"சந்தூக்பெட்டி வந்த வரலாறும் பாத்திமா(ரலி) அவர்களும்"
கருனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களின் காதில் சொன்ன இரகசியம் முடியும் தருவாயில் வந்து நின்றது சுவனப் பேரரசி கண்மணி பாத்திமா(ரலி) அவர்கள் உடல் நிலை சரி இல்லாமல் இருந்தார்கள் அவர்களைப் பார்க்க மதினத்து மக்கள் வந்து போனார்கள்.
பாத்திமா(ரலி) அவர்களின் நோயை பற்றி விசாரிக்க கலீபா அபூபக்கர்(ரலி) அவர்கள் வீட்டிற்கு வந்து நோய்பற்றியும் உடல்நிலைப் பற்றியும் விசாரித்து சென்றார்கள்.
ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களின் உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். பாத்திமா(ரலி) அவர்களைப் பார்த்து "அல்லாஹ்வின் தூதரின் அன்பு மகளார் அவர்களே! உங்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நேசித்தது போல வேறு எவரையும் நேசித்ததை நான் பார்க்கவில்லை? என்று பாராட்டிக் கூறி சென்றார்கள்.
இப்பொழுது பாத்திமா(ரலி)அவர்களுக்கு 29வயது பூர்த்தியாகியது அவர்களின் அருகில் இருந்து பணிவிடை செய்ய அவர்களின் மனைவி அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) அவர்கள் உடன் இருந்தார்கள். (அலி(ரலி) அவர்களின் சகோதரர் ஜாபர் ரலி அவர்கள்) ஜாபர்(ரலி) அவர்கள் மூத்தாப் போரில் ஷஹிதானார்கள். பிறகு அவர்களை அபூபக்கர்(ரலி) அவர்கள் மறுமணம் புரிந்தார்கள். இருவரும் மிகவும் நேசமாக பாசமாக இருப்பார்கள், மூத்தாப் போரில் ஜாபர்(ரலி) அவர்கள் ஷஹிதானார்கள். என்ற செய்தியை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மதினாவில் இருந்து எடுத்துச் சொன்ன போது பாத்திமா(ரலி) அவர்கள் சற்று கதறி அழுதார்கள். அப்போது அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) கண்ணீரும் கம்பளையுமாக கதறி கொண்டிருக்கும் போது அருகில் இருந்து ஆறுதல் சொன்னவ்ர்கள் பாத்திமா(ரலி) அவர்கள் தான் அப்போது பாத்திமா(ரலி) அவர்களின் அழுகையைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களுக்கும் ஆறுதல் சொன்னார்கள்.
இப்போது பாத்திமா(ரலி) அவர்களின் அருகில் இருக்கும் அவர்களை நோக்கி அஸ்மாவே! இப்பொழுது நான் இருக்கும் நிலைமையை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கவலையோடு சொன்னார்கள். அதாவது நான் இறந்தும் போகும் நிலையில் இருக்கிறேன் என்று சூசகமாக சொன்னார்கள். பிறகு பெண்களுக்கு (சந்தூக்) ஜனாஸாபெட்டி எப்படி இருக்க வேண்டும்? என்பது பற்றி இருவரும் பேசி கொண்டார்கள்.
பாத்திமா(ரலி) அஸ்மா இப்பொழுது இறந்தவர்களை எடுத்துச் செல்லும் முறை எனக்கு திருப்தியாக தோன்றவில்லை மைய்யத்தை கட்டிலில் வைத்து மேலே ஒரு துணியைப் போர்த்தி விடுகின்றனர் பெண்களும் கோஷா இல்லாத நிலை அதிலிருந்து மையத்தின் உடல் அமைப்பு தெளிவாக தெரிகிறது என்றார்கள் அதற்கு அஸ்மா(ரலி) அவர்கள் ஆம் என கூறி விட்டுஅருமை நபிகளின் புதல்வியே! நான் அபீஸீனியா நாட்டில் இருக்கும் போது ஜனாஸாவைப் பார்த்திருக்கிறேன் உங்களுக்கு விருப்பமானால் அது போலவே இப்பொழுது செய்து காட்டுகிறேன் என்றார்கள். இவர்கள் அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்து அதன்பின் மதினாவுக்கு இரண்டாவது முறையாக ஹிஜ்ரத் செய்தவர்கள் அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) அவர்கள் தமது முதலாம் கணவர் ஜஃபர் தய்யார்(ரலி) அவர்களுடன் அபீஸீனியாவில் சில காலம் இருந்தார்கள்.
பாத்திமா(ரலி) அவர்கள் செய்து காட்ட சொன்னார்கள். உடனே ஒரு கட்டிலைக் கொண்டு வர சொன்னார்கள் அதன் இரு பக்கத்திலும் கட்டுவதற்காக பேரிச்ச மரத்து பச்சை மட்டைகளை வெட்டி வரும்படி ஏவினார்கள். பிறகு அதை அமைத்து ஒவ்வொரு கிளை மட்டையின் இரண்டு நுனிகளையும் வளைத்து பாதி வட்ட வளைவைப் போலச் செய்தார்கள். இந்த இரண்டு நுனிகளையும் கட்டிலில் இரண்டு ஓரங்களோடு சேர்த்துக் கட்டினார்கள். பிறகு மேல் ஒரு துணியைப் போட்டு மூடிக் காட்டினார்கள். இந்த முறை நல்ல கோஷா முறையாக இருக்கும் மைய்யத்தை யாரும் பார்க்க முடியாது என்று கூறினார்கள். இந்த ஜனாஸா பெட்டியை பார்த்த பாத்திமா(ரலி) அவர்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை இது நன்றாக இருக்கிறது இந்த முறை அமைப்பு மிக மிக நல்லது இதனால் இறந்தவர் ஆணா?பெண்ணா? என்று யாரும் பார்க்க முடியாது என்று பூரித்துப் போனார்கள். இவ்வாறு தான் எனது ஜனாஸாவையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தங்களின் இறுதி ஆசையை அவர்களிடம் சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வபாத்தாகி ஆறு மாதங்களுக்குள் இன்றுதான் அதுவும் புதுமாதுரியான கோஷா முறையுடன் அமைந்த இந்த ஜனாஸா பெட்டியைப் பார்த்து சந்தோஷமாக இருந்தார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாத்திமா(ரலி) அவர்களின் நோயை பற்றி விசாரிக்க கலீபா அபூபக்கர்(ரலி) அவர்கள் வீட்டிற்கு வந்து நோய்பற்றியும் உடல்நிலைப் பற்றியும் விசாரித்து சென்றார்கள்.
ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களின் உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். பாத்திமா(ரலி) அவர்களைப் பார்த்து "அல்லாஹ்வின் தூதரின் அன்பு மகளார் அவர்களே! உங்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நேசித்தது போல வேறு எவரையும் நேசித்ததை நான் பார்க்கவில்லை? என்று பாராட்டிக் கூறி சென்றார்கள்.
இப்பொழுது பாத்திமா(ரலி)அவர்களுக்கு 29வயது பூர்த்தியாகியது அவர்களின் அருகில் இருந்து பணிவிடை செய்ய அவர்களின் மனைவி அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) அவர்கள் உடன் இருந்தார்கள். (அலி(ரலி) அவர்களின் சகோதரர் ஜாபர் ரலி அவர்கள்) ஜாபர்(ரலி) அவர்கள் மூத்தாப் போரில் ஷஹிதானார்கள். பிறகு அவர்களை அபூபக்கர்(ரலி) அவர்கள் மறுமணம் புரிந்தார்கள். இருவரும் மிகவும் நேசமாக பாசமாக இருப்பார்கள், மூத்தாப் போரில் ஜாபர்(ரலி) அவர்கள் ஷஹிதானார்கள். என்ற செய்தியை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மதினாவில் இருந்து எடுத்துச் சொன்ன போது பாத்திமா(ரலி) அவர்கள் சற்று கதறி அழுதார்கள். அப்போது அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) கண்ணீரும் கம்பளையுமாக கதறி கொண்டிருக்கும் போது அருகில் இருந்து ஆறுதல் சொன்னவ்ர்கள் பாத்திமா(ரலி) அவர்கள் தான் அப்போது பாத்திமா(ரலி) அவர்களின் அழுகையைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களுக்கும் ஆறுதல் சொன்னார்கள்.
