மரணம்
மரணம் இவ்வுலகில் உயிருள்ளோரின் இறுதிக் கட்டமாகும். அல்லாஹ் கூறுகிரான். ஒவ்வொரு ஆன்மாவும் மரனத்தை சுகித்தே தீர வேண்டும்.(3:185) பூமிமீதுள்ள எல்லோரும் அழிந்துபோகக்கூடியவர்களே.(55:26) நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான்: நபியே நிச்சயமாக நீரும் மரணிக்கக் கூடியவரே இன்னும் அவர்களும் மரணிக்கக்கூடியவர்களே(39:20)இவ்வுலகம் எந்த மனிதருக்கும் நிரந்தரமானதல்ல. அல்லாஹ் கூருகிறான் நபியே உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தர வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை.(21:34)1. மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக விஷயமாகும். இவ்வாறிருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை மறந்திருக்கின்றனர், ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் மரணத்தை சந்திக்கத் தயாராக இருப்பதும் அவசியமாகும். இவ்வாறே அவன் தன் மறுமை வாழ்விற்காக இவ்வுலக வாழ்வில் அதற்குறிய நேரம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை செய்து தாயாராகிக் கொள்வது அவசியமாகும்..நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். 5 நிலைமைகள் ஏற்படுவதற்கு முன் 5 நிலைமைகளைப் பேணிக் கொள். மரணத்திற்கு முன் வாழ்வையும் நோய் வரும் முன் ஆரோக்கியத்தையும் வேலைக்கு முன் ஓய்வையும் வயோதிகத்திற்கு முன் வாலிபத்தையும் ஏழ்மைக்கு முன் செல்வத்தையும் பேணிக் கொள்.உலகிலிருந்து எந்தப் பொருளும் இறந்து விட்ட வனுடன் அவனுடைய மண்ணறைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை நிச்சயமாக அவனுடன் தங்கியிருப்பது அவனுடைய செயல்கள் மட்டுமே. எனவே நற்செயல்களைச் சித்தப்படுத்திக் கொள்வதில் நீ அக்கறை கொள். அதன் மூலம் தான் நீடித்த நற்பாக்கியத்தை நீ அடைய முடியும். அல்லாஹ்வின் உதவியால் வேதனையிலிருந்து ஈடேற்றமும் பெற முடியும்.2. தெரிந்துக் கொள். மனித வாழ்க்கை தவனை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாத அளவு தெளிவில்லாத விஷயமாகும். எனவே யார் எப்போது எந்த இடத்தில் மரண்மடைவார் என்பதை யாரும் அறிய முடியாது. திண்ணமாக இது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த மறைவான நானங்களுள் ஒன்றாகும்.3. மரணம் வந்து விட்டால் அதைத் தடுக்கவோ பிற்படுத்தவோ அதை விட்டு வெருண்டோடவோ முடையாது . அல்லாஹ் கூறுகிறான். ஒவ்வொரு சமுதாயத்தவர்களுக்கும் ஒரு தவணையுள்ளது. அவர்களின் தவணை வந்து விட்டால் அவர்கள் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.(7:34)4. ஒரு முஃமீனுக்கு மரணம் வந்து விட்டால் நறுமணம் வீசுகின்ற அழ்கிய தோற்றத்துடன் மலக்குல் மெள்த் உயிரைக் கைப்பற்றும் வானவர் அவனிடம் வருகிறார். அவருடன் சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறும் அருளுக்குரிய மலக்குகளும் வருகிறார்கள்.
Posted by இஸ்லாம் at
இறுதி நாள்..அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவனுக்கே புகழ்னைத்தும். கருனையும் ஈடேற்றமும் நபி மார்கள் ரசூல் மார்கள். அனைவரினும் மீதும் அவர்களின் குடும்கத்தார்கள் தோழ்ர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.நிச்சயமாக மறுமை நாளை நம்புவது ஈமானின் அடிப்படைகளிலும் அதன் ஆறு கடமைகளிலும் ஒன்றாகும். எனவே மறுமை தொடர்பாக இறைவேதத்திலும் ஆதாரப்பூர்வமாக நபிவழிகளிலும் வந்த வற்றை நம்பாதவரை ஒருவன் இறைவிசுவாசியாக ஆக முடியாது.. நிச்சயமாக மறுமை நாளை அறிந்து அதை அதிகமாக நினைவு கூருவது மனித வாழ்க்கையைச் சீர்ப்படுத்துதல் இறையச்சத்தை ஏற்படுத்துதல் இறைமார்க்கத்தில் உறுதியாக இருந்தல் போன்ற பல நன்மைகளுக்கு வழிகோலும் எனவே மறுமை நாளின் அமளிகள். கடுமைகள் குறித்து பாரமுகமாக இருப்பதுதான் பெருமளவில் மனிதனின் உள்ளத்தைக் கல்லாக்கி அவனைப் பாவங்கள் புரீந்திட தூண்டக்கூடியதாக உள்ளது.ம்றுமை நாளை குறித்து அல்லாஹ் கூறுகிறான். அந்நாள் குழ்ந்தைகளை நரைக்கச் செய்துவிடும்(73:17) மனிதர்களே நீங்கள் உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக இறுதி நாளின் அதிர்ச்சி மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும். அந்தாளில் பாலூட்டும் குழ்ந்தையை மறந்து ஒவ்வொரு தாயும் தான் பாலூட்டும் குழ்ந்தையை மறந்து விடுவதையும் ஒவ்வொரு கர்ப்பிணியும் தான் சுமந்திருக்கும்குழ்ந்தையைப் பெற்றெடுத்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். மேலும் மனிதர்களை மதிமங்கியவர்களாகக் காண்பீர்கள். அவர்கள்(மதுவில்)மயங்கியவர்கள் அல்லர்.எனினும் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்(22:1,2)