13 மார்ச், 2010

கேள்வி : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சுவர்க்கவாதிகள் என்று அறிவித்து பத்துப் பேர்களில் ஒருவரான ஹலரத் அப்துர் ரஹ்மானிப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் அருமைத் தாயார்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறப்பதற்கு ஆமினா நாச்சியாருக்கு உதவி செய்தார்கள்.
கேள்வி : பெருமானார் தாய் வயிற்றிலிருந்து வரும்பொழுது (பிறக்கும் பொழுது) எந்தக் கோலத்தில் வந்தார்கள்?
பதில் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தாய் வயிற்றிலிருந்து இப்புவிக்கு வந்த பொழுது விண்னை நோக்கியவர்களாக தரையில் தங்களது கையை வைத்துப் பிறந்தார்கள். மேலும் அவர்கள் தாயார் கர்ப்பவதியாக இருக்கும் பொழுது ஏனைய கர்ப்பினிகள் பிரசவ சமயத்தில் அடையும் வேதனைகளையோ சிரமங்களையோ தாம் அடைந்ததில்லை என்று ஆமினா அம்மாள் அவர்கள் கூறுகிறார்கள்.
கேள்வி : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்த செய்தியை உறவினர்களுக்கும் மக்கத்து மக்களுக்கும் தெரிவித்தது யார்?
பதில் : பெருமானாரின் சிறிய தந்தையான அபூலஹபின் அடிமைப் பென்னான துவைபா என்பவரால் முதன் முதலாக இச்செய்தி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பாட்டனாரான அப்துல் முத்தலுபுக்குத் தெரிவிக்கப்பட்டது.
கேள்வி : அப்பொழுது அப்துல் முத்தலிபு அவர்கள் எங்கிருந்தார்கள்?
பதில் : அப்துல் முத்தலிபு கஃபாவை தவாபு செய்து கொண்டிருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக