3 அக்டோபர், 2012


அண்ணலாகிய அழகிய முஹியத்தீன், ஆராகும் அன்புடன் சுல்தான் முஹியத்தீன், புண்ணிய மாகியே பீரே முஹியத்தீன், பிரிசமாகிய வெற்றி முஹியத்தீன், மன்னராம் அப்துல்காதிரே முஹியத்தீன், வரிசை பெற்றிடும் பாவா முஹியத்தீன், முன்னாலே! என்பவே! ஆதி இறைவனே துணை செய்வாயே! அனைத்தையும் படைத்து ஆதி ஹக்கனே! அழிவே இல்லா மெய்பொருளே! எந்தன் மனத்திரு கருமம் எல்லாம் அதியவா! கிருபை தந்து நாம் நினைத்திடும் காரியம் எல்லாம் ஆதியே கிருபை செய்வாய், உள்ளத்தில் அடியார் போற்ற உதவி தந்தருள்வாய். அலை கடல் புவி வானம் மண்டபம் ஒளியுள்ளவனே! நிலை திசை அறியும் கோமான் நெடியவா உமை நான் போற்ற பலவிதமான துன்பம் மிடுமை துயரம் எல்லாம் தொலை வழி தூரம் ஆக்கி முஹியத்தீனின் அடிமை நான் உகந்து கேட்கும் அனைத்தையும் தந்தருள்வாய் ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்.