2 ஜூன், 2011

பவுர்ணமி இரவில் நடந்த நகைசுவை உரையாடல் (ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா)

ஒரு நாள் பவுர்ணமி இரவு மதினாவின் மணல் வெளியில் கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் ஆருயிர் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் தனிமையில் அமர்ந்து சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
சந்திரன் தன அழகையெல்லாம் பூமியின் மீது கொட்டிக் கொண்டிருந்தது.
வானத்தில் கோடி கணக்கான விண்மீன்கள் பளிச் பளிச்சென தன அழகு முகம் காடி கொண்டிருந்தன ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு திடீர்ரென ஒரு சந்தேகம் தோன்றியது. தனது அருமை கணவர் கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் கேட்டது தெளிவு பெற இது தன தக்க தருணம் என்று எண்ணியவர்களாக. சந்தேகத்தை கேட்க துவங்கினார்கள். அல்லாவின் தூதரே! வனத்தில் என்ன முடியாத அளவுக்கு இவ்வளவு நட்ச்சத்திரங்கள் உள்ளனவே. இந்த நட்ச்சத்திரங்கள் அளவுக்கு உலகில் யார் அமல் செய்து இருப்பார்கள்? சொல்லுங்கள் பார்ப்போம் என்று நகைசுவையாய் கேட்டார்கள்.
(தனது தந்தை அபூபக்கர் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் இவ்வளவு நன்மைகளை செய்து இருப்பார்கள் நிச்சயம் அவர்களின் பெயரைத்தான் கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொல்வார்கள் என்ற மகிழ்ச்சியில் இப்படி கேட்டார்கள்.)
தனது அன்பு மனைவி உள்ளரங்கத்தைப் புரிந்து கொண்ட கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். குறும்பு செய்யத் துவங்கினார்கள்.ஆயஷவே! இந்த வனத்தில் மீண்டும் நட்ச்சத்திரங்கள் அளவுக்கு உலகில் ஒருவர் நன்மை செய்து இருப்பார் என்றால் அது உமர் ரலி அல்லாஹு அன்ஹு அவர்கள் தன என்று குறும்புடன் சொன்னார்கள்.
இதைக் கேட்ட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்ப்பட்டது, அவர்களும் தனக்கே உரிய சொல்ல கோபத்துடன் அப்படியானால் எனது தந்தையின் நன்மைகல் எங்கே போயின? என்று கேட்டார்கள் அப்பாவியாக.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் நினைப்புக்கு மாற்றமாக சொன்னதால் அவர்களின் செல்ல கோபத்தைப் புரிந்து கொண்ட கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் புன்னகை பூத்தவர்களாக ஆயஷவே! இந்த வானத்தில் உள்ள விண்மீன்கள் அளவுக்கு உமர் ரலி அல்லாஹு அன்ஹு அவர்கள் நன்மைகள் செய்து இருப்பார்கள் என்றால்
உமர் ரலி அல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த எல்லா நன்மைகளும் அபூபக்கர் ரலி அல்லாஹு அன்ஹு அவர்களும் ஒரு நன்மைக்குச் சமமானதே என்று சொன்னார்கள்.
இதை கேட்ட ஆயிஷா ரலி அல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு முகம் சிரிப்பால் மலர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக