பெருமானாருக்குப் பெயர் சூட்டுதல்
கேள்வி : அரேபியரின் வழக்கம் என்ன?
பதில் : அரபு நாட்டிலே அரேபியர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் ஏழாம் நாள் இரு கிடாய் அறுத்து அகீக்கா கொடுப்பது வழக்கமாக இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அருமை பாட்டனார் இரு நல்ல கொழுத்த கிடாய் அறுத்து அகீக்கா கொடுத்ததோடல்லாமல். மக்காவிலுள்ள மக்களுக்கும் தம் உறவினர்கள் அனைவருக்கும் மாபெரும் விருந்து ஒன்றினை நடத்தினார்கள்.
விருந்து...
பேரக் குழந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விருந்தின் காரணமாக மக்கா நகரில் மகிழ்ச்சியும் ஆனந்த களிப்பாட்டமும் மிகுந்திருந்தன. மகிழ்ச்சிப் பெருக்கினால் ஆண்களும் பென்களும் ஒருவர் மற்றொருவர் கையைச் கோர்த்து ஆனந்த நடனமாடினார்கள் இசை முழக்கம் அதிகமாக இருந்தது விருந்து நடக்கும் நேரம் வந்துவிட்டது. அப்துல் முத்தல்பின் உறவினர்கள். செல்வந்தர்கள். அவரவர் ஆட்களோடு கூட்டங் கூட்டமாக வந்தார்கள். இதைத் தவிர்த்து விருந்து நடக்கும் மாளிகையில் மக்கள் கூட்டம் வரிசை வரிசையாக அமர்ந்திருந்தார்கள்.இன்னும் மக்காவிலிருந்து குறைஷி தலைவர்களெல்லாம் ஒரு பக்கமாகவும் வர்த்தகப் பெருமக்களெல்லாம் மற்றொரு பக்கமாகவும் கற்ற பெருமக்கள் குருமார்கள். படைத் தளபதிகள் ஆகியோர் இன்னொரு பக்கமாகவும் தோரணம் தொருத்தாற்போன்று வரிசையாக அவர்ந்திருந்த காட்சி அழகாக இருந்தது. இக்கூட்டத்தினருக்கு மத்தியில் அருசுடை உணவு கொண்டு வந்து வ்ஐக்கப்பட்டது அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு அதன் சுவையையும் உணவு பறிமாறுகின்ற சிறப்பையும் பற்றி ஒருவர் மற்றவர்ரோடு உரையாடிக் கொண்டே வயிறு நிறைய உனவு உன்கிறார்கள். விருந்து அனைவரும் மனதிருப்தி அடையும் விதத்தில் நல்லபடியாக நடந்து முடிந்தது.