்படல்.
பெருமைக்குரிய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம். அவர்கள் இறைவனின் கட்டளைப்படி மக்களிடத்தில் இஸ்லாத்தைப்பற்றி அமைதியாக எடுத்துரைத்து வந்தார்கள். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு பேர்தான் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும், அல்லாஹ்வின் உதவியாலும் பெருமானாரின் பெருமுயற்சியாலும் மக்கள் இஸ்லாத்தில் இணையலானார்கள். இதைக் கண்ட குறைஷியர் ஆத்திரம் அடைந்து, எந்த விதத்திலும் பெருமானாரின் இஸ்லாமிய பிரசாரத்தைத் தடை செய்துவிட வேண்டும். அவர்களைப் பின்பற்றி எந்த மக்களும் செயல்படக் கூடாது எனத் தீர்மானித்து அவர்களுக்கு பல இன்னல்கள் தந்ததோடல்லாமல் கொலை செய்யவும் திட்டமிட்டனர்.
பெருமானார் அவர்கள் குனிந்த் தலை நிமிரா வண்ணம் வீதி வழியாக நடந்து செல்வார்கள். மக்கள் கூட்டம் நெருக்கமாக இருக்கும் நாற்சந்தியில் மாநபியின் போதனையை ஏற்றுக் கொள்ளாத குறைஷி வாலிபர்கள் நின்று கொண்டு, நாயகத்தை தகாத வார்த்தைகளைக் கூறி இழிவாகப் பேசுவார்கள். இவற்றைக் கேட்டும் பொறுமையே உருவான பூமான் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள், அமைதியாகச் செல்வார்கள். அப்போது அங்கு கூடி நிற்கும் வாலிபர்களில் ஒருவன், "இதோ பைத்தியக்காரன் போகிறான்" எனக் கேலி செய்வான். 'சூனியக்காரன்' என்று இன்னொறுவன் சொல்வான். மாயக்காரன் என மற்றொருவன் சொல்வான். சூனியக்காரருமல்ல, பைத்தியக்காரருமல்ல, இவருக்கு பிசாசு பிடித்திருக்கிறது எனப் பிறிதொருவன் சொல்வான். பிசாசு பிடித்திருக்கின்ற காரணத்தினால் மூளையில் கோளாறு ஏற்பட்டு, வாய்க்கு வந்தவாறெல்லாம் உளறித்திரிகிறார் எனச்சொல்வான். இப்பேச்சுக்கள் அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டே செல்வார்களே தவிர தன் வாயால் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேச மாட்டார்கள்.
இவ்வாறு பெருமானார் எங்கெங்கு செல்கிறார்களோ அங்கெல்லாம் வடைமாரி பொழிந்து கொண்டே அந்த இளைஞ்ர்கள் பிந்தொடர்ந்து செல்வார்கள். இவர்களோடல்லாமல் அம்ருப்னுல் ஆஸ் என்பார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது வசைக் கவிகளை எழுதி, அவர்கள் எங்கெங்கு செல்கிறார்களோ, அங்கெல்லாம் பாடிக் கொண்டே பின் தொடர்ந்து செல்வார். மக்கள் நிறைந்த சபைகளில் பெருமானார் அவர்கள், மக்களுக்கு நற்போதனை செய்யத் தம் பேச்சை ஆரம்பிக்கும் போது அவர்களுடைய பேச்சு மக்களின் செவிகளில் விழுந்துவிடாதவாரு 'ஒ' வென்று கூச்சல் போட்டுத் தடுத்து விடிவார்கள். இத்துடன் நிற்க்காமல் அவர்கள் நடந்து சொல்லும் போது குப்பைக்கூளங்களை அள்ளி அவர்களது தலையில் போடுவார்கள்.எதிர்ப்புறத்தில் நின்று கூழாங்கற்களையும் மனலையும் வாரி வாரி கண்களை நோக்கிவீசி உடலெல்லாம் புழுதியடையச் செய்வார்கள். இதைவிடப் பெரும் கொடுமை என்னவென்றால், சிறுவர்களைத்தூண்டி விட்டுப் பெருமானார் மீது கலலெரியச் சொல்வார்கள் கல்லடிபட்டு முகத்திலும் இரத்தம் கசிந்தவன்னமாக இருக்கும். அதைக் துடைத்தாவாறு பொறுமைக் கடலாம் பூமான் நபி போய்க் கொண்டேயிருப்பார்கள்.