7 ஜூன், 2011

ஒரு போடு போட்டேன்.......(உமர் ரலியல்லாஹு அன்ஹு )

அல்லாஹ்வின் தூதர் கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்கள் தங்களின் மனைவி மார்களிடம் கோபித்து கொண்டு ஒரு மாத காலம் அவர்களிடம் எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை என்று முடிவு செய்து கொண்டு அவர்களை விட்டும் விலகி தனிமையில் இருக்க துவங்கி விட்டார்கள்.

இச் செய்தி காட்டு தீ போல எங்கும் பரவியது. மதினவே கொந்தளித்து போயின. கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்கள் தங்களின் மனைவியர்களை ஒட்டு மொத்தமாக தளக் சொல்லிவிட்டார்கள் என்ற வதந்தியும் மிக வேகமாக கிளம்பியது.

இதை ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகவும் மன வேதனை பட்டு கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்களை பார்த்து வர சென்றார்கள். முறையாக அனுமதி வாங்கி உள்ளே சென்றார்கள். கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். பிறகு அவர்களை நோக்கி யாரசுலல்லாஹ்! தங்கள் தங்களின் மனைவிமார்களை தலாக் சொல்லி விட்டீர்களா? என்று கேட்டார்கள். இல்லை என்று கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்கள் கூறினார்கள்.

உடனியா அவர்கள்.கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் கீல் கண்ட முறையில் நகைச்சுவை சில விசயங்களை சொன்னார்கள்.

அல்லாவின் தூதரே! நான் சொல்வதை கொஞ்சம் கேட்டால் நன்றாக இருக்கும் குறைசிகளான நாங்கள் பெண்களை எங்கள் அதிகாரத்திற்குள் வைத்து இருந்தோம். பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த மதினா வாசிகளிடம் வந்த பொது மதினா பெண்களிடம் எங்கள் பெண்கள் அவர்கள் குணத்தை கற்று கொண்டு எங்களை மிகைக்கத் திவங்கிவிட்டார்கள். yaarasolallaah ! என் விட்டில் நடந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? என் மனைவி என்னிடம் சிலவுக்கு கூடுதலாய் பணம் கேட்டு நச்சரித்தாள் உடனே நான் அவளது கழுத்தில் ஒரு போடு போட்டேன் பாருங்கள் என்று நகைச்சுவையாக சொன்னார்கள் இதை கேட்ட கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள்.

அது மட்டுமா யாரஷுலல்லாஹ்! ஹப்ஷவிடம் சென்று உன் அண்டை வீட்டுக் காரர் ஆயிஷா ரலி உன்னை விட அழகானவராகவும், அல்லாஹ்வின் தூதருக்கு பிரியமனவரகவும், இருப்பதை வைத்து அவர் கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்களிடம் அதிகம் உரிமை எடுப்பதை நீ ஏமாந்து போய்விடாதே! என்று கூறினேன்.

என்று சொன்னார்கள். மீண்டும் கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்கள் புன்னகை பூத்த முகத்தோடு சிரித்தார்கள்.அவர்கள் சிரிப்பதைப் பார்த்தும் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்கள் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார்கள்.

2 ஜூன், 2011

வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

வெற்றியின் இரகசியம் இஸ்திகாரா தொழுகை!

بسم الله الرحمن الرحيم
سر النجاح
ومفتاح الخير والبركة والفلاح

ஒரு வாலிபன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்; பின்னர் திருமணத்துக்காக தயாராகின்றான்; அப்போது அவனது சகோதரன் அப்பெண்னை திருமணம் முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான். அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்; ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனளிக்கவில்லை. இறுதியில் வேறொரு பெண்னை மணக்கின்றான். குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவ்வாலிபனுக்கு முதலாவது திருமணம் பேசப்பட்ட அப்பெண் மரணிக்கின்றாள். தற்போது அவனுக்கு தான் தொழுத அந்த இஸ்திஹாரா தொழுகையில் முழுமையான திருப்தி ஏற்பட்டதோடு தன்னை தடுத்த தனது சகோதரனின் விருப்பமின்மை அவனுக்கு நல்லதாக அமைந்தது.

ஒரு வாலிபன் தொழிற்சாலை ஒன்றில் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் வேலை பார்த்து வந்தான்; ஆனால் அவனது சம்பளமோ தனது அடிப்படைத் தேவையைக்கூட நிறைவேற்ற போதாது; அல்லாஹ் அவனுக்கு நேரான வழியைக் காட்டினான்; அல்- குர்ஆன் மனனப்பிரிவில் சேர்ந்தான்; அத்தோடு பள்ளியில் நடக்கக்கூடிய மார்க்க வகுப்புக்களிலும், மார்க்க சொற்பொழிவுகளிலும் தவறாமல் கலந்து கொள்பவனாக இருந்தான். என்றாலும் அவனது தொழிலோ அதற்குத் தடையாகவே இருந்து வந்தது. இதனால், தான் மனைவி மக்களுடன் வீட்டில் இருப்பதற்கும் வீட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் மிக மிக குறைவாகவே அவனுக்கு நேரம் கிடைத்தது.

ஒரு நாள் அறிஞர் ஒருவரிடம் சென்று, தனது கஷ்டத்தை, முறைப்பாட்டை முன் வைக்கின்றான். அவர் சில அறிவுரைகளைக் கூறினார். அன்றிலிருந்து அந்த வேலையை வெறுத்தவனாக தான் அல்-குர்ஆனையும் கற்று, மார்க்க வகுப்புக்களிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு வேறொரு வேலையை தேடுகிறான். ஆனாலும் எங்கு தான் செல்ல? பின்னர் மார்க்க அறிஞர் அவனை பார்த்து, நன்மையை, தனது தேவையை வேண்டி தொழும் தொழுகையைப் பற்றி (இஸ்திகாரா தொழுகை) தெரியுமா? என்று கேட்க, அவன் தெரியாது என்று கூறினான். பின்னர் அதனை கற்றுக் கொடுத்தார். அவன் உடனே இஸ்திகாரா தொழுகையைத் தொழுதுவிட்டு இறைவன் பால் நம்பிக்கை வைத்தவனாக பிரார்திக்கின்றான். பின்னர் முயற்ச்சி செய்து ஒரு வேலையை பெற்றுக் கொள்கின்றான்.

சிறிது காலத்துக்குப் பிறகு மார்க்க அறிஞரிடம் மகிழ்ச்சியுடன் சநதோஷமான நிலையில் சென்று கூறினான். அல்லாஹ் எனது கஷ்டத்தை நீக்கினான்; குறைந்த நேரத்தில் அதிக சம்பளத்தை பெறக்கூடிய ஒரு தொழிலைப் பெற்றுக் கொண்டேன்; இதன் மூலம் மார்க்க வகுப்புக்களிலும்,தனது மனைவி மக்களுடனும் இருப்பதற்கு மிக மிக வசதியாக இருப்பதாக கூறினான்.

இதனது இரகசியம் தான் என்ன? இவர்களது வெற்றிக்கு காரணமாக அமைந்தது எது? இதுதான் இஸ்திகாரா தொழுகையின் இரகசியம்! இதனை பற்றிய தகவல்களை பின்வருமாறு பார்ப்போம்.

இஸ்திகாரா தொழுகையின் முக்கியத்துவமும் சிறப்பும்!

மனிதனுக்கு எவ்வளவு தான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல திறமைகள் இருந்தலும், தன்னைப் படைத்த இறைவன் பால் ஒவ்வொரு நொடியிலும் அவனுக்குத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒரு மனிதன் குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையால வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு செய்வதற்கு முற்படலாம். இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம் அற்றவைகளாக மாறுகின்றன.

ஒரு மனிதனிடம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை செய்தால் தனது குறிக்கோளை அடைய முடியும்?என்பதில் முடிவை காண முடியாதவனாக இருப்பான்! சில வேலை அச்செயல் அவனை தான் விரும்பாத முடிவுக்கு கொண்டு சேர்க்கும்; அல்லது அது அவனை அழித்து விடும்! இவ்வாறான நிலைமைகளில் அவன் தடுமாற்றமுள்ளவனாக இருப்பான்.

இவ்வாறாண நிலைமைகளில் ஜாஹிலியா கால அரேபியர்கள் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக சில வழிமுறைகளைக் கையாண்டார்கள். அதுதான் அம்பெய்து குறி பார்ப்பதாகும்! அவர்களிடம் மூன்று சீட்டுகள் இருக்கும்; அவற்றில் ஒன்றில் செய்என்றும் மற்றதில் செய்யாதேஎன்றும் மற்றொன்றில்ஒன்றும் இருக்காது”! இவற்றில் செய்என்ற சீட்டு விழுந்தால் குறித்த அக்காரியத்தைச் செய்வார்கள். செய்யாதேஎன்ற சீட்டு விழுந்தால் அதனைச் செய்ய மாட்டார்கள்.

ஒன்றும் இல்லாதசீட்டு விழுந்தால் ஏதோ ஒன்று விழும் வரை தொடர்ந்து சீட்டுகளை போட்டுக்கொன்டே இருப்பார்கள். இவ்வாறான நிலைமைகளில் இருந்து அல்லாஹ் முஃமின்களை பாதுகாத்தான். அதனை அவர்களுக்கு தடை செய்தான்.

قال تعالى (وأن تستقسموا بالأزلام ذلكم فسق….) سورة المائدة :03

அல்லாஹ் கூறுகிறான்:

நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவை பாவமாகும்(அல்குர்-ஆன் 5:3)

இதற்கு பகரமாக, நன்மையை நாடி தொழும் தொழுகையை (ஸலாத்துல் இஸ்திகாரா) நபி (ஸல்)அவர்கள் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இதில் இருக்கக்கூடிய பிரார்தனை, “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தல், உதவி தேடுதல் அனைத்து சக்திகளை விட்டும் ஏக இறைவனது சக்தியை மாத்திரம் எதிர்பார்த்தல் முழுமையாக அவனது செயல்கள் வர்னனைகளை ஒருமைப்படுத்தல் அல்லாஹ்வையே பொறுப்பு சாட்டுவது போன்ற முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கிய பிரார்த்தனையாகும்.

அல்லாஹ் மனிதனிடத்தில் கொண்ட கருனையால் தனது அடியானுக்கு (இஸ்திகாரா தொழுகையை) செய்யும்படி சொல்கின்றான். இச்செயலை செய்வதற்கு படைத்த இறைவனுக்கு முன்னால் ஒரு சில நிமிடங்களை மாத்திரமே செலவு செய்ய வேண்டும. இக்காரியத்தைச் செய்கின்றவர்கள் மிக மிக அரிதே! இத்தொழுகையின் மூலம் தான் நாடியதை தனது இறைவனிடம் கேட்பான்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிகப் பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே!

இத்தொழுகையின் மூலமும், பிரார்த்தனையின் மூலமும் ஒரு அடியான் சிறிய விஷயமொன்றை நாடலாம்! ஆனால் காலப் போக்கில் அப்பிரார்தனையின் மூலம் அந்த விஷயம் பெரிய நன்மையைத் தரக்கூடியதாக மாறலாம்! இதனால் அனைத்து நன்மையான சந்தர்பங்களிலும் இத்தொழுகையைத் தவறவிடக் கூடாது. இதனது முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் எமக்கு காட்டித் தந்தார்கள்! அவர்கள் தனது தோழர்களுக்கு அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்று கொடுப்பதை போன்று இத்தொழுகையைக் கற்று கொடுத்தார்கள்.

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்றுத் தருவதை போன்று இஸ்திகாரா தொழுகயைக் கற்றுதருபவராக இருந்தார்கள்

இஸ்திகாரா தொழுகையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையுமே இந்த நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.

இஸ்திகாரா தொழுகையை தொழும் முறை:

பர்ளு தொழுகை அல்லாத இரண்டு ரக்அத்துக்களை இஸ்திகாரா தொழுகை என்ற என்னத்தோடு தொழ வேண்டும். அதில் சூரா பாதிஹாவையும் அதன் பின்னால் அல்குர்-ஆனில் சில வசனங்களையும் ஓத வேண்டும். சுஜூதில் அல்லது அத்தஹியாத்தில் அல்லது ஸலாம் கொடுத்ததற்கு பிறகு இஸ்திகாரா நபிமொழியில் வரக்கூடிய பிரார்த்தனையை, துஆவை பொருள் விளங்கி ஓதவேண்டும். தொழுகைக்கு பிறகு பிரார்த்திப்பதே மிக சரியான முறையாகும்.

இஸ்திகாரா தொழுகையைப் பற்றி வரக்கூடிய நபிமொழியும் பிரார்தனையும்:

عن جابر رضي الله عنهما قال:كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن،يقول:إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة ثم ليقل : اللهم إني أستخيرك بعلمك، وأستقدرك بقدرتك، وأسألك من فضلك العظيم،فانك تقدر ولا أقدر،وتعلم ولا أعلم،وأنت علام الغيوب،اللهم إن كنت تعلم أن هذا الأمر- ويسمي حاجته-خير لي في ديني ومعاشي وعاقبة أمري-أو

قال عاجل أمري وآجله-فاقدره لي ويسره لي،ثم بارك لي فيه،وان كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري- أو قال:عاجله وآجله-فاصرفه عني واصرفني عنه،واقدر لي الخير حيث كان ثم أرضني به. (أخرجه البخاري. )

அல்லாஹூம்ம இன்னீ அஸ்தகீருக பி இல்மிக, வ அஸ்தக்திருக பீகுதுரதிக, வஅஸ் அலுக மின் பழுலிகல் அழீம், பஇன்னக தக்திர் வலா அக்திர்,வதஃலம் வலா அஃலம், வ அன்த அல்லாமுல் குயூப், அல்லாஹூம்ம இன் குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர – (தேவையைக் குறிப்பிட வேண்டும்) -கைருன் லீ பீ தீனீ வமஆஷீ வஆகிபது அம்ரீ பக்துர்கு லீ வயஸ்ஸிர்கு லீ சும்ம பாரிக்லீபீ, வ இன்குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீதீனீ வமாஆஷீ வ ஆகிபது அமரீ பஸ்ரிப்கு அன்னீ வஸ்ரிப்னீ அன்கூ வக்துர்லியல் கைர ஹைசு கான சும்ம அர்லினீ பீஹ்

இதன் பொருள்:

யா அல்லாஹ்! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை யாசிக்கின்றேன்; மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை யாசிக்கிறேன்; மேலும் உன்னிடமிருந்து உனது மகத்தான அருளை யாசிக்கிறேன்; ஏனெனில் நீ ஆற்றல் பெற்றவன்; என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை. மேலும் நீ நன்கு அறிபவன். நான் எதனையும் அறியமாட்டேன். மேலும் நீயே மறைவானவை அனைத்தும் அறிந்தவன்! யாஅல்லாஹ்! இந்த விஷயம் (விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்) எனக்கும், எனது தீனுக்கும், எனது வாழ்கைக்கும், எனது விவகாரத்தின் முடிவுக்கும்-இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான, தாமதமான விவகாராத்திற்கும் நன்மையானது என நீ அறிந்தால் இதனை எனது விதியில் சேர்ப்பாயாக! மேலும் இதனை எனக்கு எளிமையாக்கித் தருவாயாக! பிறகு இதில் எனக்கு பாக்கியம் அருள்வாயாக! ஆனால் இந்தப் பணி எனக்கு, எனது தீனுக்கும் எனது வாழ்கைக்கும் எனது விவகாரத்திம் முடிவுக்கும் இவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான்,தாமதமான விவகாரத்துக்கும்) தீமையானது என நீ அறிந்தால் இதனை என்னை விட்டு அகற்றி விடுவாயாக! மேலும் எனது விதியில் நன்மையை சேர்ப்பாயாக! அது எங்கிருந்தாலும் சரியே! பிறகு அதில் எனக்கு திருப்தி ஏற்படுத்தித் தருவாயாக!” (ஆதாரம் புகாரி)

இஸ்திகாரா தொழுகையை தொழும் நேரம்:

இஸ்திகாரா தொழுகைக்கு என்று குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. எனினும் தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்களை தவிர்ந்து கொள்வது நல்லதே! பஜுர் தொழுகையிலிருந்து சூரியன் ஒரு ஈட்டி உயரும் வரை உள்ள நேரம், மற்றும் அஸருடைய நேரம் முடிந்ததிலிருந்து சூரியன் மரையும் வரை உள்ள நேரங்களையும் குறிப்பிடலாம். இவ்வாறான நேரங்களில் நபிலான தொழுகைகள் தடுக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு காரணத்துக்காக தொழும் தொழுகையை தொழலாம். உதாரணமாக பள்ளியுடைய கானிக்கை தொழுகை (தஹீயதுல் மஸ்ஜித்) மேலும் பிரார்த்தனைகள் ஏற்று கொள்ளப்படும் நேரங்களில் தொழுவது வரவேற்கத்தக்க விஷயமாகும். உதாரணமாக இரவின் கடைசி பகுதி, பாங்குக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம், இஸ்திகாரா தொழுகை தொழ தடுக்கப்பட்ட நேரத்தை விட்டும் பிந்திவிடுமானால் அந்நேரத்தில் தொழலாம்.

தவறான நம்பிக்கை:

இஸ்திகாரா தொழுகையை இரவில் தூங்குவதற்கு முன் தொழுதுவிட்டு தூங்கினால் அத்தூக்கத்தில் ஒரு கணவு காண்பார்; அக்கணவே சரியானது என்று சில மனிதர்கள் தவறாக இதனை புரிந்திருக்கின்றார்கள். இது முற்றுமுழுதாக பிழையான கருத்தும் நபிமொழிக்கு மாற்றமான முறையும் ஆகும். மேற்குறிப்பிட்டது போல் இத்தொழுகைகென்று குறிப்பிட்ட நேரம் இல்லை. அத்தோடு இஸ்திகாரா தொழுபவர் கணவு காண்பது நிபந்தனையும் அல்ல! ஆகையால் எப்பொழுது ஒரு மனிதனுக் தேவை வருகின்றதோ அப்பொழுது அவன் தொழுவான். பின்னர் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பான்.

இஸ்திகாரா தொழுவதற்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்கள்:

அனைத்து விஷயங்களுக்காகவும் தொழலாம்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிக பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே! எத்தனை மனிதர்களது சிறிய விஷயங்கள் மிக பெரிய விஷயங்களாக மாறி இருக்கின்றன! இந்த நபிமொழியில் வரக்கூடிய அனைத்து விஷயங்களிலும்என்ற சொல் இதற்கு ஆதாரமாக இருப்பதோடு அதனை உறுதிப்படுத்துகின்றது.

ஆனால் இரண்டு விஷயங்களை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும்:

(1) கட்டாயமான கடமைகள், தடுக்கப்பட்டவைகள்; உதரணமாக ஒரு மனிதன் லுஹர் தொழுவதற்காக வேண்டி லுஹர் தொழுவதா? இல்லையா?என்பதற்காக இஸ்திகாரா தொழுவது கூடாது! அல்லது ஹராமக்கப்பட்டிருக்கின்ற வட்டியை வாங்குவதற்கு முன்னால் வட்டியை வாங்குவதா?இல்லையா? என்பதற்கு இத்தொழுகை தொழக் கூடாது! ஏனெனில் லுஹர் தொழுகை என்பது ஒரு கடமையான தொழுகை. அதனை ஒரு முஸ்லிம் தொழுதுதான் ஆக வேண்டும். அத்தோடு வட்டி எடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஒன்று. அதனை ஒருவன் தவிர்ந்துதான் ஆகவேண்டும்.

(2) வழமையான விஷயங்கள், உதாரணமாக ஒருவன் உண்பதற்கும் குடிப்பதற்கும் இஸ்திகாரா தொழ முற்படுகிறான் உண்பதா? குடிப்பதா? என்று! இதற்கு இஸ்திகாரா தொழவேண்டிய தேவையும், பிரார்திக்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஏனெனில் ஒருவன் உண்பதும் குடிப்பதும் இன்றியமையாத தேவைகளாகும்.

அல்லாஹ்வினால் தேர்ந்தெடுத்தவற்றிலே நன்மையுண்டு:

ஒரு முஸ்லிம், ஒரு விஷயத்துக்காக இஸ்திகாரா தொழுவான்; ஆனால் அந்த விஷயத்தையே முக்கியத்துவப்படுத்தி அதிலே உறுதியாக இருப்பான்; அல்லாஹ் அவனுக்கு அதனை விதியாக்கி இருக்கமாட்டான்! உதாரணமாக, ஒருவன் தனக்கு விரும்பிய பெண்னை திருமணம் முடிப்பதற்காக இஸ்திகாரா தொழலாம். ஆனால் அல்லாஹ்வின் விதியில் அது எழுதப்பட்டிருக்காது. இவ்வாறான நிலைமையில் அல்லாஹ்வின்பால் அவன் நல்லெண்ணம் வைக்க வேண்டும். அவனது விதியை முழுமையாக பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கபட்டவற்றிலே நன்மையும் வெற்றியும் உண்டு என்று அவன் நம்ப வேண்டும். சில வேளைகளில் அவன் விரும்பிய அப்பெண் அவன் மோசமாகுவதற்கு அல்லது பாவியாகுவதற்கு காரணமாக இருக்கலாம்! ஆனால் அதனை அவன் அறியமாட்டான். யாவற்றையும் அறிந்த அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

قال تعالى(وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون)

سورة البقرة :216

அல்லாஹ் கூறுகிறான்:

நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன் (அல்-குர்ஆன் 2:216)

அதிகமான மக்கள் பல விஷயங்களை வெறுத்திருப்பார்கள்; ஆனால் அவைகள் அவனது விதியில்-அல்லாஹ்வினால் நன்மையுள்ளதாக எழுதப்பட்டிருக்கும்! பிற்காலத்தில் அதில் அவனுக்கு நன்மையாக அமைகின்றது. அதே போன்று எத்தனையோ மனிதர்கள் ஏராளமான விஷயங்களை விரும்பி இருப்பார்கள். விரும்பப்பட்ட அவ்விஷயங்கள் அவனை அழிவின்பால் இட்டுச் சென்றிருப்பதைப் பார்க்கலாம். இதனையே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

قال تعالى (والله يعلم وأنتم لا تعلمون)سورة البقرة :216

அல்லாஹ் கூறுகின்றான்:

அல்லாஹ் தான் நன்கறிபவன் நீங்கள் அறிய மாட்டீர்கள் (அல்-குர்ஆன் 2:216)

சில விஷயங்களை பொருத்தவவையில், அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்மையை நாடி இருப்பான். ஆனால் அதில் அவனுக்கு வெற்றி இருக்காது! உதாரணமாக ஒரு மனிதன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக இஸ்திகாரா தொழுது பிரார்திப்பான்; அத்திருமணம் நடக்கும்; குறித்த அப்பெண்னை மணப்பான்; காலப்போக்கில் அத்திருமணம் சீர்குழைந்துவிடும்; எனவே இச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை பொருந்திக்கொள்ள வேண்டும். அதுவும் அவனுக்கு நல்லதாகவே இருக்கும் அதனை அவன் அறியமாட்டான்

இஸ்திகாரா தொழுகையினால் ஏற்பட்ட ஒரு உண்மை நிகழ்வொன்றை காண்போம்:

ஹிஜ்ரி 1400 ஆம் ஆண்டு ஒருவர் பிரயாணத்தை மேற்கொள்வதற்காக ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார். அவர் விமான நுழைவு சீட்டையும் (Boarding Pass) பெற்று விமானத்துக்கு புறப்படும் இடத்தில், அழைக்கும் வரை எதிர்பார்த்து இருந்தார். அப்போது தன்னை அறியாமல் தூக்கம் அவரை மிகைத்து விட்டது. திடீரென விழித்தபோது, விமானம் புறப்படக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது; வாயில்கள் மூடப்பட்டுவிட்டன; அப்போது அவருக்கு விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!

விமானத்திற்குள் நுழைவதற்காக தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் அனைத்துமே பயனளிக்கவில்லை! பின்னர் தான் கவலையுற்றவராக தடுமாறிக் கொண்டிருந்தார். குறித்த விமானம், ஒரு சில வினாடிகளில் ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அடுத்த விமான நிலையத்திற்கு தரையிறக்குமாறு கட்டளையிடப்பட்டது. ஆனால் தரையிறக்கப்படுவதற்கு முன்னரே 300 பிரயாணிகளுடன் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனது இரகசியம் என்ன?

அம்மனிதர் தீப்பிடிக்கும் என்று கற்பனைக் கூட செய்திருக்க மாட்டார்! இதுதான் அல்லாஹ்வின் ஏற்பாடு! நிச்சயமாக அம்மனிதருக்கு பிரயாணம் செய்ய கிடைக்கவில்லை; அதன் மூலம் அவருக்கு நலவு இருந்திருக்கின்றது!

எப்பொழுது துஆவுடன் மாத்திரம் சுருக்கிக்கொள்ள வேணடும்?

சிலருக்கு சில சந்தர்ப்பத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியாதவர்களாக இருப்பார்கள்! மாதவிடாய், நிபாஸ் நிலைமைகளில் இருக்ககூடிய பெண்களைப் போன்றவர்ககளைக் கூறலாம். இவர்களை பொருத்தவரையில் தொழ முடியுமான நிலை வரும்வரை தொழுகையைப் பிற்படுத்தலாம். குறித்த அச்சந்தர்ப்பத்தைப் பிற்படுத்த முடியாவிட்டால், தொழுதுதான் ஆகவேண்டுமானால் துஆவுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம். அதாவது நபிமொழியில் வரக்கூடிய பிரார்தனையை மாத்திரம் கேட்பார். இதற்கு பின்வரக்கூடிய வசனங்கள் ஆதாரமாக அமைகின்றன.

قال تعالى(لا يكلف الله نفسا إلا وسعها….)سورة البقرة286

அல்லாஹ் கூறுகின்றான்:

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை (அல்-குர்ஆன் 2:286)

قال تعالى (فاتقوا الله ما استطعتم)سورة التغابن:16

அல்லாஹ் கூறுகின்றான்:

உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் (அல்குர்-ஆன் 64:16)

சகோதரா! உனது வியாபாரத்தை துவக்குவதற்கு முன்னால் அல்லது தொழிற்சாலைக்கு வேலையாட்களை சேர்ப்பதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுதுகொள்!

சகோதரா! நீ ஒரு தொழிலுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்னால் அதில் நன்மையுண்டா? தீமையுண்டா? என்பதனை உன்னால் அறிய முடியாது! அல்லது ஒரு நோயாளி தனது நோயை குணப்படுத்த வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னால், அல்லது ஒரு வீட்டையோ, தொலைதொடர்பு சாதனங்களையோ, ஒரு வாகனத்தையோ வாங்குவதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!

சகோதரா! திருமணத்திற்காக தயாராகுவதற்கு முன்னால், திருமண பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்னால், மணமகன் அல்லது மணமகளைப் பார்ப்பதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!

சகோதரா! இஸ்திகாரா தொழுகை வெற்றியின் ஆரம்ப படித்தரமாகும்! அல்லாஹ்வின் நாட்டத்தால் இம்மை மறுமை வெற்றிக்கு காரணமாகவும் அமைகின்றது! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடந்து அவனுடன் உண்மையான முறையில் நடந்துகொண்டால், அவன் மீதே நம்பிக்கை வைத்தால், வெற்றியின் நுழைவாயில்கள் அனைத்தையுமே அவன் திறந்து கொடுப்பான்.

இது அல்லாஹ்வின் அருள்! அவன் நாடியவருக்கு அருள்பாளிக்கின்றான்! அல்லாஹ் மகத்தான அருளுக்கு உரியவனுமாவான்.

