ஒரு சமயம் ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்களுக்கு கடுமையான பசி உன்ன உணவோ இல்லை. அதனால் ஒரு தந்திரம் செய்தார்கள் எப்படி தெரிமா? முக்கியமான பணக்கார ஷஹாபாக்கள் நடந்து வரும் வழியில் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.
முதலாவதாக அவ்வழியே ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு வந்தார்கள். இவர்களை பார்த்ததும் நைசாக அவர்களிடம் சாதுர்யமாக பேச்சுக் கொடுத்தார்கள். கரணம் பேசிக் கொண்டே தனது வீட்டிற்கு அலைத்துஸ் சென்று உணவு கொடுப்பார்கள் என்ற ஆசை ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை பேசி விட்டு சென்று விட்டார்கள்.
முகத்தில் கவலை பொங்க அமர்ந்து அடுத்தவர் யார்? என்று வழிமேல் விழி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹ் அன்ஹு வந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் முகத்தில் சந்தோசம். எப்படியும் இவர்கள் நம்மை உணவுக்காக அழைத்துப் போய் உபசரிப்பார் என்று.
நிஷா பேச்சுக் கொடுத்தார்கள் அவர்களும் பேசிவிட்டு நகர்ந்தார்கள். முகவடி போய் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் சோர்ந்துப் போய் அமர்ந்திருந்தார்கள். சற்று நேரத்தில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அங்கு வருகை புரிந்தார்கள்.
ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு நிலையோ மிகவும் பரிதாபமாக இருந்தது பசிக்காக போராடி களைத்துப் போய் உட்கார்ந்திருந்ததை கண்மணி நபி ஸல்லால்ஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள். பிறகு அபூஹுரைராவே என்னுடன் வாரும் என்று அழைத்தார்கள். அவர்களும் உடன் சென்றார்கள்.
தனது விட்டிற்கு அழைத்து சென்று என்ன இருக்கு என்று தனது மனைவியிடம் கேட்டார்கள். உங்களுக்காக ஒரு கோப்பை பால் இருக்கு என்று சொல்லப்பட்டது. அதை வாங்கி இது எங்கிருந்து வந்தது என்று விசாரித்தார்கள். இன்ன இடத்தில் இருந்து நபி அவர்களுக்கு ஹதியவாக வந்தது என்று கூறினார்கள்.
பால் கிடைத்து விட்டது இனி நம் பசி தீர்ந்து விடும் இந்த ஒரு கோப்பை பால் எனக்கு தான் என்று ஆவலோடு நினைத்து கொண்டார்கள் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள்..இப்பொது கண்மணி நபி ஸல்லால்ஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹுவைப் பார்த்து. ஓஓஒ அபூஹுரைரா நீ சென்று திண்ணை தோழர்களை அழைத்துவாரும் என்று உத்தரவிட்டார்கள்.
அபூஹுரைரவுக்கு திக்கென தஊக்கிப் போட்டது. கையில் உள்ளது வாக்கு வரத்து போல் அல்லவா? தெரிகிறது அப்போது திண்ணை தோழர்கள் மத்தின பள்ளியில் 70 நபர் இருந்தார்கள். ஒரு கோப்பை பாலுக்கு 70 பேர்களா? இந்த பாலுக்கு எல்லோரையும் அழைத்து வர வேண்டுமா? என் பசிக்கே இது போதாது. எப்படி 70 பேர்களுக்கும் போதுமாகும? இப்படி மனதை போடு குலம்பிகொன்டர்கள்.மனதில் பெரும் பாரம் உண்டாகி விட்டது. சரி அனைவரையும் இங்கு அழைத்து வந்தால் எல்லோருக்கும் பாளை கொடுத்துவிடு கடைசியாக தனியா நான் குடிக்க நிலை ஏற்படும்? அபோது இந்த கோபியில் என்ன மிஞ்சி இருக்கப்போகிறது? என்று தனக்குள் பேசிக்கொண்டார்கள் கண்மணி நபி ஸல்லால்ஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் கட்டளையும் நிறைவேற்ற வேண்டும் அனால் பல் எனக்கு கிடைக்குமா கிடைக்காத பவகையான குழப்பத்திலேயே மச்ஜிதிர்க்கு சென்று அனைத்து திண்ணை தோழிகளையும் அழைத்து வந்தார்கள்.
கண்மணி நபி ஸல்லால்ஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்களை அழைத்து இதோ பல் இதனை அவர்களுக்கு கொடுப்பீராக என்றார்கள். சரி வந்தவர்களோ என்னைவிட கடும் பசி உடையவர்கள். இனி எனக்கு எங்கு பால் மிஞ்சப் போகிறது? என்று நினைத்துக் கொண்டவர்களாக திண்ணை தோழர்களுக்கு பாலை கொடுத்தார்கள் மன வேதனையுடன். இது பெரும் தமாஷாக இருந்தது. முதலில் ஒருவர் குடித்தார். வயர் நிறைய குடித்து விட்டு கோப்பையை அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்களிடம் கொடுத்தார்கள். எங்கிப்போன அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹுஅந்த கோப்பை அடுத்தவருடம் கொடுத்தார் அவரும் அப்படியே செய்தார் இப்படி 70 பேர்களிடமும் ௭௦ முறை கொடுத்து. வாங்கி கொண்டிருந்தார்கள். இந்த காட்சி மிகவும் நகைசுவையாக இருந்தது. கடைசி நபர் குடித்தும் அந்த கோப்பையை தனக்கு தான் தருவார்கள். தன்னை தான் குடிக்க சொல்வார்கள் என்று ஆர்வமாய் ஆவலோடு இருந்த பொது அந்த கோப்பையை கண்மணி நபி அவர்கள் வாங்கி கொண்டார்கள். பதறிப் போனார் ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள். இவர்களின் இந்தநிலையை கண்ட கண்மணி நபி அவர்கள் சிரித்து விட்டார்கள். இப்போது நானும் நீயும் தான் மீதி இருக்கிறோம் இல்லையா? என்றார்கள் நகைசுவையாக.
ஆமாம் யாரா சூலல்லாஹ்! என்று பரிதாபமாக கூறினார்கள். அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள்.
இந்த கோப்பை பால் இப்பொழுது யாருக்கு? ஒரே பரபரப்பு அபூஹுரைராவே இதை நீரே குடி என்று கொடுத்தார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு இப்பொழுது தான் பசிக்கு பால் கிடைத்த மகில்ச்சியில்படப்பட்டவென வாங்கி கிடித்தார்கள். பக்கத்தில் நிண்டு கொண்டு. இன்னும் குடிப்பஈரான என்றார்கள். மீண்டும் குடித்தார்கள். இன்னும் குடிப்பஈராஹா என்றார்கள். குடித்தார்கள். குடித்தார்கள் குடித்து கொண்டே இருந்தார்கள். இந்த காட்சி தமஷகவும் நகைசுவையாகவும் இருந்தது. கடைசியாக யாரசூலல்லாஹ்! இனிமேல் என்னால் குடிக்கவே முடியாது. பசி அடங்கிவிட்டது. என்று சொன்னார்கள். அப்படியா? சரி என்னிடம் தாரும் என்று கோப்பையை வாங்கி அதில் உள்ள பாலை கடைசியாக கண்மணி நபி ஸல்லால்ஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் குடித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக