16 பிப்ரவரி, 2010

"வெட்கம் எங்கே?"
ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களுக்கு பணிவிடை செய்யும் சிறுவரை அழைத்துக் கொண்டு, தங்களின் அருமை மகளாரைக் கான அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். அன்னியர் ஒருவர் தமது தந்தையாருடன் தமது வீட்டுக்கு வருகிறார்கள் என்பதை அறிந்த பாத்திமா(ரலி) அவர்கள் உடலை நன்கு மூடிக் கொள்ள சரியான துணி இல்லாத நிலையில் இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஊழிய சிறுவனுடன் வீட்டிக்குள் நிழைத்தும் பாத்திமா(ரலி) அவர்கள் தங்களின் உடலை மூடிக் கொள்ள ரொம்ப சிரமப் பட்டார்கள் இதைக் கண்ட கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் எனதருமை மகளே! பயப்பட வேண்டாம் உன் வீட்டுற்கு வந்திருப்பவர் உமது தந்தையின் ஊழிய சிறுவன் தான் என்று ஆறுதல் கூறினார்கள். இதன் பின்பு தான் பாத்திமா(ரலி)அவர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக