13 பிப்ரவரி, 2010


பாத்திமா(ரலி) கண்டு பிடித்த இரகசியம்

கண்மனி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அருமை புதல்வி பாத்திமா(ரலி) அவர்கள் தனது அன்பு தாயைப் போல் தந்தைக்கு பேருதவி ஆற்றியுள்ளார்கள். தந்தையின் தினப் பணிகளில் பெரும்பாலும் பாத்துமா(ரலி)அவர்களின் பேருதவி பின்னனி இருக்கும். இதன் காரனமாக தந்தையின் பேரன்புக்குரியவர்களாக இருந்தார்கள்.
ஆனவே தந்தையாரின் அன்புக்கும் அரிய சேவைக்கும் பாத்திமா தான் தான். சுவனத்தில் நுழையும் முதல் பென்மனியாயிக்கும் என்று தன்மனதுக்குள் ஒரு துளி அளவு சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. இது பற்றி இன்ஷா அல்லாஹ் தனது தந்தையிடம் சமயம் பார்த்து சேட்டு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்று சந்தர்ப்பத்தை எத்ர் பார்த்துருந்தார்கள்.
ஒரு நாள் அருமை தந்தையிடம் தனியாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, இது தான்சரியான சந்தர்ப்பம் என நினைத்து கேட்டும் விட்டார்கள்.
மகளாரின் இந்த திடீர் கேள்வி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை திகைக்க வைத்து. பின்பு தந்து அருமை மகளின் உள்ளத்தை தெளிவு படுத்துவதர்க்காக உன்மையை இப்படி சொன்னார்கள்.
அருமை மகளே! நீ சுவனம் போவதற்கு முன் ஒரு விறகு வெட்டியின் மனைவி தான் முதலில் சுவனம் புகுவாள். அவள் வேறு எங்கும் இல்லல உமக்கு சமீபமாக தான் இருக்கிறாள். அதாவது உமது பக்கத்து வீட்டுக் காரிதான் என்றார்கள்.
பாத்திமா(ரலி) அவர்க்ளுக்கு தூக்கி வாரிப்போட்டது.இவ்வள்வு நாட்க்களாக உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்ததைரு சந்தேகம் இப்பொழுது தீர்ந்தது. என்ராலும் தேம்பி தேம்பி அழவாரம்பித்து விட்டார்கள். மகளின் நினன கண்டு கலங்கிய கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நீண்ட நேரம் சமாதானம் செய்து ஆறுதல் அளித்து பாத்திமாவே நீ கவலைப்படாதே! உன்னை விட சுவனம் நுழையும் அந்த பென்னுக்கு ஏதாவது இரு சிறப்பு இருக்கத்தான் செய்யும். எனவே அப்பெண்னை நீ அவசியம் சென்று பார்த்து விட்டு வா! அத்னால் உனக்கு ஆறுதல் உண்டாகும் என்று அனுமதியும் வழ்ங்கினார்கள்.
கவலையோடு வீடு சென்ற பாத்திமா(ரலி) அவர்கள் அடுத்த நாளே! கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்ன விறகு வெட்டியின் வீட்டுக்கதவை தட்டினார்கள்.
யாரது ? உள்ளிருந்து ஒரு பென் குரல். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மகளார் பாத்திமா ஆவேன் என்றார்கள்,
அந்த பென் குரல் மீண்டும் ஒலித்தது மன்னிக்கவும் இன்று உங்களை உள்ளே எடுத்துக் கொள்ள எனக்கு அனுமதி இல்லை. ஒரு வேளை நாளை இதே நேரத்துக்கு வருவதானால் நான் என்கணவரிடத்தில் அனுமதி வாங்கி வைக்கிரேன். அப்போழுது தாங்கள் தாராளமாக வரலாம் என்று சொன்னார்கள். அடுத்த நாள் கிட்டத்தட்ட அதே நேரம் சுவனப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்கள் வேண்டுமென்றே குழ்ந்தை ஹஸன்(ரலி) யையும் உடன் அழைத்துக் கொண்டு அங்குச் சென்று கதவைத் தட்டினார்கள்.

விறகு வெட்டியின் மனைவி ஆனந்தம் பொங்க கதவைத் திறந்தார். "கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் குடும்பத்தார் எத்தனன பேர் வந்தாலும் எவர் வந்தாலும் கதவைத் திற என்று என் கணவர் சொல்லி விட்டார். தாங்கள் வருகை எங்கள் இல்லத்திற்கு ஒரு மகத்துவம்" என்று வரவேற்று அமர வைத்தார்.

பாத்திமா(ரலி) அவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கியது அப்பெண்ணிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பென்னை பாத்திமா(ரலி) அவர்களுக்கு ரொம்ப பிடித்து விட்டது.

என்னை விட முதலில் இப்பென் சுவனம் நுழையும் என்றால் அவரிடம் ஏதாவது ஒரு இரகசியம் இருக்கத் தானே வேண்டும். அதைக் கண்டு பிடித்து விட்டுத்தான் வீடு போக வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வீட்டை சுற்றிப் பார்த்தார்கள். ஒன்றும் புலப்பட வில்லல.

கடைசியாக சமையல் பகுதிக்குச் சென்றார்கள். அங்கு ஒரு அதிசய காட்சி கண்டு வியந்து போய் நின்றார்கள் அப்படி அதிசயிக்கும் வண்ணம் என்ன இருந்தது? ஆறு பொருட்கள் அழகான முறையில் வைக்கப் பட்டிருந்தது.



1. ஒரு அண்டா சுடு தண்ணீர்

2. மூடி வைக்கப்பட்ட உனவு

3. பெரிய கம்பு ஒன்று

4. குவியலாக பொடி கற்கள்

5. சிறிய கிண்ணம் ஒன்று

6. சிறிய ஊசி ஒன்று



மேற்கண்டப் பொருட்களை எல்லாம் பார்த்த பாத்திமா(ரலி) அவர்கள். அப்பென்மனியிடம் இவைகளின் நோக்கம் என்ன என்று விசாரித்தார்கள்.

அல்லாஹிவின் தூதரின் அருமை மகளே! தாங்கள் கேட்டு விட்டதற்காக இதற்கான காரணத்தை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.

விறகு வெட்ட சென்றுள்ள எனது அன்புக் கனவர். விறகுகளை வெட்டி சுமந்து கடைதெருவில் விற்று பின்பு அசதியோடு மாலையில் வீட்டுக்கு வருவார் உடனே இந்த அண்டா தன்னீரில் குளிப்பார். பின்பு சாப்பிட அமருவார். உனவில் அவருக்கு குறை இருந்து முழு திருப்தி இல்லா விட்டால் இந்த கம்பை எடுத்து என்னை அடிப்பார்.

அதற்கு நான் தப்பினால் குவியலாக இருக்கும் பொடிக் கற்களை எடுத்து என்மீது விசுவார். பின்பு உனவு தட்டில் இருந்த உனவு தவறி விழிந்த உணவுகளை இந்த ஊசியால் குத்தி எடுத்து கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரில் நனைத்து சுத்தம் செய்து சாப்பிடுவார். இது தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி என்று விளக்கமளித்தார் விறகு வெட்டியின் மனைவி.

பொறுமையாக அனைத்து விஷயங்களையும் கேட்ட பாத்துமா(ரலி) அவர்களுக்கு உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்தப் பென்னிடம் இருந்த விஷேசமிக்க நற்குணங்கள் சுவனப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்களுக்கு முழுதிருப்தியளித்தது. கணவருக்கு கட்டுப்பட்டு கணவனின் மனம் அறிந்து செயல்பட்டு பணி விடை செய்து கணவரால் ஏற்படும் அத்தனனசோதனனகளையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டதால் தான் இப்பென்மனி முதலில் சுவனம் புகும் பாக்கியத்தை பெற்றுள்ளாள். என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டார்கள்.

மகிழ்ச்சியோடு அப்பென்மனியிடமிருந்து விடை பெற்று வீட்டிற்கு சென்றார்கள்.

உடனே அருமை தந்தை கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களைப் பார்க்கச் சென்றார்கள்.

அன்பு மகளை வரவேற்று விறகு வெட்டியின் மனைவியை சந்தித்த விபரங்களைப் பற்றி விசாரித்தார்கள்.

நடந்த அனைத்து நிகழ்வுகளையும் ஒன்று விடாமல் பாத்துமா(ரலி) அவர்கள் சந்தோஷமாக சொன்னார்கள்.

மகளிடம் அத்தனை விஷயங்களையும் கேட்டறிந்த பின் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இப்படி சொன்னார்கள்.

மகளே! நாளை மறுமையில் நீ சுவனம் செல்ல வரும் போது ஒரு அறிவிப்பு வெளியாகும். மஹ்ஷர் பெருவெளியில் இருக்கும் அனைவரும் உங்களுடைய பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மகள் பாத்திமா(ரலி) அவர்கள் சுவனம் செல்லப்போகிறார்கள் என்று அப்போது நீ ஒரு குதிரையின் மீது சவாரி செய்த வண்ணம் சுவனத்தில் நுழைகின்ற போது உனது குதிரைக் கடி வாளத்தின் பிடியை விறகு வெட்டியின் மனனவி பிடித்துக் கொண்டு செல்லுவாள் ஆகவே அவள் தான் முதலில் சுவர்க்கம் புகுவாள்" என்று நகைச்சுவையாக சொன்னார்கள்.

கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் குறும்புப் பேச்சினுள்ளும் எவ்வள்வு பெரிய உத்தமி காட்டப்பட்டாள் என்பதை நினைத்து நினைத்து பூரித்தார்கள். ஜென்னத்தே காத்தூன் பாத்திமா(ரலி) சுவனத்தின் முதற் பெண்மணி.

1 கருத்து:

  1. மேகராஜ்பயணத்தின் போதே சொரக்கம் நரகம் இரண்டிலும் ஆண்களும் பெண்களும் இருப்பதாக முகம்மது பதிவு செய்துள்ளாா்.சொர்க்கத்திற்குள் போகும் முதல் பெண்மணி பாத்திமா என்பது கட்டுக் கதை. இயேசுவின் அம்மா மரியம் என்ன நரகத்திலா இருக்கின்றாா் ? இந்த உலகில் வேறு நல்ல ஆத்மாக்கள் பாத்திமாவுக்கு முன் பிறக்கவில்லையா ? அண்ட புளுகு.

    பதிலளிநீக்கு