ஒரு கோப்பை பாலும் அபூஹுரைரா ரலியல்லாஹ்வின் நகைசுவையும்

ஒரு சமயம் ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்களுக்கு கடுமையான பசி உன்ன உணவோ இல்லை. அதனால் ஒரு தந்திரம் செய்தார்கள் எப்படி தெரிமா? முக்கியமான பணக்கார ஷஹாபாக்கள் நடந்து வரும் வழியில் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.
முதலாவதாக அவ்வழியே ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு வந்தார்கள். இவர்களை பார்த்ததும் நைசாக அவர்களிடம் சாதுர்யமாக பேச்சுக் கொடுத்தார்கள். கரணம் பேசிக் கொண்டே தனது வீட்டிற்கு அலைத்துஸ் சென்று உணவு கொடுப்பார்கள் என்ற ஆசை ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை பேசி விட்டு சென்று விட்டார்கள்.

முகத்தில் கவலை பொங்க அமர்ந்து அடுத்தவர் யார்? என்று வழிமேல் விழி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹ் அன்ஹு வந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் முகத்தில் சந்தோசம். எப்படியும் இவர்கள் நம்மை உணவுக்காக அழைத்துப் போய் உபசரிப்பார் என்று.

நிஷா பேச்சுக் கொடுத்தார்கள் அவர்களும் பேசிவிட்டு நகர்ந்தார்கள். முகவடி போய் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் சோர்ந்துப் போய் அமர்ந்திருந்தார்கள். சற்று நேரத்தில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அங்கு வருகை புரிந்தார்கள்.
ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு நிலையோ மிகவும் பரிதாபமாக இருந்தது பசிக்காக போராடி களைத்துப் போய் உட்கார்ந்திருந்ததை கண்மணி நபி ஸல்லால்ஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள். பிறகு அபூஹுரைராவே என்னுடன் வாரும் என்று அழைத்தார்கள். அவர்களும் உடன் சென்றார்கள்.
தனது விட்டிற்கு அழைத்து சென்று என்ன இருக்கு என்று தனது மனைவியிடம் கேட்டார்கள். உங்களுக்காக ஒரு கோப்பை பால் இருக்கு என்று சொல்லப்பட்டது. அதை வாங்கி இது எங்கிருந்து வந்தது என்று விசாரித்தார்கள். இன்ன இடத்தில் இருந்து நபி அவர்களுக்கு ஹதியவாக வந்தது என்று கூறினார்கள்.

பால் கிடைத்து விட்டது இனி நம் பசி தீர்ந்து விடும் இந்த ஒரு கோப்பை பால் எனக்கு தான் என்று ஆவலோடு நினைத்து கொண்டார்கள் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள்..இப்பொது கண்மணி நபி ஸல்லால்ஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹுவைப் பார்த்து. ஓஓஒ அபூஹுரைரா நீ சென்று திண்ணை தோழர்களை அழைத்துவாரும் என்று உத்தரவிட்டார்கள்.
அபூஹுரைரவுக்கு திக்கென தஊக்கிப் போட்டது. கையில் உள்ளது வாக்கு வரத்து போல் அல்லவா? தெரிகிறது அப்போது திண்ணை தோழர்கள் மத்தின பள்ளியில் 70 நபர் இருந்தார்கள். ஒரு கோப்பை பாலுக்கு 70 பேர்களா? இந்த பாலுக்கு எல்லோரையும் அழைத்து வர வேண்டுமா? என் பசிக்கே இது போதாது. எப்படி 70 பேர்களுக்கும் போதுமாகும? இப்படி மனதை போடு குலம்பிகொன்டர்கள்.மனதில் பெரும் பாரம் உண்டாகி விட்டது. சரி அனைவரையும் இங்கு அழைத்து வந்தால் எல்லோருக்கும் பாளை கொடுத்துவிடு கடைசியாக தனியா நான் குடிக்க நிலை ஏற்படும்? அபோது இந்த கோபியில் என்ன மிஞ்சி இருக்கப்போகிறது? என்று தனக்குள் பேசிக்கொண்டார்கள் கண்மணி நபி ஸல்லால்ஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் கட்டளையும் நிறைவேற்ற வேண்டும் அனால் பல் எனக்கு கிடைக்குமா கிடைக்காத பவகையான குழப்பத்திலேயே மச்ஜிதிர்க்கு சென்று அனைத்து திண்ணை தோழிகளையும் அழைத்து வந்தார்கள்.

கண்மணி நபி ஸல்லால்ஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்களை அழைத்து இதோ பல் இதனை அவர்களுக்கு கொடுப்பீராக என்றார்கள். சரி வந்தவர்களோ என்னைவிட கடும் பசி உடையவர்கள். இனி எனக்கு எங்கு பால் மிஞ்சப் போகிறது? என்று நினைத்துக் கொண்டவர்களாக திண்ணை தோழர்களுக்கு பாலை கொடுத்தார்கள் மன வேதனையுடன். இது பெரும் தமாஷாக இருந்தது. முதலில் ஒருவர் குடித்தார். வயர் நிறைய குடித்து விட்டு கோப்பையை அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்களிடம் கொடுத்தார்கள். எங்கிப்போன அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹுஅந்த கோப்பை அடுத்தவருடம் கொடுத்தார் அவரும் அப்படியே செய்தார் இப்படி 70 பேர்களிடமும் ௭௦ முறை கொடுத்து. வாங்கி கொண்டிருந்தார்கள். இந்த காட்சி மிகவும் நகைசுவையாக இருந்தது. கடைசி நபர் குடித்தும் அந்த கோப்பையை தனக்கு தான் தருவார்கள். தன்னை தான் குடிக்க சொல்வார்கள் என்று ஆர்வமாய் ஆவலோடு இருந்த பொது அந்த கோப்பையை கண்மணி நபி அவர்கள் வாங்கி கொண்டார்கள். பதறிப் போனார் ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள். இவர்களின் இந்தநிலையை கண்ட கண்மணி நபி அவர்கள் சிரித்து விட்டார்கள். இப்போது நானும் நீயும் தான் மீதி இருக்கிறோம் இல்லையா? என்றார்கள் நகைசுவையாக.

ஆமாம் யாரா சூலல்லாஹ்! என்று பரிதாபமாக கூறினார்கள். அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள்.
இந்த கோப்பை பால் இப்பொழுது யாருக்கு? ஒரே பரபரப்பு அபூஹுரைராவே இதை நீரே குடி என்று கொடுத்தார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு இப்பொழுது தான் பசிக்கு பால் கிடைத்த மகில்ச்சியில்படப்பட்டவென வாங்கி கிடித்தார்கள். பக்கத்தில் நிண்டு கொண்டு. இன்னும் குடிப்பஈரான என்றார்கள். மீண்டும் குடித்தார்கள். இன்னும் குடிப்பஈராஹா என்றார்கள். குடித்தார்கள். குடித்தார்கள் குடித்து கொண்டே இருந்தார்கள். இந்த காட்சி தமஷகவும் நகைசுவையாகவும் இருந்தது. கடைசியாக யாரசூலல்லாஹ்! இனிமேல் என்னால் குடிக்கவே முடியாது. பசி அடங்கிவிட்டது. என்று சொன்னார்கள். அப்படியா? சரி என்னிடம் தாரும் என்று கோப்பையை வாங்கி அதில் உள்ள பாலை கடைசியாக கண்மணி நபி ஸல்லால்ஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் குடித்தார்கள்.

மருமகனை கிண்டல் செய்த மாமனார்!

கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்கள் ஒரு விருந்திற்கு சென்றார்கல். அவர்கள் கூட ஹஜ்ரத் அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்களும் சென்றார்கள். விருந்து நடை பெரும் வீட்டில் கண்மணி கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்களின் பக்கத்தில் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் முன்பு உணவாஹா பேரிட்சபலம் வைக்கப்பட்டிருந்தது ஏறலமனவர்கள் அவ்விருந்தில் கலந்து கொண்டனை. அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் தனது அடுத்த பக்கத்தில் அமர்ந்து இருந்த மற்றொரு தோழரோடு மிகவும் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள். சாப்பிடும் போது பேசிக்கொண்டிருந்ததால். சாப்பிட முடியாது இதை பார்த்துவிட்ட கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்கள் பழங்களை தான் சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டைகளை அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் முன்பாக சேர்த்து கொண்டே வந்தார்கள்.

அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் முன் அதிகம் கோட்டைகள் சேர்ந்து விட்டது. உஷாரான கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்கள் அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்களை கேலி செய்யும் விதமாக சிரல் விருந்துக்கு வந்து அளவுக்கு அதிகமாக சாபிட்டுவிட்டார்கள் . இதோ எவ்வளவு கொட்டைகள். என்று சுட்டி காட்டினார்கள். திடுக்கிட்ட அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்கள் நகைசுவையாக நம்மை கேலி அல்லவா செய்கிறார்கள்? என்று புரிந்து கொண்டு அவர்களும் தமாஷாக ஆமாம் நானாவது இவ்வளவோ பழங்களை சாப்பிட்டுள்ளேன். சிலர் கோட்டைகளோட அல்லவா சப்பிட்டுல்லார்கள். என்னை விட அதிகமல்லவா? சாப்பிட்டிர்க்க வேண்டும். என்று கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்களின் முன்பாக கொட்டைகள் இல்லாமல் இருந்ததை சுட்டி காட்டி நகைசுவையாக பதிலளித்தார்கள் அங்கிருந்தவர்கள் மத்தியில் ஒரே சிரிப்

பவுர்ணமி இரவில் நடந்த நகைசுவை உரையாடல் (ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா)

ஒரு நாள் பவுர்ணமி இரவு மதினாவின் மணல் வெளியில் கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் ஆருயிர் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் தனிமையில் அமர்ந்து சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
சந்திரன் தன அழகையெல்லாம் பூமியின் மீது கொட்டிக் கொண்டிருந்தது.
வானத்தில் கோடி கணக்கான விண்மீன்கள் பளிச் பளிச்சென தன அழகு முகம் காடி கொண்டிருந்தன ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு திடீர்ரென ஒரு சந்தேகம் தோன்றியது. தனது அருமை கணவர் கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் கேட்டது தெளிவு பெற இது தன தக்க தருணம் என்று எண்ணியவர்களாக. சந்தேகத்தை கேட்க துவங்கினார்கள். அல்லாவின் தூதரே! வனத்தில் என்ன முடியாத அளவுக்கு இவ்வளவு நட்ச்சத்திரங்கள் உள்ளனவே. இந்த நட்ச்சத்திரங்கள் அளவுக்கு உலகில் யார் அமல் செய்து இருப்பார்கள்? சொல்லுங்கள் பார்ப்போம் என்று நகைசுவையாய் கேட்டார்கள்.
(தனது தந்தை அபூபக்கர் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் இவ்வளவு நன்மைகளை செய்து இருப்பார்கள் நிச்சயம் அவர்களின் பெயரைத்தான் கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொல்வார்கள் என்ற மகிழ்ச்சியில் இப்படி கேட்டார்கள்.)
தனது அன்பு மனைவி உள்ளரங்கத்தைப் புரிந்து கொண்ட கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். குறும்பு செய்யத் துவங்கினார்கள்.ஆயஷவே! இந்த வனத்தில் மீண்டும் நட்ச்சத்திரங்கள் அளவுக்கு உலகில் ஒருவர் நன்மை செய்து இருப்பார் என்றால் அது உமர் ரலி அல்லாஹு அன்ஹு அவர்கள் தன என்று குறும்புடன் சொன்னார்கள்.
இதைக் கேட்ட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்ப்பட்டது, அவர்களும் தனக்கே உரிய சொல்ல கோபத்துடன் அப்படியானால் எனது தந்தையின் நன்மைகல் எங்கே போயின? என்று கேட்டார்கள் அப்பாவியாக.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் நினைப்புக்கு மாற்றமாக சொன்னதால் அவர்களின் செல்ல கோபத்தைப் புரிந்து கொண்ட கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் புன்னகை பூத்தவர்களாக ஆயஷவே! இந்த வானத்தில் உள்ள விண்மீன்கள் அளவுக்கு உமர் ரலி அல்லாஹு அன்ஹு அவர்கள் நன்மைகள் செய்து இருப்பார்கள் என்றால்
உமர் ரலி அல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த எல்லா நன்மைகளும் அபூபக்கர் ரலி அல்லாஹு அன்ஹு அவர்களும் ஒரு நன்மைக்குச் சமமானதே என்று சொன்னார்கள்.
இதை கேட்ட ஆயிஷா ரலி அல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு முகம் சிரிப்பால் மலர்ந்தது.

9 மே, 2011

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.‏

உமர் (ரலி) (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து பிரார்த்திக்கலாயினர். அவரின் ஜனாஸா (சடலம்) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் தான் என்னை திடுக்கிடச் செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்த போது) அது அலீ இப்னு அபீதாலிப் (ரலி) தாம். அவர்கள், 'உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!'' என்று பிரார்த்தித்துவிட்டு, '(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள் தாம் அத்தகைய மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி - ஸல் - அவர்கள் மற்றும் அபூபக்ர் - ரலி - அவர்)கள் இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில் தான்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், 'நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்'' என்றும் 'நானும் அபூபக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே புகுந்தோம்'' என்றும் 'நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம்'' என்று சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கிறேன் எனக் கூறினார்கள்.
புஹாரி : 3685 இப்னு அப்பாஸ் (ரலி).
1546. 'நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன. இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு 'மார்க்கம்' 'என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்''.
புஹாரி : 23 அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) .
நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (என்னுடைய கனவில்) ஒருபால்கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. உடனே (அதிலிருந்த பாலை நான்) தாகம் தீருமளவு குடித்து அது என்னுடைய நகக் கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீதமிருந்ததை உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் இறைத்தூதர் அவர்களே! அந்தப்பாலுக்குத் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'கல்வி' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.
புஹாரி: 82 இப்னு உமர் (ரலி).
நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக்கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவிற்கு(த்தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர் அவர்கள்) அதை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு வாளி நீரை.. அல்லது இரண்டு வாளிகள் நீரை.. இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரின் சோர்வை மன்னிப்பானாக! பிறகு, அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தா பின் மகன் உமர் எடுத்தார். உமர் இறைத்தைப் போன்று இறைக்கிற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3664 அபூஹுரைரா (ரலி).
கனவில் இப்படி எனக்குக் காட்டப்பட்டது: நான் ஒரு சுற்றுச் சுவர் இல்லாத கிணற்றின் மீதிருந்த ஒரு வாளியால் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி... அல்லது இரண்டு வாளிகள்... தண்ணீரை(சற்று) சோர்வான நிலையில் இறைத்தார்கள். அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக! பிறகு உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்தார்கள். உடனே அந்த வாளி மிகப் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான ஒரு (அபூர்வத்) தலைவரை நான் கண்டதில்லை. மக்கள் தாகம் தீர்ந்து, (தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3682 இப்னு உமர் (ரலி).
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், '(கனவில்) 'நான் சொர்க்கத்தினுள் நுழைந்தேன்' அல்லது 'சொர்க்கத்திற்குச் சென்றேன்' அங்கு ஒரு மாளிகையைக் கண்டேன். நான், 'இது யாருடையது?' என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), 'இது உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குரியது'' என பதிலளித்தார்கள். அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். ஆனால், (உமரே!) உம்முடைய ரோஷம் குறித்து நான் அறிந்திருந்தது என்னை (உள்ளே செல்லவிடாமல்) தடுத்துவிட்டது'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உமர் இப்னு கத்தாப் (ரலி), 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டார்கள்.
புஹாரி :5226 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).
நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோதுஅவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலகில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையில் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், 'இந்த அரண்மனை யாருடையது?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். 'உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குரியது. ஜிப்ரீல் அவர்களும் மற்றும் அங்கிருந்த வானவர்களும்) பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?' என்று கேட்டார்கள்.
புஹாரி : 3242 அபூஹூரைரா (ரலி).
. (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்)அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், 'என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே'' என்றார்கள். உமர் (ரலி), 'எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) 'தமக்குத் தாமே பகைவர்களாகி விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், 'ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கிறீர்கள்'' என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்'' என்று கூறினார்கள்.
புஹாரி :3294 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்து விட்டபோது, அவரின் புதல்வர் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரலி), இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்குக் கஃபனிடுவதற்காக நபி (ஸல்) அவர்களின் சட்டையைக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் தம் சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) தம் தந்தைக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள். உடனே உமர் (ரலி) எழுந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, 'இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுகை நடத்தப்போகிறீர்கள்!'' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , '(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான்'' என்று கூறிவிட்டு, '(நபியே!) நீங்கள் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமலிருங்கள். (இரண்டும் சமம்தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்'' என்று கூறுகிறான். நான் எழுபது முறையை விட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்'' என்று கூறினார்கள். உமர் (ரலி), 'இவர் நயவஞ்சகராயிற்றே!'' என்று கூறினார்கள். இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோனான அல்லாஹ், 'அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) தொழுகை நடத்தாதீர். அவரின் மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம்'' எனும் (திருக்குர்ஆன் 09:84 வது) வசனத்தை அருளினான்.
புஹாரி : 4670 இப்னு உமர் (ரலி).