இப்போது பாத்திமா(ரலி) அவர்களின் அருகில் இருக்கும் அவர்களை நோக்கி அஸ்மாவே! இப்பொழுது நான் இருக்கும் நிலைமையை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கவலையோடு சொன்னார்கள். அதாவது நான் இறந்தும் போகும் நிலையில் இருக்கிறேன் என்று சூசகமாக சொன்னார்கள். பிறகு பெண்களுக்கு (சந்தூக்) ஜனாஸாபெட்டி எப்படி இருக்க வேண்டும்? என்பது பற்றி இருவரும் பேசி கொண்டார்கள்.
பாத்திமா(ரலி) அஸ்மா இப்பொழுது இறந்தவர்களை எடுத்துச் செல்லும் முறை எனக்கு திருப்தியாக தோன்றவில்லை மைய்யத்தை கட்டிலில் வைத்து மேலே ஒரு துணியைப் போர்த்தி விடுகின்றனர் பெண்களும் கோஷா இல்லாத நிலை அதிலிருந்து மையத்தின் உடல் அமைப்பு தெளிவாக தெரிகிறது என்றார்கள் அதற்கு அஸ்மா(ரலி) அவர்கள் ஆம் என கூறி விட்டுஅருமை நபிகளின் புதல்வியே! நான் அபீஸீனியா நாட்டில் இருக்கும் போது ஜனாஸாவைப் பார்த்திருக்கிறேன் உங்களுக்கு விருப்பமானால் அது போலவே இப்பொழுது செய்து காட்டுகிறேன் என்றார்கள். இவர்கள் அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்து அதன்பின் மதினாவுக்கு இரண்டாவது முறையாக ஹிஜ்ரத் செய்தவர்கள் அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) அவர்கள் தமது முதலாம் கணவர் ஜஃபர் தய்யார்(ரலி) அவர்களுடன் அபீஸீனியாவில் சில காலம் இருந்தார்கள்.
பாத்திமா(ரலி) அவர்கள் செய்து காட்ட சொன்னார்கள். உடனே ஒரு கட்டிலைக் கொண்டு வர சொன்னார்கள் அதன் இரு பக்கத்திலும் கட்டுவதற்காக பேரிச்ச மரத்து பச்சை மட்டைகளை வெட்டி வரும்படி ஏவினார்கள். பிறகு அதை அமைத்து ஒவ்வொரு கிளை மட்டையின் இரண்டு நுனிகளையும் வளைத்து பாதி வட்ட வளைவைப் போலச் செய்தார்கள். இந்த இரண்டு நுனிகளையும் கட்டிலில் இரண்டு ஓரங்களோடு சேர்த்துக் கட்டினார்கள். பிறகு மேல் ஒரு துணியைப் போட்டு மூடிக் காட்டினார்கள். இந்த முறை நல்ல கோஷா முறையாக இருக்கும் மைய்யத்தை யாரும் பார்க்க முடியாது என்று கூறினார்கள். இந்த ஜனாஸா பெட்டியை பார்த்த பாத்திமா(ரலி) அவர்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை இது நன்றாக இருக்கிறது இந்த முறை அமைப்பு மிக மிக நல்லது இதனால் இறந்தவர் ஆணா?பெண்ணா? என்று யாரும் பார்க்க முடியாது என்று பூரித்துப் போனார்கள். இவ்வாறு தான் எனது ஜனாஸாவையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தங்களின் இறுதி ஆசையை அவர்களிடம் சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வபாத்தாகி ஆறு மாதங்களுக்குள் இன்றுதான் அதுவும் புதுமாதுரியான கோஷா முறையுடன் அமைந்த இந்த ஜனாஸா பெட்டியைப் பார்த்து சந்தோஷமாக இருந்தார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக