கேள்வி : அப்துல் முத்தலிபின் பிரார்த்தனை யாது?
பதில் : தன் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு மக்காவிற்கு வந்த அப்துல் முத்தலிபு அப்ரஹாவிடம் நடந்த உரையாடலைப் பற்றிச் சொல்லி விட்டு உங்களுடைய பொருளையும் குடும்பத்தார்களையும் அப்புறப்படுத்தி மக்காவிற்கு வெளியில் சென்று மலைகளிலும் கண வாய்களிலும் மறைந்து கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டார்.
பின்பு நேராக கஃபாவிற்கு வந்து அதன் வளையத்தைப் பிடித்துப் கொண்டு இறைவனிடம் பிரார்த்திதார் அப்பொழுது நூதனமான பல பறவைகள் வானில் பறந்தன. இதற்கு முன்பு இவர் அது மாதிரிப் பறவைகளைப் பார்த்ததே இல்லை.
இந்தப் பறவைகள் நஜ்தையோ திஹாமானவயோ சேர்ந்தவையாகச் தெரியவில்லை இறைவனின் மீது ஆனையாகச் சொல்கிறேன் இந்தப் பறவைகளுக்கு ஏதோ வேலை இருக்கின்றது என்று மலைமீது ஏறி இருந்து கொண்டு அப்ரஹாவின் படை வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்துல் முத்தலிபின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட இறைவன் சிறிது நேரத்திற்குள்ளாக கரியமேனியும் மஞ்சள் நிற மூக்கும் உள்ள பறவைக் கூட்டங்களை அனுப்பினான். இவற்றின் கழுத்துக்கள் பச்சை நிறத்தில் இருந்தன. இவை ஒவ்வொன்றின் வாயில் ஒரு கல்லும் இரு கால்களிலும் இரண்டு கற்களுக் இருந்தன இந்தக் கற்கள் கடலையைவிடச் சிறியவைகளாகவும் பருப்பபைவிடச் சற்றுப் பெரியவையாகவும் இருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக