22 செப்டம்பர், 2012

பிள்ளைகளை வளர்ப்பது எப்படி ?

இனி பிள்ளைகளை எம்முறையில் வளர்ப்பது நல்லது என்பதை ஆயாய்வோம். 
1. இல்மு
2. அமல்
3. தர்பியத்

அமல் இல்லா இல்மு பழம் தரா மரம் போன்றது. பலன் தராத மரத்தை யாரும் விரும்புவதில்லை.இல்மிலும் அமலிலும் ஒரே விதமான எழுத்துக்களை பார்க்க முடியும். பிள்ளைகளுக்கு வெறும் இளமை மட்டும் கற்றுக் கொளுப்பதில் பயனில்லை கற்ற இல்மின் பிரகாரம் அமல் செய்வதற்கு தர்பியத் அவசியம். சுமார் ஆறு வயதிலிருந்தே பிள்ளைகளை தர்பியத் செய்ய ஆரம்பிக்க வேண்டும் இளமை விட தர்பியத் அதிகம் தேவை வயது ஆக ஆக தர்பியத் செய்யும் முறையும் மாற வேண்டும் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மீது பயமிருக்க வேண்டும். அதே சமயத்தில் பிரியமும் இருக்க வேண்டும் அந்தளவு அவர்களை பழக்க வேண்டும். பெற்றோர்கள் அடிப்பார்கள் என்ற பயத்தில் பிள்ளைகள் பொய் கூறும் அளவிற்கு அவர்களை பழக்க கூடாது ஒரு முறை ஒரு சிறு விசயத்திற்காக பொய் கூற பழகிவிட்டால் போதும். அது படிப்படியாக வளர்ந்து பெரும் திருட்டுக்கே காரணமாகிவிடும். பிள்ளைகளை அடிக்கடி கண்டிக்க கூடாது கண்டிப்பதர்கென்று ஒரு நேரத்தை முடிவு செய்து வைக்க வேண்டும். பலருக்கு மத்தியுள் வைத்து அவர்களை கண்டிக்கக் கூடாது தவறு செய்வதை பார்த்த உடனே சொல்லாமல் மேலே குறிப்பிட்டுள்ளபடி குறித்த நேரத்தில்தான் எதையும் கண்டிக்க வேண்டும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கை போகும் வரையுள்ள எல்லா விஷயங்களுக்கும் கால அட்டவணை முடிவு செய்து அதன் பிரகாரம் அன்று நடைபெற்றதா? என்பதை பரிசீலனை செய்ய வேண்டும் கால அட்டவணைப்படி செய்யலாற்றுவதில் ஏதேனும் விடுபடிருந்தால் ரொம்பவும் கண்டிக்காமல் அதை செய்யும்படி ஆவர்மூட்ட வேண்டும் சிறுவயதில் விளையாடல் ஆவர்களுக்கு பிரியமிருப்படால் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு நேரத்தை குறிப்பிட்டு வைக்க வேண்டும் வாலிப வயது நெருங்க நெருங்க நண்பர்களோடு செல்வதில் அதிக ஆசையும் ஆர்வமும் உண்டாகும் இதுதான் மிகவும் ஆபத்தான கட்டம் கெட்ட நண்பர்களுடன் பழக விடாமல் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும் நல்ல நண்பர்களுடன் பழக விடுவதில் தவறில்லை. பிள்ளைகள் ஓரளவு பொறுப்பை உணரும் வரை மிகவும் எச்சரிக்கையுடன் பாதுகாத்து வர வேண்டும் .

பெற்றோரின் கடமைகள் என்ன?
பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்பதை பற்றி சில ஹதீதுகளின் குறிப்புகள் இங்கே எழுதபடுகின்றன. நாம் அவற்ற்றை நன்றாக சிந்தித்துப் பார்த்தால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். உங்கள் பிள்ளைகள் ஏழு வயது அடைந்தும் தொழும்படி ஏவுங்கள் பத்து வயது தொழுகையை நிறைவேற்றாவிட்டால் அடித்து தோலும் படி ஏவுங்கள்.மற்றொரு ஹதீதில் தந்தை தான் பிள்ளைக்கு கல்வியை கற்றுக் கொடுப்பதானது தான தருமம் செய்வதை விட சிறந்ததாகும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரக செருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பது அல்லாஹ்வின் கட்டளை உங்கள் குழந்தைகளை அமாநிதங்களாக அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளான் எனவே அமானிதமாக அளித்த அக்குழந்தைகளை முறையோடு பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பது இறை நேச செல்வர் இமாம் கஸ்ஸாலி ரஹ்மாத்துலல்லாஹ் அவர்களின் மணி மொழிகளின் ஒன்று 
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்றும் தந்தையின் பிரியத்தில் அல்லாஹ்வின் பிரியமிருக்கிறது என்றும் தலை சிறந்த நுழைவாயில் வழியாக சுவர்க்கம் புக விரும்புவோர் தம் தந்தையையும் தாயையும் மகில்விப்பாராக என்றும் ஹதீது நூற்களில் காண முடியும்.