17 அக்டோபர், 2010


மரணம்

மரணம் இவ்வுலகில் உயிருள்ளோரின் இறுதிக் கட்டமாகும். அல்லாஹ் கூறுகிரான். ஒவ்வொரு ஆன்மாவும் மரனத்தை சுகித்தே தீர வேண்டும்.(3:185) பூமிமீதுள்ள எல்லோரும் அழிந்துபோகக்கூடியவர்களே.(55:26) நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான்: நபியே நிச்சயமாக நீரும் மரணிக்கக் கூடியவரே இன்னும் அவர்களும் மரணிக்கக்கூடியவர்களே(39:20)இவ்வுலகம் எந்த மனிதருக்கும் நிரந்தரமானதல்ல. அல்லாஹ் கூருகிறான் நபியே உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தர வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை.(21:34)1. மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக விஷயமாகும். இவ்வாறிருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை மறந்திருக்கின்றனர், ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் மரணத்தை சந்திக்கத் தயாராக இருப்பதும் அவசியமாகும். இவ்வாறே அவன் தன் மறுமை வாழ்விற்காக இவ்வுலக வாழ்வில் அதற்குறிய நேரம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை செய்து தாயாராகிக் கொள்வது அவசியமாகும்..நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். 5 நிலைமைகள் ஏற்படுவதற்கு முன் 5 நிலைமைகளைப் பேணிக் கொள். மரணத்திற்கு முன் வாழ்வையும் நோய் வரும் முன் ஆரோக்கியத்தையும் வேலைக்கு முன் ஓய்வையும் வயோதிகத்திற்கு முன் வாலிபத்தையும் ஏழ்மைக்கு முன் செல்வத்தையும் பேணிக் கொள்.உலகிலிருந்து எந்தப் பொருளும் இறந்து விட்ட வனுடன் அவனுடைய மண்ணறைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை நிச்சயமாக அவனுடன் தங்கியிருப்பது அவனுடைய செயல்கள் மட்டுமே. எனவே நற்செயல்களைச் சித்தப்படுத்திக் கொள்வதில் நீ அக்கறை கொள். அதன் மூலம் தான் நீடித்த நற்பாக்கியத்தை நீ அடைய முடியும். அல்லாஹ்வின் உதவியால் வேதனையிலிருந்து ஈடேற்றமும் பெற முடியும்.2. தெரிந்துக் கொள். மனித வாழ்க்கை தவனை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாத அளவு தெளிவில்லாத விஷயமாகும். எனவே யார் எப்போது எந்த இடத்தில் மரண்மடைவார் என்பதை யாரும் அறிய முடியாது. திண்ணமாக இது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த மறைவான நானங்களுள் ஒன்றாகும்.3. மரணம் வந்து விட்டால் அதைத் தடுக்கவோ பிற்படுத்தவோ அதை விட்டு வெருண்டோடவோ முடையாது . அல்லாஹ் கூறுகிறான். ஒவ்வொரு சமுதாயத்தவர்களுக்கும் ஒரு தவணையுள்ளது. அவர்களின் தவணை வந்து விட்டால் அவர்கள் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.(7:34)4. ஒரு முஃமீனுக்கு மரணம் வந்து விட்டால் நறுமணம் வீசுகின்ற அழ்கிய தோற்றத்துடன் மலக்குல் மெள்த் உயிரைக் கைப்பற்றும் வானவர் அவனிடம் வருகிறார். அவருடன் சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறும் அருளுக்குரிய மலக்குகளும் வருகிறார்கள்.
Posted by இஸ்லாம் at

இறுதி நாள்..அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவனுக்கே புகழ்னைத்தும். கருனையும் ஈடேற்றமும் நபி மார்கள் ரசூல் மார்கள். அனைவரினும் மீதும் அவர்களின் குடும்கத்தார்கள் தோழ்ர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.நிச்சயமாக மறுமை நாளை நம்புவது ஈமானின் அடிப்படைகளிலும் அதன் ஆறு கடமைகளிலும் ஒன்றாகும். எனவே மறுமை தொடர்பாக இறைவேதத்திலும் ஆதாரப்பூர்வமாக நபிவழிகளிலும் வந்த வற்றை நம்பாதவரை ஒருவன் இறைவிசுவாசியாக ஆக முடியாது.. நிச்சயமாக மறுமை நாளை அறிந்து அதை அதிகமாக நினைவு கூருவது மனித வாழ்க்கையைச் சீர்ப்படுத்துதல் இறையச்சத்தை ஏற்படுத்துதல் இறைமார்க்கத்தில் உறுதியாக இருந்தல் போன்ற பல நன்மைகளுக்கு வழிகோலும் எனவே மறுமை நாளின் அமளிகள். கடுமைகள் குறித்து பாரமுகமாக இருப்பதுதான் பெருமளவில் மனிதனின் உள்ளத்தைக் கல்லாக்கி அவனைப் பாவங்கள் புரீந்திட தூண்டக்கூடியதாக உள்ளது.ம்றுமை நாளை குறித்து அல்லாஹ் கூறுகிறான். அந்நாள் குழ்ந்தைகளை நரைக்கச் செய்துவிடும்(73:17) மனிதர்களே நீங்கள் உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக இறுதி நாளின் அதிர்ச்சி மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும். அந்தாளில் பாலூட்டும் குழ்ந்தையை மறந்து ஒவ்வொரு தாயும் தான் பாலூட்டும் குழ்ந்தையை மறந்து விடுவதையும் ஒவ்வொரு கர்ப்பிணியும் தான் சுமந்திருக்கும்குழ்ந்தையைப் பெற்றெடுத்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். மேலும் மனிதர்களை மதிமங்கியவர்களாகக் காண்பீர்கள். அவர்கள்(மதுவில்)மயங்கியவர்கள் அல்லர்.எனினும் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்(22:1,2)

10 அக்டோபர், 2010


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ...

5:6. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்!...

உளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்.
கடந்த முறை பாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இவ்வுலக, மற்றும் மறுஉலக வாழ்க்கையின் நன்மைகளைப் பார்த்தோம், தொழுகையாளிகளுக்கு மட்டுமே அது சாத்தியம் என்பதையும் தொழாதவர்களுக்கு அது சாத்தியமில்லை என்பதையும் அறிந்தோம். இப்பொழுது உளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக வாழ்க்கையின் நன்மைகளைப் பார்ப்போம்.

உலக நன்மை.
பாங்கிற்கு பதிலளித்ததும் தொழுகைக்குத் தயாராவதற்கு முன் உடலில் முக்கியமானப் பகுதிகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்வதே உளூவாகும் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.

உளூச் செய்வதற்கு முன் பற்களை துலக்குவது அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அழகிய வழிமுறைகளில் உள்ளதாகும் அன்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் குச்சியின் நுனிப் பகுதியை மென்று ப்ரஸ் போல் ஆக்கிக் கொண்டு உளூவிற்கு முன் பற்களை நன்றாக துலக்கிக் கொள்வார்கள். அத்துடன் பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்துக் கொள்வது இறைவனின் திருப்தியைப் பெறும் செயல் என்றுக் கூறி மக்களையும் அவ்வாறே செய்வதற்கு ஆர்வமூட்டினார்கள்.

''பல் துலக்குதல் வாயைச் சுத்தப்படுத்தும்; இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும்' எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: நஸயீ 5இ அஹ்மத் 23072

பற்களை துலக்கி சுத்தமாக வைத்துக்கொள்வது இறைதிருப்தியை ஏற்படுத்தும் செயல் என்று சொன்ன ஒரே மார்க்கம் உலகில் இஸ்லாம் மட்டுமே. சொன்ன மாதிரியே அண்ணல் அவர்கள் தங்களுடைய இறுதிகாலம் வரை மரணத்தருவாயிலும் கூட அதைப் பின்பற்றினார்கள்

...நபி(ஸல்) அவர்கள் (கடுமையான நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் என் சகோதரர்) அப்துர் ரஹ்மான், பல் துலக்கும் மிஸ்வாக்-குச்சியைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமாக இருந்தார்கள். எனவே, நான் அந்தக் குச்சியை எடுத்துமென்று பிறகு அதனால் நபி(ஸல்) அவர்களுக்குப் பல் துலக்கி விட்டேன். என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி. 3100.

அல்லாஹ் திருப்தி அடையும் எந்த செயலிலும் இரட்டிப்பு நன்மைகள், அல்லது பலமடங்கு நன்மைகள், அல்லது பல்கிப் பெருகும் நன்மைகள், அல்லது மரணத்திற்குப் பிறகு தொடரும் நன்மைகள் என்று கொத்துக் கொத்தான நன்மைகள் அடங்கி இருக்கும்.

1400 வருடங்களுக்கு முன் அண்ணல் அவர்கள் பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருக்கும் செயலை அல்லாஹ் திருப்தி அடையும் செயல் என்றுக் கூறி, அதை அன்று அவர்களும் செய்து, மக்களுக்கும் ஏவியது அது இன்று உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு திறனையும் கொண்டுள்ளது என்பதை ஒரு நாளைக்கு இரு முறை பல் துலக்கினால் 70 சதவிகிதம் இதய நோய் வராது என்று இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர்.

பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினயதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி– 888)

அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு முன் பல்துலக்கி விட்டே உளூச் செய்வோம், அதேப்போன்று உறங்குவதற்கு முன் செய்யும் உளூவிற்கு முன்பும் பல்துலக்கி விட்டே உளூச் செய்வோம். காரணம் இந்த இரண்டு நேரமும் வீட்டிலிருப்போம் என்பதால் அண்ணல் அவர்களின் வழிமுறைப்படி பல்துலக்கி விட்டே உளூச் செய்வோம். மருத்துவர்கள் கூறிய இரண்டு முறை என்பது இதில் மட்டுமே அடங்கி விடுகிறது.

அந்த இரண்டு நேரம் போக மீதி நேரத் தொழுகைளுக்காக செய்யும் உளூவிற்கு முன்பு இயன்றால் பல்துலக்குவோம் அதற்கு இயலவில்லை என்றால் உளூவின்போது விரல்களால் பற்களை தேய்த்து தண்ணீர் விட்டு வாய் கொப்பளிப்போம் இதிலும் சாப்பிட்டப் பின் பற்களின் இடுக்குகளில் தேங்கி நிற்கும் அழுக்குகள் அதிகபட்சம் வெளியாகி விடுவதால் பாரிய இதய நோயிலிருந்து உடல் பாதுகாக்கப்படுகிறது. அல்லாஹ்வுக்கு நன்றிக்கூறி அவன் தூதருக்கு ஸலவாத் கூறுவோமாக.

மறுமைக்கான நன்மைகள்.
உளூச் செய்வதற்கு முன் அண்ணல் அவர்கள் கூறியதுப் போன்று பல்துலக்கி விட்டு அண்ணல் அவர்கள் காட்டித் தந்த வழியில் உளூவை முடித்தப் பின் அதிலிருந்து வெளியேறும் தண்ணீரில் அழுக்குடன் சேர்ந்து சிறியப் பாவங்களும் வெளியேறத் தொடங்குகிறது.

ஒரு முஸ்லிமான அடியார் உளூ செய்யும்போது முகத்தைக் கழுவினால்இ கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும்போதுஇ கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித் துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில்இ அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லீம். 412

அண்ணல் அவர்கள் காட்டித் தந்த வழியில் உளூச் செய்து முடித்ததும் கீழ்காணும் இரண்டு வார்த்தைகள் அடங்கிய துஆவைக் கூறவேண்டும்.

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு

உளூச் செய்த பின் மேற்கண்டவாறு யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர் விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: முஸ்லிம் 345

முறையாக உளூச் செய்து முடித்து விட்டு மேற்காணும் இரண்டே இரண்டு வார்த்தைகள் அடங்கிய பிரார்த்தனையைக் கூறினால் உலகில் வாழும் பொழுதே அவருக்காக சொர்க்கத்திற்கான இறைவனின் தீர்ப்பு உறுதியாகி விடுகிறது. அதற்கு இன்னும் உதாரணமாக பிலால் (ரலி) அவர்களின் காலடி ஓசையை சொர்க்கத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டது.

'பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த செயல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்பு சப்தத்தைச் சொர்க்கத்தில் நான் கேட்டேன்' என்றார்கள். அதற்கு பிலால் (ரலி) 'இரவிலோஇ பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டும் என்று நான் நாடியதைத் தொழாமல் இருந்ததில்லை. இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல்' என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 1149இ முஸ்லிம் 4497

இத்துடனும் உளூவிற்கான மறுமை நன்மைகள் முடிந்து விடாமல் இன்னும் தொடருகிறது ஒவ்வொரு தொழுகைக்கும் முறையாக உளூச் செய்தவர்களை மறுமையில் ஒளிமயமனாவர்களே ! என்றழைக்கப்பட்டு சங்கை செய்யப்படுவார்கள் என்றும் பெருமானார்(ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.

பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூ ஹுரைரா(ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) 'நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்' என்றார்கள்'' நுஅய்கி அல் முஜ்மிர் அறிவித்தார். நூல் : புகாரி 136ஃ133.

இலேசான இரண்டு வார்த்தைகள் அடங்கிய பிரார்த்தனைக்கடுத்து இரண்டு, அல்லது விரும்பிய தொழுகையை வீட்டில் தொழுதுவிட்டு பள்ளியை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அவரது கால்கள் தரையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு நன்மை எழுதி ஒருத் தகுதி உயர்த்தப்படுகிறது.

யார் உளூ செய்து அதைச் செம்மையாகவும் செய்து பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருகிறாரோ அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்;அவருக்கு ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான்.... முஸ்லிம் 1159.

சுப்ஹானல்லாஹ் தயாள குணமுடைய கருணையாளன் அல்லாஹ் தன்னை வணங்க வரும் அடியார்களுக்காக பாங்கில் தொடங்கி, உளூச் செய்வதிலிருந்து பள்ளிக்கு நடந்து வரும் வரையில் மட்டுமே மறுமையின் வெற்றிக்காக இத்தனை நன்மைகளை வாரி வழங்குகிறான் என்றால் பள்ளிக்குள் நுழைந்து அண்ணல் அவர்கள் காட்டித் தந்த முறையில் தொழுது விட்டு வெளியே வரும் பொழுது எத்தனை நன்மைகள் கிடைக்கும் என்பதை சிந்தித்தால் ஒருத் தொழுகையையாவது தவற விடுவோமா ?

வெள்ளிக்கிழமை அல்லாத பிற நாட்களில் ஒரே வரிசை அல்லது அதிகபட்சமாக இரண்டு வரிசையில் தான் பள்ளியில் கூடுகிறோம்.

நிரந்தரமான மறுமை வாழ்வுக்காக உதவக்கூடிய தொழுகையின் மூலம் குவியும் ஏராளமான நன்மைகளை அள்ளிக்கொள்ள ஒவ்வொரு நேரத் தொழுகையாலும் பள்ளியை நிரப்ப மனமில்லாமல் நிரந்தரமில்லாத உலக வாழ்க்கைக்காக உதவக்கூடிய பொருளாதாரக் குவியல்களை அள்ளிக் கொள்வதற்காக அல்லும், பகலுமாய் அல்லாஹ்வை மறந்து அலைகிறோம்.

பொருளாதாரத்தை குவிப்பதற்காக அல்லும், பகலுமாய் அலைவதை இஸ்லாம் ஒருக்காலும் தடுக்கவே இல்லை, மாறாக அதை இஸ்லாம் தூண்டுகிறது. ஆனால் அதனூடே சிறிது நேரத்தை மட்டும் ஒதுக்கி அல்லாஹ்வை தொழுது கொள்ளச் சொல்கிறது இஸ்லாம், பொருளாதாரம் ஈட்டுவதுனூடே தொழுதுகொண்டால் அந்தத் தொழுகை அவர் ஈட்டும் பொருளாதாரத்திலும் ஹராம் கலந்து விடாமல் ஃபில்டர் செய்து ஹலாலாக்குகிறது. இது இரட்டிப்பு நன்மை.

சிந்தியுங்கள் சகோதரர்களே !!!
உலகில் நம் கண் முன்னே நிகழும் நம் கண்ணின் மணியான எத்ததைனையோப் பேரின் மரணத்தை நம்மால் தடுத்து நிருத்த முடிந்திருக்கிறதா ? முடியவில்லை !

அதனால் மறுஉலகில் நமக்கு கொடுக்கப்படுகின்ற தண்டனையை நம்மால் தடுத்துக் கொள்ள முடியுமா ? முடியாது !

அல்லது சிறிய அளவிலேனும் குறைத்துக் கொள்ளவாவது முடியுமா ? அதுவும் கூட முடியாது !

மறுமையில் மிகச் சிறிய தண்டனை என்பதே சூரியன் பிடரிக்கு சமீபத்தில் எரிந்து கொண்டிருக்கும் பொழுது ஆணியினாலான செருப்பு அணிவிக்கப்பட்டு நிருத்தப்படுவது என்றால் பெரிய தண்டனை எப்படி இருக்கும் ?

சிந்தியுங்கள் சகோதரர்களே !
நிரந்தரமில்லாத உலகில் சிறிது கால இன்பத்திற்கான பொருளாதாரக் குவியலா ?

நிரந்தரமான மறு உலகில் நீண்ட கால நிம்மதிக்காக நன்மையின் குவியலா ?

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் பல்துலக்கி, முறையாக உளூச்; செய்து அதன் மூலம் உலகில் கிடைக்கும் உடல் ஆரோக்கியத்தையும், மறுமையில் ஒளிமயமானவர்களாக சுவனத்தின் திறந்த எட்டு வாசல்களில் விரும்பிய வாசலில் நுழையும் நன் மக்களாக நம்மை அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !

ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்துஇ அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தித் தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர் (ரலி) நூல்: முஸ்லிம் (397)

ஒரு நாளைக்கு இரு முறை பல் துலக்கினால் 70 சதவிகிதம் இதய நோய் வராது

17 ஆகஸ்ட், 2010

ரமளானின் மகிமை
புனிதமிகு ரமளான் மாதம் முஸ்லிம்களின் பரக்கத் என்னும் ரஹ்மத்துடைய அளப்பெரும் பொக்கிஷமாகும்.
ரமளான் மாதத்தின் முதல் இரவில் ஷைத்தான்களை விலங்கிடப்படுகிறது. நரகத்தின் தாழிட்டு சுவர்க்கம் என்னும் ரஹ்மத்தின் வாசல்களை திறந்து விடப்படுகிறது.
இப்புனிதமிகு மாதத்தின் மிகமுக்கிய வணக்கம் நோன்பாகும். நோன்பு என்றால் சுபுஹுஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பின் நிய்யத்துடன் உண்ணுவது, குடிப்பது, மனோ இச்சை சேர்க்கை செய்வது ஆகியவற்றிலிருந்து தவிர்த்து கொள்வதாகும்.
நோன்பு சம்பந்தமான ஹதீஸுகளில் நோன்பிருப்பதால் ஏற்படக்கூடிய பலாபலன்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:
’’அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்போரின் முந்தைய பாவங்களனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்’’
’’நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடவும் அதிகம் மதிப்புள்ளதாகும்’’
’’நோன்பிருப்போருக்கு அல்லாஹ்வே தனது புறத்திலிருந்து நன்மையை அளிக்கிறான்’’
’’ சுவனலோகத்தில் ‘ரய்யான்’ என்னும் வாசல்வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்’’
நோன்பில்லாதவர்களுக்கு உண்டாகும் கடுமையான கொடூரமான வேதனையைப் பற்றியும் ஹதீஸில் கூறப் பட்டுள்ளன.
‘’படைத்தவன் எஜமானனாகிய அல்லாஹுத்தஆலா அவனின் (நோன்பில்லாதவனின்) இழிவான இச்செயலால் அவனை கடுமையாக வெறுக்கிறான்’’
‘’வானவர்கள் இன்னும் நல்லோர்களின் கூட்டத்தில் அவனின் இச்செயல் இழிவானது தீயது என்று ஞாபிக்கப் படுகிறது’’
‘’ரமளான் மாதத்தில் நோன்பில்லாதவன் உண்ணக் குடிக்கச் சென்ற அவ்விடம் இவன் என்மீது பாவம்புரிந்தான் என்று மறுமையில் சாட்சி பகரும்’’
எனவே முஸ்லிம்கள் ரமளான் மாதத்தின் மகிமையை உணர்ந்து அதனின் கிரியைகளை ஏற்று நடப்பது மிக அவசியமாகும். மாறாக ரமளான் மாதத்தில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாது அசட்டையாகவும் பொழுது போக்காகவும் ரமளான் மாதத்தை கழித்து விட்டால் அதுவே தமது இம்மை மறுமையின் நஷ்ட வழிகேடாகும். இதனை முஸ்லிம்களாகிய நாம் உணர்ந்து செயல்படுவோமாக!
நோன்பு ஃபர்ளு கட்டாயக்கடமை
நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பது குர்ஆன், ஹதீஸ், இஜ்மாயே உம்மத் ஆகியவற்றால் உறுதிப் படுத்தப்பட்டதாகும்.
நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பதை மறுப்பவன் காஃபிர் ஆவான். தங்கடமின்றி நோன்பு வைக்காதவன் பெரும்பாவி தீயவனாவான்.
நோன்பின் நிய்யத்
நோன்பு வைப்பதற்கு நாவால்தான் நிய்யத் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்று நான் நோன்பு வைக்கிறேன் என்று மனத்தால் நிய்யத் செய்தாலே போது மானாதாகும்.
தமிழில் அல்லது அரபியில் நாவால் நிய்யத்செய்வது ஏற்றமானதாகும். நோன்பின் நிய்யத்:
நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா
இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன்.
உண்ணாமல் குடிக்காமல் சேர்க்கை செய்யாமல் இருந்தும் நோன்பின் நிய்யத் இல்லையாகில் நோன்பாகாது.
நோன்பின் நேரம் சுபுஹு ஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து ஆரம்பமாகின்றது. ரமளான் மாதத்தின் நோன்பின் நிய்யத்தை சுபுஹு ஸாதிக் முன்பாகவே நிய்யத் செய்வது ஏற்றமானதாகும். இருப்பினும் மதியம் உச்சத்திற்கு சிறிது நேரம் முன்பு வரையிலும் நிய்யத் செய்யலாம் கூடும். நிபந்தனையாதெனில் சுபுஹு ஸாதிகிலிருந்து சாப்பிடாமல் குடிக்காமல் உடலுறவு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.
ஸஹர் – நோன்புபிடிப்பது
ஸஹர் சாப்பிடுவது சுன்னத்தாகும். பசி இல்லை என்றாலும் சிறிதளவேனும் சாப்பிடவேண்டும் அல்லது தண்ணீராகிலும் குடித்துக் கொள்ள வேண்டும்.
ஸஹர் உடைய நேரம் பிற்படுத்திச் சாப்பிடுவது சுன்னத் தாகும் எனினும் ஸஹர் உடைய நேரம் கழிந்து விட்டதோ என்று நேரத்தில் சந்தேகம் கொள்ளும் அளவு பிற்படுத்தக் கூடாது.
இஃப்தார் – நோன்பு திறப்பது
சூரியன் மறைந்துவிட்டது என்று உறுதியானதற்குப்பின் உடன் நோன்பைத் திறந்துவிடுவது முஸ்தகப் ஆகும். நேரம் தாழ்த்துவது மக்ருஹ் ஆகும்.
மேகத்துடைய காலங்களில் இஃப்தார் – நோன்பு திறப்பதைத் தாமதித்தும் ஸஹர் – நோன்பு பிடிப்பதை தீவிர மாக்குவதும் அவசியமாகும்.
நோன்பு திறக்கும் நேரத்தில் தனது கடுமையான தேவை கம்மியாகும். அளவுக்கு முடிந்தால் சாப்பிட்டுக் குடித்துக் கொள்ள வேண்டும். அதனால் மக்ரிப் உடைய தொழுகை மனநிம்மதியுடன் பயபக்தியாக தொழுது கொள்வதற்கு வழி வகுக்கும்.
இமாம் மக்ரிப் உடைய தொழுகைக்கு தீவிரமாக்காமல் முக்ததி – பின்தொடரும் ஜனங்களை கவனத்தில்கொண்டு சிறிது நேரம் தாமதிக்கவும். அதனால் ஜனங்கள் நிம்மதியுடன் வாய் கொப்பளித்து ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
இனிப்பான பொருளைக்கொண்டு நோன்பு திறப்பது நல்லதாகும். பேரீத்தம் பழம், தண்ணீர் அல்லது மற்றவை களைக்கொண்டும் நோன்பு திறக்கலாம். சிலர் உப்பைக் கொண்டு நோன்பு திறப்பது மிகுந்த நன்மையளிக்கும் என விளங்கிக்கொண்டுள்ளனர். அது தவறாகும்.
நோன்பு திறக்கும் துஆ
அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஜ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.
’’யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!
நோன்பின் முறித்தல்கள்
1)மூக்கு அல்லது காதில் மருந்து செலுத்துவது. 2) வேண்டு மென்றே வாய்நிரம்ப வாந்தியெடுப்பது. 3)வாய்கொப்பளிக்கும் போது தொண்டையினுள் தண்ணீர் சென்றுவிடுவது. 4) கல், மண், இரும்பு போன்றவற்றை விழுங்குவது. 5) சூரியன் மறைந்துவிட்டது என தவறுதலாக எண்ணிக்கொண்டு நோன்பு திறப்பது. 6) இரவு என தவறுதலாக எண்ணிக் கொண்டு சுபுஹு ஸாதிக்குப்பின் சாப்பிடுவது. 7) பீடி, சிகரெட், குடிப்பது, வெற்றிலைப்பாக்கு சுவைப்பது. 8)அதிகம் இரத்தம் கலந்த எச்சிலை விழுங்குவது. 9) மலம் கழிக்கும் துவாரத்தில் மருந்திடுவது, பெண் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மருந்திட்டால் நோன்பு முறிந்துவிடும் ஆணுக்கு அல்ல. 10) பற்களின் இடரில் அகப்பட்ட மாமிசம் போன்றவைகளை வாயிலிருந்து வெளியாக்கிப் பின்னர் அதை உட்கொண்டால் நோன்பு முறிந்து விடும். வாயினுள்ளே தனது நாவால் அதனை அகற்றி அதுவும் ஒரு சுண்டல் அளவு பருமன் உள்ளதாக இருப்பின் அதை உட்கொள்வதால் நோன்பு முறிந்துவிடும். ஒரு சுண்டல் அளவைவிட சிறியதானால் நோன்பு முறியாது.
வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அந்தநோன்பை ‘களா’ செய்யவேண்டும். மேலும் கப்பாரா (பரிகாரமும்) வாஜிபாகும்.
நோன்புடைய கப்பாரா - பரிகாரமாகிறது.
தொடர்ந்து இரண்டு மாதகாலம் வரை 60 நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டும். இடையில் விடுபட்டுவிட்டால் திரும்பவும் 60 நாட்கள் இடைவிடாது நோன்பிருக்க வேண்டும்.
நோன்புவைப்பதற்கு சக்தியற்றிருந்தால் அறுபது மிஸ்கீன் களுக்கு காலையிலும் மாலையிலும் வயிறுநிரம்ப உணவளிக்க வேண்டும். அல்லது அறுபது மிஸ்கீன்களுக்கு ஸதகயே ஃபித்ர் உடைய அளவு அரைமரக்கால் தானியம் அல்லது தானியத்துடைய மதிப்பின் பணத்தை கொடுக்க வேண்டும்.
நோன்பை முறிக்காதவைகள்
1)மறதியாக சாப்பிடுவது, குடிப்பது, சேர்க்கை செய்வது. 2)மிஸ்வாக் பல்துலக்குவது. 3) தனது நாட்டமின்றி வாந்தி வருவது. 4) நறுமணம் நுகர்வது. 5) தனது விருப்பமின்றி தூசி, புளுதி, ஈ, கொசு தொண்டையினுள் செல்லுவது. 6) தலை மீசையின் மீது எண்ணெய் தடவுவது. 7) தூக்கத்தில் ஸ்கலிதமாவது. 8) கண்ணில் சுர்மா இடுவது, மருந்து அல்லது தண்ணீர் ஊற்றுவது. 9) எச்சில், சளியை விழுங்குவது. 10) வேண்டுமென்றே வாயநிம்பாமல் சிறிதளவு வாந்தியெடுப்பது. 11) இரவில் உடலுறவுகொண்டு சுபுஹு ஸாதிக்கு முன்பே குளிக்காமலிருப்பது. 12) இன்ஜெக்‌ஷன் – டாக்டரிடம் ஊசிமருந்து எடுப்பது. இவைகளினால் நோன்பு முறிந்துவிடாது.
நோன்பின் மக்ருஹ்கள்
1)அவசியமின்றி ஏதாவது பொருளை வாயில்போட்டு சுவைப்பது அல்லது உப்பு போன்றவைகளை சுவைத்து துப்புவது. 2) புகையிலை கொண்டு பல்துலக்குவது. 3)முழுக்குடன் குளிக்காமல் பகல் முழுவதும் கழிப்பது. 4) இரத்தம் குத்தி வாங்குவது. 5) புறம்பேசுவது அதாவது பிறரின் குறையை மறைமுகமாக பேசுவது இச்செயல் அனைத்துக் காலங்களிலும் ஹராமாகும். அதிலும் ரமளானின் காலத்தில் புறம்பேசுவது குற்றத்தை அதிகரிக்கிறது. 6) நோன்பு வைத்துக்கொண்டு ஏசி பேசி சண்டையிடுவது.
இவைகள் அனைத்தும் நோன்பின் மக்ருஹ் ஆகும். நோன்பு முறிந்துவிடாது.
நோன்பு வைக்காமலிருப்பதற்கு
அனுமதிக்கப்பட்டவர்கள்
1)வியாதியின் காரணத்தால் நோன்பிருக்க சக்தியற்றிருந்தால் அல்லது வியாதி அதிகரித்துவிடும் என்றிருந்தால் நோன்பில் லாமல் இருப்பதற்கு அனுமதி உண்டு. பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
2) கற்பஸ்திரி நோன்பிருப்பது தனது அல்லது தன்னுடைய குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமலிருப்பதற்கு அனுமதியுண்டு பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
3) தனது அல்லது பிறரின் குழந்தைக்கு பால் குடிப்பாட்டும் பெண் நோன்பு நோற்பதால் குழந்தைக்கு பால் குறைந்து விடும் கஷ்டம் ஏற்படும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமல் பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
4) பிரயாணம் செய்யும் முஃஸாபிர் (சுமார் 48 – மைல் தொலை தூரம் பயணம் செல்பவர்) நோன்பு வைக்காமலிருப் பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
பிரயாணத்தில் கஷ்டம் இடைஞ்சலில்லாமலிருப்பின் நோன்பு நோற்பதுவே ஏற்றமானதாகும். பிரயாணத்தில் தனக்கு அல்லது தன்னுடனிருக்கும் சஹாக்களுக்கு நோன்பிருப்பதினால் கஷ்டம் ஏற்படும் என்றால் நோன்பில்லாமலிருப்பதுவே நல்லதாகும்.
5) நோன்புடன் பிரயாணத்தைத் தொடர்ந்தால் அந்த நோன்பை பூர்த்திசெய்வது அவசியமாகும். பிரயாணத்தி லிருந்து நோன்பில்லாமல் சாப்பிட்டு, குடித்து ஊர் திரும்பினால் அன்றைய மீதமான நேரங்களை நோன்பைப் போன்றே இருந்து கழிக்க வேண்டும்.
6) நோன்பை விட்டு விடு என்று கொலைமிரட்டலைக் கொண்டு பயமுறுத்தப்பட்டால் நோன்பைவிட்டு விடுவதற்கு அனுமதியுண்டு. பின்னர் அதனை ‘களா’ செய்யவேண்டும்.
7) வியாதி, பசி, தாகத்தின் அதிகரிப்பால் அவரை நோட்ட மிட்ட தீன்தாரியான முஸ்லிம் வைத்தியர் அல்லது டாக்டர் உயிருக்கு ஆபத்து என குறிப்பிட்டால் நோன்பை விட்டு விடுவதற்கு அனுமதியென்ன! கட்டாயக்கடமையுமாகும். பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமுமாகும்.
8) ஹைள் – மாதவிடாய் , நிபாஸ் – பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்தம் இக்காலங்களில் பெண் நோன்பிருக்காமல் விடுபட்ட அந்த நோன்பை பின்னர் ‘களா’ செய்வது கட்டாயமாகும்.
தராவீஹின் சட்டங்கள்
புனித ரமளான் மாதத்தின் இரவுகளில் இஷாவுடைய ஃபர்ளு தொழுகைக்குப்பின் 20 ரகஅத் தராவீஹ் தொழுகை தொழுவது சுன்னத்தே முஅக்கதாவாகும். தராவீஹ் தொழுகையில் ஒரு தடவை குர்ஆன்ஷரீப் ஓதுவது அல்லது கேட்பது சுன்னத்தாகும்.
எனவே தராவீஹ் 20 ரகஅத் தொழுவது – குர்ஆன்ஷரீப் ஒரு தடவை தராவீஹ் தொழுகையில் ஓதுவது அல்லது கேட்பது ஆக இவ்விரண்டும் தனித்தனியான சுன்னத்தாகும். ஒருசில இரவுகளில் பூராகுர்ஆன்ஷரீபையும் தராவீஹ் தொழுகையில் ஓதக்கேட்டு மீதமான நாட்களில் தராவீஹ் தொழுகையை விட்டு விடுவோருக்கு ஒரு சுன்னத்தை நிறை வேற்றிய நன்மைதான் கிடைக்கும்.
குர்ஆன்ஷரீப் மனனமான ஹாபிஸ் கிடைக்காவிட்டால் அலம்தரகைப போன்ற சிறு சூராக்களை மட்டும் ஓதி தராவீஹ் தொழுகையை நிறைவேற்றிவிடலாம்.
இஷா ஃபர்ளு தொழுகைக்கு முன் தராவீஹ் தொழுகை தொழுவது கூடாது. எனவே பள்ளிவாசலில் இஷா ஃபர்ளு ஜமாஅத் முடிந்ததின் பின் வருவோர். இஷாஉடைய ஃபர்ளு தொழுகையை நிறைவேற்றிய பின்புதான் தராவீஹ் தொழுகையில் சேர வேண்டும். விடுபட்ட தராவீஹ் தொழுகையை தராவீஹ் ஜமாஅத் முடிந்ததற்குப் பின்பு தனிமையாக தொழுது கொள்ள வேண்டும்.
வித்ரு தொழுகையை தராவீஹ் தொழுகைக்கு முன் அல்லது பின் தொழுது கொள்ளலாம். எனவே தராவீஹ் தொழுகை பாக்கியுள்ளவர் வித்ரு தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றிவிட்டு பின்னர் விடுபட்ட தராவீஹ் தொழுகையை தனியாக தொழுது கொள்ளலாம்.
தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஷரீப் உடைய எழுத்துக் களின் உச்சரிப்புகள் விடுபடும் விதத்தில் மிகவேகமாக ஓதுவது பெரும்பாவமாகும். அவ்வாறு ஓதுவதால் ஓதக் கூடிய இமாமும், ஓதுவதைக் கேட்கும் முக்ததிகளுக்கும் எவ்வித நன்மையும் கிட்டாது.
ஒவ்வொரு நான்கு ரகஅத்திற்குப் பின்பும் சிறிதுநேரம் அமர்ந்திருப்பது முஸ்தஹப்பாகும். தொழுகக்கூடியவர்களின் சவுகரியத்தைக் கருதி இமாம் ருகூவு. சுஜூதுஉடைய தஸ்பீஹ்கள், ஸலவாத் போன்றவற்றை ஓதாமல் விட்டு விடுவது கூடாது.
குர்ஆன்ஷரீப் கத்தம்செய்யும் நாளில் அளவுக்கதிகமான மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது போன்ற இஸ்ராப் – மேல்மிச்சமான செலவுகள் செய்வது தவிர்க்க வேண்டியவைகளாகும். இனிப்பு வழங்குவதற்கு வலுக் கட்டாயமாக பணம் வசூலிப்பதும் பள்ளியில் இனிப்பு வழங்கும் சமயம் இரைச்சலிட்டுக் கூச்சலிடுவதும் ஒன்றுக் கொன்று ஏசிப்பேசிக்கொள்வதும் மார்க்க முரணான காரியங்களாகும்.
இஃதிகாப்
புனித் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது சுன்னத்தே முஅக்கதா அலல் கிபாயாவாகும். ஊரில் ஒருவர் மட்டும் இஃதிகாப் இருந்தால் அதுவே மற்றெல்லோருடைய பொருப்பிலிருந்தும் கடமை விடுபட்டு விடுகிறது. ஒருவர்கூட இஃதிகாபில் இல்லையாகில் எல்லோரும் சுன்னத்தை விட்ட பாவிகளாகி விடுவார்கள்.
ஆண்கள் பள்ளிவாசலிலும் பெண்கள் தன்னுடைய வீட்டின் குறிப்பான ஒரு பகுதியிலும் இஃதிகாப் இருக்க வேண்டும். இஃதிகாப் உடைய நிய்யத்தும் பெண்கள் ஹைளு, நிபாஸை விட்டும் சுத்தமாக இருத்தலும் வேண்டும். இஃதிகாப் இருக்கும் காலங்களில் ஹைளு வந்துவிட்டால் அல்லது குழந்தை பிறந்துவிட்டால் இஃதிகாபை விட்டுவிடவேண்டும்.
இஃதிகாபின்போது உடலுறவு கொள்வது, முத்தமிடுவது, கட்டிபிடிப்பது கூடாது.
இஃதிகாப் இருக்கும் ஆண் தேவையற்று பள்ளிவாசலை விட்டும் பெண் தனது இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது கூடாது. தேவையில்லாமல் இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது இஃதிகாபை முறித்து விடும் செயலாகும். இதுவரை எத்தனை நாட்கள் இஃதிகாபில் இருந்தாரோ அதுமட்டும் கூடிவிடும்.
ஆம், தன்னுடைய அல்லது மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளிக்கிளம்புவது கூடும்.
1)தன்னுடைய தேவைக்கு வெளிக்கிளம்புவது உதாரணமாக: மலம், ஜலம், கழிப்பதற்கு வெளியாகுவது.
2)மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளியாகுவது உதாரணமாக இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெறவில்லையாகில் ஜும்ஆ தொழுகைக்காக வேண்டி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வெளிக்கிழம்பிச் செல்வது.
அறிந்தோ அல்லது மறதியாகவோ உடலுறவு கொள்வது இஃதிகாபை முறித்துவிடும். இதில் ஞாபக மறதியைக் கவனிக்கப்பட மாட்டாது. இஃதிகாபில் முற்றிலும் வாய்மூடி இருப்பது மக்ரூஹ் ஆகும் வீண்பேச்சில் ஈடுபடாமல் குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும் மற்ற வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும்.

13 ஆகஸ்ட், 2010

மரணம்
மரணம் இவ்வுலகில் உயிருள்ளோரின் இறுதிக் கட்டமாகும். அல்லாஹ் கூறுகிரான். ஒவ்வொரு ஆன்மாவும் மரனத்தை சுகித்தே தீர வேண்டும்.(3:185) பூமிமீதுள்ள எல்லோரும் அழிந்துபோகக்கூடியவர்களே.(55:26) நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான்: நபியே நிச்சயமாக நீரும் மரணிக்கக் கூடியவரே இன்னும் அவர்களும் மரணிக்கக்கூடியவர்களே(39:20)

இவ்வுலகம் எந்த மனிதருக்கும் நிரந்தரமானதல்ல. அல்லாஹ் கூருகிறான் நபியே உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தர வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை.(21:34)

1. மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக விஷயமாகும். இவ்வாறிருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை மறந்திருக்கின்றனர், ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் மரணத்தை சந்திக்கத் தயாராக இருப்பதும் அவசியமாகும். இவ்வாறே அவன் தன் மறுமை வாழ்விற்காக இவ்வுலக வாழ்வில் அதற்குறிய நேரம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை செய்து தாயாராகிக் கொள்வது அவசியமாகும்..
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். 5 நிலைமைகள் ஏற்படுவதற்கு முன் 5 நிலைமைகளைப் பேணிக் கொள். மரணத்திற்கு முன் வாழ்வையும் நோய் வரும் முன் ஆரோக்கியத்தையும் வேலைக்கு முன் ஓய்வையும் வயோதிகத்திற்கு முன் வாலிபத்தையும் ஏழ்மைக்கு முன் செல்வத்தையும் பேணிக் கொள்.
உலகிலிருந்து எந்தப் பொருளும் இறந்து விட்ட வனுடன் அவனுடைய மண்ணறைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை நிச்சயமாக அவனுடன் தங்கியிருப்பது அவனுடைய செயல்கள் மட்டுமே. எனவே நற்செயல்களைச் சித்தப்படுத்திக் கொள்வதில் நீ அக்கறை கொள். அதன் மூலம் தான் நீடித்த நற்பாக்கியத்தை நீ அடைய முடியும். அல்லாஹ்வின் உதவியால் வேதனையிலிருந்து ஈடேற்றமும் பெற முடியும்.
2. தெரிந்துக் கொள். மனித வாழ்க்கை தவனை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாத அளவு தெளிவில்லாத விஷயமாகும். எனவே யார் எப்போது எந்த இடத்தில் மரண்மடைவார் என்பதை யாரும் அறிய முடியாது. திண்ணமாக இது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த மறைவான நானங்களுள் ஒன்றாகும்.
3. மரணம் வந்து விட்டால் அதைத் தடுக்கவோ பிற்படுத்தவோ அதை விட்டு வெருண்டோடவோ முடையாது . அல்லாஹ் கூறுகிறான். ஒவ்வொரு சமுதாயத்தவர்களுக்கும் ஒரு தவணையுள்ளது. அவர்களின் தவணை வந்து விட்டால் அவர்கள் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.(7:34)
4. ஒரு முஃமீனுக்கு மரணம் வந்து விட்டால் நறுமணம் வீசுகின்ற அழ்கிய தோற்றத்துடன் மலக்குல் மெள்த் உயிரைக் கைப்பற்றும் வானவர் அவனிடம் வருகிறார். அவருடன் சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறும் அருளுக்குரிய மலக்குகளும் வருகிறார்கள்.

இறுதி நாள்..

அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவனுக்கே புகழ்னைத்தும். கருனையும் ஈடேற்றமும் நபி மார்கள் ரசூல் மார்கள். அனைவரினும் மீதும் அவர்களின் குடும்கத்தார்கள் தோழ்ர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
நிச்சயமாக மறுமை நாளை நம்புவது ஈமானின் அடிப்படைகளிலும் அதன் ஆறு கடமைகளிலும் ஒன்றாகும். எனவே மறுமை தொடர்பாக இறைவேதத்திலும் ஆதாரப்பூர்வமாக நபிவழிகளிலும் வந்த வற்றை நம்பாதவரை ஒருவன் இறைவிசுவாசியாக ஆக முடியாது.. நிச்சயமாக மறுமை நாளை அறிந்து அதை அதிகமாக நினைவு கூருவது மனித வாழ்க்கையைச் சீர்ப்படுத்துதல் இறையச்சத்தை ஏற்படுத்துதல் இறைமார்க்கத்தில் உறுதியாக இருந்தல் போன்ற பல நன்மைகளுக்கு வழிகோலும் எனவே மறுமை நாளின் அமளிகள். கடுமைகள் குறித்து பாரமுகமாக இருப்பதுதான் பெருமளவில் மனிதனின் உள்ளத்தைக் கல்லாக்கி அவனைப் பாவங்கள் புரீந்திட தூண்டக்கூடியதாக உள்ளது.
ம்றுமை நாளை குறித்து அல்லாஹ் கூறுகிறான். அந்நாள் குழ்ந்தைகளை நரைக்கச் செய்துவிடும்(73:17) மனிதர்களே நீங்கள் உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக இறுதி நாளின் அதிர்ச்சி மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும். அந்தாளில் பாலூட்டும் குழ்ந்தையை மறந்து ஒவ்வொரு தாயும் தான் பாலூட்டும் குழ்ந்தையை மறந்து விடுவதையும் ஒவ்வொரு கர்ப்பிணியும் தான் சுமந்திருக்கும்
குழ்ந்தையைப் பெற்றெடுத்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். மேலும் மனிதர்களை மதிமங்கியவர்களாகக் காண்பீர்கள். அவர்கள்(மதுவில்)மயங்கியவர்கள் அல்லர்.எனினும் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்(22:1,2)

5 ஏப்ரல், 2010

பெருமானாருக்குப் பெயர் சூட்டுதல்

கேள்வி : அரேபியரின் வழக்கம் என்ன?

பதில் : அரபு நாட்டிலே அரேபியர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் ஏழாம் நாள் இரு கிடாய் அறுத்து அகீக்கா கொடுப்பது வழக்கமாக இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அருமை பாட்டனார் இரு நல்ல கொழுத்த கிடாய் அறுத்து அகீக்கா கொடுத்ததோடல்லாமல். மக்காவிலுள்ள மக்களுக்கும் தம் உறவினர்கள் அனைவருக்கும் மாபெரும் விருந்து ஒன்றினை நடத்தினார்கள்.

விருந்து...

பேரக் குழந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விருந்தின் காரணமாக மக்கா நகரில் மகிழ்ச்சியும் ஆனந்த களிப்பாட்டமும் மிகுந்திருந்தன. மகிழ்ச்சிப் பெருக்கினால் ஆண்களும் பென்களும் ஒருவர் மற்றொருவர் கையைச் கோர்த்து ஆனந்த நடனமாடினார்கள் இசை முழக்கம் அதிகமாக இருந்தது விருந்து நடக்கும் நேரம் வந்துவிட்டது. அப்துல் முத்தல்பின் உறவினர்கள். செல்வந்தர்கள். அவரவர் ஆட்களோடு கூட்டங் கூட்டமாக வந்தார்கள். இதைத் தவிர்த்து விருந்து நடக்கும் மாளிகையில் மக்கள் கூட்டம் வரிசை வரிசையாக அமர்ந்திருந்தார்கள்.இன்னும் மக்காவிலிருந்து குறைஷி தலைவர்களெல்லாம் ஒரு பக்கமாகவும் வர்த்தகப் பெருமக்களெல்லாம் மற்றொரு பக்கமாகவும் கற்ற பெருமக்கள் குருமார்கள். படைத் தளபதிகள் ஆகியோர் இன்னொரு பக்கமாகவும் தோரணம் தொருத்தாற்போன்று வரிசையாக அவர்ந்திருந்த காட்சி அழகாக இருந்தது. இக்கூட்டத்தினருக்கு மத்தியில் அருசுடை உணவு கொண்டு வந்து வ்ஐக்கப்பட்டது அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு அதன் சுவையையும் உணவு பறிமாறுகின்ற சிறப்பையும் பற்றி ஒருவர் மற்றவர்ரோடு உரையாடிக் கொண்டே வயிறு நிறைய உனவு உன்கிறார்கள். விருந்து அனைவரும் மனதிருப்தி அடையும் விதத்தில் நல்லபடியாக நடந்து முடிந்தது.

4 ஏப்ரல், 2010

உலகில் நடந்த அற்புதங்கள்.

கேள்வி: நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்த வருஷம் குறைஷி மக்களுக்கு மாபெரும் வெற்றிகிடைத்த வருஷமாக இருந்தது. மேலும் நல்ல செழிப்பாகவும் இருந்தது. இதற்கு முன்னர் குறைஷியர் பஞ்சத்தால் கஷ்ட்டப்பட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் பிறந்த வருஷத்தில் நல்ல மழை பெய்ததால் மரங்கள் தளிர்ந்து பூத்துக் கனிகளை அதிகமாகத் தந்தன.

ஈரான் சக்கரவர்த்தியான கிஸ்ராவின் மாளிகை மாபெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி அதிலுள்ள பதினான்கு ஸ்தூபிகளும் விழுந்துவிட்டன. இதற்கு பின்பு நடந்த நிகழ்ச்சிகளை கவனிக்கும் போது இன்னும் பதினான்கு பேர்கள் தான் அந்த நாட்டு அரியனையில் அமர்ந்து அரசாட்சி செலுத்துவார்கள். அதற்குப் பின்பு அந்த அரசாங்கமே இல்லாமல் போய்விடும் என்பதற்கு முன்னறிவிப்பாக இருந்தது என்று சொல்லப்படுகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்ததிலிருந்து நான்கு ஆண்டுகளில் பத்துப் பேர் ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி பட்டத்துகு வந்தார்கள். இதற்குப்புறம் ஹலரத் உதுமான்(ரலி) அவர்கள் கலீபாவாக பதிவி வகிக்கும் காலம் வரையில் நால்வர் பட்டத்துக்கு வந்தார்கள் பின்பு அந்தஹ் நாடு முஸ்லிம் அரசாங்கத்தின் இரு பாகமாக மாறி மாமன்னன் கிஸ்ராவின் அரசாங்கம் நிரந்தரமாக மறைந்துவிட்டது.

பலஸ்தீனத்திலுள்ள தப்ரியா நகரிலுள்ள ஏரியில் தண்ணீர் வற்றி வறண்டு போய்விட்டது. இப்பிரதேச மக்களுக்கு பெரும் போர் ஏற்பட்டு கஷ்டம் வரும் என்பதற்கு இது முன்னறிவிப்பாக இருந்தது. அதேபோல் பின்னர் ஹலரத் உமர் பாரூக் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் போர் ஏற்பட்டு முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.

பாரசீகர் பெருமபாலும் நெருப்பை வணங்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.இவர்கள் வணங்கி வந்த பெரும் நெருப்புக்குண்டம் அனைந்து விட்டது.இது ஆயிரம் ஆண்டுகளாக அவர்களால் பாதுகாக்கப்பட்ட நெருப்புக் குண்டமாகும். இந்நெருப்பு அனைந்ததானது எதிர்காலத்தில் இவர்களின் மத்திற்கு எந்தவித செல்வாக்கும் இல்லாமல் போகும் என்பதற்கு முன் அடையாளமாக இருந்தது.

வானில் எரிகொள்ளிகள் அதிமகாயின இதற்கு முன்னரும் இருந்தன ஆனால் அவ்வள்வு அதிகமாக இல்லை ஏனென்றால் ஷைத்தான்கள் வானத்திற்குச் செல்வது தடுக்கப் பட்டிருப்பதாகவும் ஷைத்தான்கள் அங்கு செல்லும் போதெல்லாம் மலக்குகள் அவர்களை எரிகொள்ளிகளால் துரத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் இவ்வுலகில் நடக்கப்போகும் செய்திகளை திருட்டுத் தனமாக கேட்டு வந்து குறிகொல்பவர்கள் கோடாங்கி காரர்களிடமும் அச்செய்திகளை கூட்டிக் குறைத்துச் சொல்லி பாமர மக்களை வழி தவறச் செய்து கொண்டிருந்தனர்.

13 மார்ச், 2010

கேள்வி : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சுவர்க்கவாதிகள் என்று அறிவித்து பத்துப் பேர்களில் ஒருவரான ஹலரத் அப்துர் ரஹ்மானிப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் அருமைத் தாயார்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறப்பதற்கு ஆமினா நாச்சியாருக்கு உதவி செய்தார்கள்.
கேள்வி : பெருமானார் தாய் வயிற்றிலிருந்து வரும்பொழுது (பிறக்கும் பொழுது) எந்தக் கோலத்தில் வந்தார்கள்?
பதில் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தாய் வயிற்றிலிருந்து இப்புவிக்கு வந்த பொழுது விண்னை நோக்கியவர்களாக தரையில் தங்களது கையை வைத்துப் பிறந்தார்கள். மேலும் அவர்கள் தாயார் கர்ப்பவதியாக இருக்கும் பொழுது ஏனைய கர்ப்பினிகள் பிரசவ சமயத்தில் அடையும் வேதனைகளையோ சிரமங்களையோ தாம் அடைந்ததில்லை என்று ஆமினா அம்மாள் அவர்கள் கூறுகிறார்கள்.
கேள்வி : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்த செய்தியை உறவினர்களுக்கும் மக்கத்து மக்களுக்கும் தெரிவித்தது யார்?
பதில் : பெருமானாரின் சிறிய தந்தையான அபூலஹபின் அடிமைப் பென்னான துவைபா என்பவரால் முதன் முதலாக இச்செய்தி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பாட்டனாரான அப்துல் முத்தலுபுக்குத் தெரிவிக்கப்பட்டது.
கேள்வி : அப்பொழுது அப்துல் முத்தலிபு அவர்கள் எங்கிருந்தார்கள்?
பதில் : அப்துல் முத்தலிபு கஃபாவை தவாபு செய்து கொண்டிருந்தார்கள்.
3. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சிர்ரப்பு
கேள்வி : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் எப்பொழுது எந்த நாட்டில் எங்கு பிறந்தார்கள்?
பதில் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அரபு நாட்டில் மக்காவில் யானைச் சண்டை நடந்த வருடம் ரபீஉல் அவ்வல் மாதம் 12ஆம் தேதி அதாவது கி.பி.570 வருடம் ஆகஸ்ட் மாதம் திங்கட்கிழமை (20 ஆம் தேதி) அதிகாலையில் பிறந்தார்கள்.
கேள்வி : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மக்காவிலே எந்த இடத்தில் பிறந்தார்கள்?
பதில் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மக்காவிலே எந்த இடத்தில் பிறந்தார்கள்?
பதில் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஸூகுல்லைல் (மாலைக் கடைவீதி) என்ற கடைத் தெருவில் (பிற்காலத்தில் ஹஜ்ஜாஜுப்னு யூசுபின் சகோதரர்)முஹம்மதிப்னு யூசுப் வீடு என்ற யாவராலும் அழைக்கப்பட்டு வந்த வீட்டில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்தார்கள் இந்த வீடு நபிகள் பெருமானாரின் பாட்டனார் அப்துல் முத்தலிபுக்கு உரிமையான வீடாக இருந்தது. அப்புறம் அபூதாலிப் அவர்களும் அவர்களுக்குப் பின்னர் அவருடைய மகன் அகீலும்(உகைலும்) சொந்தமாக்கிக் கொண்டார்கள். இந்த வீட்டை அப்பாஸிய கலீபாக்களான ஹாதி, ஹாரூன் ரஷீத் ஆகியோரின் தாயாரான கைஜுரான் என்பவர் அதிகப் பணம் கொடுத்து வாங்கி மஸ்ஜிதாக மாற்றினார்.

11 மார்ச், 2010

கேள்வி : அப்ரஹாவின் நிலை என்ன ஆயிற்று?
பதில் : திருமக்காவினுள் நுழைவதற்கு அப்ரஹா தயாராகி முதன் முதலில் தன்னுடைய படைகளில் இருந்த யானைகளை முன்னே செல்லக் கட்டளையிட்டான். இந்த யானைகளில் தலைமையானதும் பல சண்டைகளுக்குச் சென்று வந்ததுமான யானையின் பெயர் மஹ்மூது என்பதாகும்.
இந்த யானையை மக்காவின் திசையை நோக்கி ஓட்டும் போதெல்லாம் அது வேறு திசையிலே செல்லும் மீண்டும் இதை மக்காவை நோக்கிக் திருப்பிவிட்டால் அது ஹரம் எல்லையில் படுத்துக் கொள்ளும் அப்படியே செய்தன. இந் நிலையில் இறைவனால் அனுப்பப்பட்ட அந்தப் இரண்டிலும் வைத்திருந்த கற்களை அப்படை வீரர்களின் மீது வீசின.
இந்தக் கற்கள் இரும்புக் கவசங்களையும் துளைத்துக் கொண்டு உடம்பில் பாயும் சக்தியை பெற்றவையாக இருந்தன. பறவைகளின் பாயும் சக்தியை பெற்றவையாக இருந்தன. பறவைகளின் கல்லடி தாங்க முடியாமல் படைகள் நாலாபக்கமும் சிதறி ஓடின. பெரும்பாலான படை வீரர்கள் அடிதாங்க முடியாமல் மடிந்தனர் உயிர் தப்பியவர்களும் அப்ரஹாவும் எமன் நாட்டின் திசை நோக்கிச் சென்றனர்.
ஆனால் பறவைகள் அப்ரஹாவிஅயும் விட்டு வைக்க வில்லை. அவனுக்கு பலத்த அடி கொடுத்ததில் அவனது உடம்பெல்லாம் இனங் காணமுடியாத கடுமையான நோய் ஏற்பட்டு விரல்களெல்லாம் துண்டு துண்டாக விழுந்து விட்டன சிறகு ஒடிந்த பறவையைப் போல் தன்னுடைய நாட்டிற்குச் சென்று சில நாட்களில் மரணமடைந்தான்.
மலைமீது இருந்து கொண்டு படைபவரும் திசையை எதிர்பார்த்த வண்ணமிருந்த அப்துல் முத்தலிபு படைகள் ஏன் வரவில்லை என்று அறிவதற்காகத் தாமே அப்ரஹாவின் படைவீரர்கள் இருந்த இடத்திற்குப் போனார். அங்கு முஸ்தலிபாவிற்குப் பக்கத்தில் ஹரம் ஷரிபின் எல்லை யோரத்தில் அவர்கள் பெரும்பாலோர் இறந்து கிடப்பதைப் பார்த்தார்.
பின்னர் அந்த ஆப்ரவிடம் படைவீரர்கள் விட்டுச் சென்ற முக்கிய தளவடங்களையும் தங்கம் வெள்ளி சாமான்களையும் எடுத்துக் கொண்டு மறைந்திருந்த மக்கத்து மக்களுக்குச் செய்தியைச் சொல்லி அவர்களை ஊருக்குள் அழைத்து வந்தார்,
அன்புள்ள வாசகர் பெருமக்களே! கஃபாவை இடிக்க வேண்டும் என்ற நோக்கோடு பெரும் படைகளைதிரட்டிக் கொண்டு வந்தான் அப்ரஹா அவனுடைய எண்ணம் மட்டும் நிறைவேறி இருந்தால் அன்றே மக்காவில் அபிசீனிய ஆட்சி நுழைந்திருக்கும் அரபு நாட்டு மக்கள் அபிசீனிய அடிமையாக வாழ்ந்து தம் அரசியல் சுதந்திரத்தையும் இழந்திருப்பார்கள். எனவே தாங்கள் காப்பாற்றப்பட்ட இந்த நிகழ்ச்சியை அரபு மக்கள் பெரிதென மதித்து அரபி வருடத்தை கணித்தார்கள். இந்த சம்பவம் பற்றி அருள் மறையாம் திருமறையில் ஸூரத்துல்பீல் என்ற அத்தியாயத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது.
கேள்வி : அப்துல் முத்தலிபின் பிரார்த்தனை யாது?
பதில் : தன் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு மக்காவிற்கு வந்த அப்துல் முத்தலிபு அப்ரஹாவிடம் நடந்த உரையாடலைப் பற்றிச் சொல்லி விட்டு உங்களுடைய பொருளையும் குடும்பத்தார்களையும் அப்புறப்படுத்தி மக்காவிற்கு வெளியில் சென்று மலைகளிலும் கண வாய்களிலும் மறைந்து கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டார்.
பின்பு நேராக கஃபாவிற்கு வந்து அதன் வளையத்தைப் பிடித்துப் கொண்டு இறைவனிடம் பிரார்த்திதார் அப்பொழுது நூதனமான பல பறவைகள் வானில் பறந்தன. இதற்கு முன்பு இவர் அது மாதிரிப் பறவைகளைப் பார்த்ததே இல்லை.
இந்தப் பறவைகள் நஜ்தையோ திஹாமானவயோ சேர்ந்தவையாகச் தெரியவில்லை இறைவனின் மீது ஆனையாகச் சொல்கிறேன் இந்தப் பறவைகளுக்கு ஏதோ வேலை இருக்கின்றது என்று மலைமீது ஏறி இருந்து கொண்டு அப்ரஹாவின் படை வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்துல் முத்தலிபின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட இறைவன் சிறிது நேரத்திற்குள்ளாக கரியமேனியும் மஞ்சள் நிற மூக்கும் உள்ள பறவைக் கூட்டங்களை அனுப்பினான். இவற்றின் கழுத்துக்கள் பச்சை நிறத்தில் இருந்தன. இவை ஒவ்வொன்றின் வாயில் ஒரு கல்லும் இரு கால்களிலும் இரண்டு கற்களுக் இருந்தன இந்தக் கற்கள் கடலையைவிடச் சிறியவைகளாகவும் பருப்பபைவிடச் சற்றுப் பெரியவையாகவும் இருந்தன.

4 மார்ச், 2010

ஆப்ரஹாவின் ஏமாற்றம்

கஃபாவை இடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதற்காகத் தான் அப்துல் முத்தலிபும் அவருடைய ஆட்களும் வந்திருக்கின்றார்கள் என்று என்னி பெருமகிழ்ச்சி அடைந்து அப்துல் முத்தலிபையும் அவரோடு வந்திருப்பவர்களையும் அப்ரஹா மரியாதையாக வரவேற்றுத் தன் அரியசனத்தை விட்டு இறங்கித் தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் அப்துல் முத்தலிப்புக்கு அருகில் அமர்ந்து சிரித்த முகத்தோடு, "அப்துல் முத்தலிபு அவர்களே! தாங்கள் இங்கு வந்த நோக்கம் என்ன? என்று கேட்டான்.

அதற்கு அப்துல் முத்தலிபு: அரசே! என்னுடைய ஒட்டகங்கள் காட்டில் மேய்ந்து கொண்டிருந்தன அவற்றைத் தங்களுடைய ஆட்கள் ஓட்டிக் கொண்டு வந்து விட்டனர் அவற்றை எங்களிடத்தில் ஒப்படைந்து விட வேண்டும் என்று சொல்லித்தாங்கள் அவர்களுக்குக் கட்டளை இடவேண்டும் என்ரு சொல்லத்தான் நான் தங்களைப் பார்க்க வந்தேன் என்றார்.

இதைக் கேட்ட அப்ரஹா ஆச்சரியத்துடன் தாங்கள் கஃபவைப் பற்றி எந்தப் பேச்சுமே பேசவில்லையே ஏன்? அதனை இடிப்பதற்குத் தானே நான் வந்திருக்கின்றேன். பூரிவீக காலமாகவே இதில் தானே உங்களது பெருமையும் சிறப்பும் அடங்கியுள்ளது இதன் காரணமாகத்தானே உங்களுக்குப் பாதுகாவல் இருந்து வருகின்றது அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாலம் கேட்கின்றீர்களே? என்றான்.

அதற்கு அப்துல் முத்தலிபு அவர்கள் ஒட்டகைக்கு நான் சொந்தக்காரன் கஃபாவிற்கு நான் சொந்தக்காரன் அல்லன் அதற்குரியவன் வேறு இதற்கு முன்பு ஸைபுன்னு தீயத்னைன். இஸ்ரா போன்றாரை விட்டும் அவன் தான் காப்பாற்றினான்! இப்போதும் அவனே அதைக் காப்பபற்றிக் கொள்வான்! என்றார்கள்.

அப்ரஹா இதைக் கேட்டு கடுங்கோபங் கொண்டு அதிகாரிகளைப் பார்த்து அப்துல் முத்தலிபின் ஒட்டகங்களைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்னைத் தவிர இந்த கஃபாவை யார் காப்பாற்றுவார்? என்பதை அவர் பார்க்கட்டும் என்றான்.

அப்துல் முத்தலிப் தம் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு மக்காவிற்கு வந்துவிட்டார்.

கேள்வி : மக்காவிற்குப் படைகளை கூட்டிச் செல்ல வழிகாட்டியாக இருந்தது யார்?
பதில் : தகீபு கோத்திரத்தின் தலைவன் அபுரிகால் என்பவனைப் படைக்கு வழிகாட்டுவதற்காக நியமித்தான். இவன் வழியிலேயே இறந்து போனான்.இறந்த இடத்திலேயே அடக்கம் செய்தார்கள் எமன் தேசத்திலிருந்து வரும் ஹாஜிகள் இவன் சமாதியைப் பார்த்தவுடன் கல்லால் அடித்து விட்டுத்தான் வருவார்கள்,


கேள்வி : அப்ரயாவின் படையெடுப்பைப் பார்த்த அரபு கோத்திரத்தார் என்ன செய்தார்கள்?
பதில் : புனித கஃபாவை இடிப்பதற்காக அப்ரஹா படையெடுத்து வருவதை அறிந்த அரபு கோத்திரத்தார் பலர் அப்ரஹாவின் படைகளை வழிமறித்து எதிர்த்தனர் முறைப்படி சண்டைப் பயிற்சி பெறாத அரபு கோத்திரத்தார் தோல்வியடைந்து சிதறடிக்கப்பட்டார்கள். ஆனால் தாயிப் நகரமக்கள்.அப்ரஹாவுடன் ஒத்துழைத்து அவனுக்கு வழி காட்டுதற்காக ஒரு நபரையும் அனுப்பி வைத்தார்கள்.


கேள்வி : மக்கத்து மக்களின் மனநிலையை அறிய யாரை வேவு பார்க்க அனுப்பி வைத்தான்?
பதில் : மக்கத்து மக்களின் மனநிலையை அறிய அல் அஸ்வதுப்னு மக்ஸுத் என்ற அபிசீனியரின் தலைமையில் சிலரை வேவு பார்க்க அனுப்பி வைத்தான்.


கேள்வி : வேவு பார்க்கச் சென்றவர்கள் என்ன செய்தார்கள்.?
பதில் : மக்காவிற்கு அருகாமையில் மேய்ந்து கொண்டிருந்த அப்துல் முத்தலிபின் ஒட்டகங்களையும் மற்றவர்களின் கால்நடைகளையும் ஒட்டிக் கொண்டு சென்று விட்டனர்.


கேள்வி : அப்ரஹாவின் கஃபாவைப் பற்றி இடையில் தோன்றிய நல்லென்னம் யாது?
பதில் : மக்கத்து மக்கள் யாராவது வந்து தன்னிடத்தில் மிகத் தயவோடு கேட்டுக் கொண்டால் மக்காவை நாசப் படுத்தாமல் சென்று விடலாம் என்று என்னிய அப்ரஹா ஹுனாதத்துல் ஹிம்யரீ என்பவரைத் திருமக்கா விற்கு தூது அனுப்பினான்.
தூதின் விபரம் : 1 அரசப் பிரதிநிதியான அப்ரஹா தங்களோடு சண்டைக்கு வரவில்லை கஃபாவை இடிப்பதற்காகத்தான் வந்திருப்பதாகவும் அவர்களின் தலைவர் எவரையேனும் பேச்சு வார்த்தைகளுக்காகத் தன்னிடம் அனுப்பும் படியும் தூதனுப்பினான். இந்தச் செய்தியானது அப்போது கஃபாவின் முத்தவல்லியாக இருந்த அப்துல் முத்தலிபுக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் தெரிவிக்கப்பட்டது.


கேள்வி : செய்தி அறிந்த அப்துல் முத்தலிபு எடுத்த நடவடிக்கை என்ன?
பதில் : அப்துல் முத்தலிபு ஹாஷிம் குடும்பத்தார் சிலரை தம்மோடு அழைத்துக் கொண்டு அப்ரஹாவைப் பார்க்கச் சென்றார்.

3 மார்ச், 2010

கேள்வி : ஜுஹைர்ருப்னு பத்ர் என்பவர் செய்த சூழ்ச்சி என்ன?
பதில் : அரபு நாட்டு மக்கள் செய்தியறிந்து மன வேதனையுடன் இருக்கும் நேரத்தில் ஹுஹைருப்னு பத்ர் என்பார் அப்ரஹா கட்டிய தேவாலயத்தை அசிங்கப் படுத்துவேன் என்று சபதம் செய்து கொண்டு நேரடியாக ஸன் ஆவுக்கு வந்து அவ்வாலயத்தில் பயபக்தியுடன் வணங்குவது போல நடித்தார் இவருடைய நடிப்பை உணராத் தேவாலயத்தை சார்ந்தோர் அங்குள்ள ஊழியர்களில் ஒருவராக அவரைத் தேர்ந்தோர் அங்குள்ள ஊழியர்களில் ஒருவராக அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இதன் பின்னர் ஜுஹைர் தக்க தருணத்தில் தம் சபதத்தை நிறைவேற்றி அந்த ஆலயத்தை அசுத்தப்படுத்தி விட்டு மறைந்துவிட்டார்.
கேள்வி : இச்செய்தி அறிந்த அப்ரஹா என்ன செய்தான்?
பதில் : தாங்க முடியாத அளவுக்கு ஆவேசமும், ஆத்திரமும் அடைந்து திருமக்காவிலுள்ள கஃபாவை இடித்தெறிந்தால் தான் இவ்வவமதிப்புக்குத் தக்க பரிகாரம் ஆகும் என முடிவு கட்டினான். மேலும் கஃபா இருக்கும் வரையில் தன் தேவாலயத்திற்கு எந்த மதிப்பும் இராது என்பதை உண்ர்ந்து, அபிஸீனிய மன்னனுக்குச் செய்தி தெரிவித்து மாபெரும் படையோடு மக்காவை நோக்கிப் புறப்பட்டான்

27 பிப்ரவரி, 2010

2. யானைப்படை
கேள்வி : யானைச் சண்டை என்பதென்ன? இது எங்கே எப்பொழுது நடந்தது?
பதில் : அபிசீனிய நாட்டரசனின் பிரதிநிதியாக விள்ங்கிய (எமன் தேசத்தில்) அப்ரஹாவின் யானைப் படைக்கு, கஃபாவின் தலைவராக விளங்கிய ஹலரத் அப்துல் முத்தலிபின் குடுகக்களுக்கும் இடையே நடந்த போர் தான் யானைச் சண்டை என்ப்படும். இது நடந்த வருடத்தை யானை வருடம் என்று சொல்லப்படுகின்றது. இது கி.பீ 570 ஆண்டு மக்காவின் எல்லையில் நடந்தது.
இந்தப் சண்டை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பாக நடந்தது. எமன் மாகாணம் அபிஸீனியா தேசத்து அரசன் ஆட்சியின் கூழ் கொஞ்ச காலம் இருந்தது. அப்போது அந்த அரசனின் பிரதிநிதியாக அப்ரஹா என்பான் இருந்தான். அவன் பதவிக்கு வருவதற்கு முன் அரியாத் என்பவர் எமன் தேசத்தை ஆண்டு வந்தார். அப்ரஹாவின் சூழ்ச்சியால் அரியாத் கொல்லப்பட்டார். இதன் பின்னர் தான் அப்ரஹா அரசர் பிரிதிநிதியானான். இது அபிஸீனியா நாட்டு மன்னனுக்குத் தெரிந்துவிட்டது., மன்னனுடைய வருத்தத்தைப் போக்கி, மன்னனைத் திருப்தி செய்வதற்காகத் தன் தலைநகரில் ஒரு தேவாலயத்தைக் கட்டி அனைவரும் அந்த ஆலயத்தில் வந்துதான் வழிபட வேண்டும் என்று தன் குடிமக்களுக்கு கட்டளையிட்டான். அன்றியும் ஹஜ்ஜு செய்ய வருவோரும் இந்த தேவாலயத்திற்கு வந்து போக வேண்டுமென்று அறிவித்தான்.
இந்தக் கோவிலை பல விதத்திலும் அழகுபடுத்தி வைத்தான். ஹஜ்ஜு செய்ய வருவோர் அனைவரும் இந்த தேவாலயத்திற்கு வந்தால் அரபு நாட்டு மக்களின் செல்வங்களின் கணிசமான ஒரு பகுதி இவ்வாலயத்திற்கு வருமானமாகக் கிடைக்கும் என்பது அவன் எண்ணம். இந்தச் செய்தி அரபு நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரிய வந்தது.
பூமான் நபியின் புனித வாழ்க்கை.
  1. மூதாதையர்

கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தந்தை பெயர் என்ன?

பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தந்தை பெயர் அப்துல்லாஹ் என்பதாகும்.

கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தந்தை வழிப் பாட்டனார் யார்?பாட்டியார் யார்?

பதில் : தந்தையைப் பெற்ற பாட்டனார் பெயர் அப்துல் முத்தலிபு, பாட்டியின் பெயர் பர்ரா.

கேள்வி : தந்தை உடன் பிறந்த ஆண்கள் எத்தனைப் பேர்; அவர்களுடைய பெயர் என்ன?

பதில் :

  1. ஹாரிது,
  2. ஜுபைர்,
  3. அபூதாலிப்,
  4. அப்துல் கஃபா,
  5. அப்துல்லாஹ்,
  6. அபூலஹப் (அப்துல் உஸ்ஸா),
  7. முகவ்விம்,
  8. ஹஜல்,
  9. முங்ய்ரா,
  10. ஹம்ஜா,
  11. ளர்ரார்,
  12. குதம்,
  13. அப்பாஸ்,
  14. ங்தாக்,
  15. முஸ் அப்

இந்த பதினைந்து பேர்களும் தந்தை உடன் பிறந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் னீதாக் என்பவருக்கு ஹஜன் என்றும் அப்துல் கஃபா என்பவர்தான் முகவ்விம் என்றும் கூறுகின்றார்கள். குதம் என்று யாருக்குமே பெயர் இல்லை என்பதாகச் சரித்திர ஆசிரியர் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் கூறிய கூற்றுப்படிப் பார்க்கப் போனால் அப்துல் முத்தலிபு அவர்களுக்கு பன்னிரண்டு ஆன் மக்களாவார்கள்.

கேள்வி : தந்தை உடன் பிறந்த பெண்மக்கள் எத்தனை பேர் அவர்கள் பெயர் என்ன?

பதில் : உம்முஹகீம், பைளாஉ, உமைமா. அர்வா, பர்ரா, ஆத்திகா,ஸபிய்யா ஆகிய ஏழு பேர்களும் தந்தையுடன் பிறந்த பெண்மக்கள் ஆவர்.

தாய் வழி உறவினர்கள்

கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தாயார் பெயர் என்ன?

பதில் : ஆமினா

கேள்வி : பெருமானாரின் தாய்வழிப் பாட்டனார், பாட்டி பெயர் என்ன?

பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தாய்வழிப்பாட்டனார் பெயர் வஹ்பு, தாயாரைப் பெற்ற பாட்டியின் பெயர் பாத்திமா.

கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு சிறிய தாயார், பெரிய தாயார் உண்டா? எத்தனன பேர்கள்?

பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சிறிய தாயார் பெயர் பாரீஷா, பெரிய தாயார் பெயர் பாக்கிதா,

கேள்வி : ஆமினா நாச்சியாரின் சகோதரர்கள் யாவர்?

பதில் :

  1. அஸ்வத்
  2. உமைர்
  3. அப்துயஹூது ஆகிய மூவர்

குறைஷி வம்சம் யாரிலிருந்து ஆரம்பம்

கேள்வி : குறைஷி வம்சம் யாரிலிருந்து ஆரம்பம்?

பதில் : பெருமானாரின் மூதாதை பிஹ்ருவிலிருந்து ஆரம்பம்.

கேள்வி : நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பன்னிரண்டு தலைமுறைகளின் விவரமென்ன?

பதில் : குறைஷி வம்ச ஆரம்பம் பிஹ்ருவிலிருந்து

  1. பிஹ்ரு
  2. காலிப்
  3. லுவய்யு
  4. கஃபு
  5. முர்ரா
  6. கிலாப்
  7. குஸையீ
  8. அப்துல்மனாப்
  9. ஹாஷிம்
  10. அப்துல்முத்தலிப்
  11. அப்துல்லாஹ்
  12. அப்துல்லாஹ் வினுடைய அருமைப் புதல்வர் தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்

25 பிப்ரவரி, 2010

"உங்களுக்கு என் சலாம் உண்டாவதாக!"
அகிலத்துப் பெண்களின் தலைவியும் சுவனத்து பேரரசியும் அன்பு மனைவியுமான பாத்திமா(ரலி) அவர்களின் பிரிவு அன்பு கணவர் அலி(ரலி) அவர்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்று வெயிலில் வாடிய புழுபோல் துடுத்துக் கொண்டிருந்தார்கள். ஈடு செய்ய முடியாத இழப்பு அவர்க்ளின் உள்ளத்தின் கடுமையான ரணத்தை உண்டாக்கியது ஆருயிர் மனைவியை நினைத்து நினைத்து துயரத்தில் மூழ்கி சோகமே உருவாய் இருந்தார்கள்.
அன்பு மனைவியின் பிரிவை நினைத்து பல கவிதைகளை பாடி பாடி மகிழ்ந்தார்கள்.
ஒரு நாள் அவர்களின் கால்கள் அன்பு மனைவி பாத்திமா(ரலி) அவர்களின் கபர்ஸ்தானுக்கு இழுத்துச் சென்றன. புகைக்குழியை கண்டதும் புன்னாகிய புனித உள்ளம் பாத்திம(ரலி) அவர்களுடன் கழித்த நாட்களை நினைத்து நினைத்து கண்களில் தாரை தாரையாக கண்ணீரை வடித்தார்கள்.
தங்களின் அவலக் குரலில் கவிதையொன்றினை பாடினார்கள் இதே அந்த கவிதைத்துளிகள்......"நான் முஸ்லிம்களின் அடக்கஸ்தலத்தில் "ஸலாம்" சொன்னவனாக நடந்துச் செல்கிறேன்.
"முதலில் மன்னர் நபியை இழ்ந்தேன் நான் அவர்களின் ஈரக்குலை துண்டை இனி எங்கு கான்பேன் என் அன்பு மனைவியின் பரிசுத்த கப்ரிலிருந்து என் துயர் போக்கும் ஆறுதல் வார்த்தை..
ஒன்றாவது வராமலிருக்கிறதே" என் அருமை மனைவியின் கப்ரே! உன்னை அழைப்பவனுக்கு நீ விடை அளிக்காதிருக்கிறாய்! அவ்வாறுசெய்ய உனக்கு என்ன துன்பம் பிடித்திருக்கிறது. பாத்திமாவே! என்னை விட்டு பிரிந்து விட்டதால் என் மீதிருந்த நட்பில் உங்களுக்கு விரக்தி ஏற்பட்டு விட்டதோ அந்தோ என் வெந்துப்போன உள்ளத்தின் புண்ணைஆற்றுவதற்கு யார் இங்கிருக்கிறார்கள்?
இப்படி உள்ளம் உருகி உருகி கவிதைகளைப் பாடி..பாடி கண்ணீர் துளிகளை கொட்டி கொட்டி கொண்டிருந்தார்கள்.
திடீரென பாத்திமா(ரலி) அவர்களின் இனிப்பாருங்கள்.....உங்கள் ஆருயிர் தோழி பாத்திமா சொல்கிறாள் நான் செய்த அமல்களுக்கு நானே பொறுப்பாளி என்ற நிலையில் எனக்கு என்ன நடக்கப் போகிறாதோ என்று அறியாது கல்லுக்கும் மண்ணுக்கும்மிடையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கையில் என்னால் உங்களுக்கு என்ன பதில் தான் சொல்ல முடியும்!.
தோழ்ரே என் அழகை எல்லாம் மண் திண்று விட்டது அதனால் தான் நான் உங்களை மறந்து விட்டேன்..."கப்ரு" என்னும் இப் புதை குழியானது என் உற்றார். உறவினர்களுடன் உரையாடுவதை விட்டும் என்னை தடை செய்து விட்டது.
உங்களுக்கு என் சலாம் உண்டாவதாக! இன்று முதல் நம்மிருவருக்குமிடையில் இருந்து வந்த நட்புறவு அறுந்து போய்விட்டது....போய் வாருங்கள்.

படிப்பினை:
மேற்கண்ட சோக நிகழ்ச்சி நமக்கொல்லாம் பெரும் உச்சக்கட்ட படிப்பினையாக அமைந்திருக்கிறது.. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்ப் போலவே பாத்திமா(ரலி) அவர்களின் இழப்பும் ஈடு செய்ய முடியாதவைதான் இறந்தவர்களை நினைத்து நினைத்து அழுது அழுது என்ன பயன்? இனி அவர்களுக்காக துஆ செய்தும் அவர்கள் வாழ்ந்த பரிசுத்தமான வாழ்க்கையையும் வாழ்ந்து காட்ட நாம்முன் வர வேண்டும் உற்றார் உறவினர்களை மனைவி மக்களை கணவன் சான்றோர்களை பிரிந்து விடும் மரணத்தை அனுதினமும் நினைத்து வாழ்வேண்டும்.
இஸ்லாம் மரணத்தை கண்டு பயப்பட சொல்லவில்லை மெளத்தை நினையுங்காள் என்று தான் நமக்கு சொல்லித் தருகிறது.
நல்ல அமல்களை மட்டுமே பார்க்க கூடிய கப்ருக்கு நாம் என்ன முன்னேற்பாடுகள் செய்து வைத்துள்ளோம் எந்தருமை இஸ்லாமிய தாய்மார்களே! சகோதரிகளே! சற்று சிந்தித்தும் பாருங்கள் அழியும் அற்ப உலகில் கிடைக்கும் கொஞ்ட சொத்து சுகங்களுக்காக சுவனத்துப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்கள் கூட சுவனத்து சுகங்களை அனுபவிக்க வேண்டுமானால் இவ்வுலகில் பாத்திமா(ரலி) அவர்களின் பரிசுத்த வாழ்க்கையை வாழ் முன்வாருங்கள்.
பாத்திமா(ரலி) அவர்கள் இற்ந்த பின் பலகாலங்களுக்கு பிறகு அல்லாமாஷைகு அப்துல் அஜீஸ் நப்பாக (ரஹ்) "ரூஃபியா" என்னும் காட்சியில் இப்படி கண்டார்கள்.
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் அவர்களின் புனித தோழ்ர்களான சஹாபா பெருமக்களும் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார்கள் அமர்ந்து கீழ் கானும் சலவாத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள்.
"அல்லாஹும்ம ஸல்லி அலா மன்ரூஹூஹூ
மிஹ்ராபுல் அர்வாஹி வல் மலாயிக்கத்தீவல் கவ்ன்
அல்லாஹும்ம ஸல்லி அலா மன்ஹூவ இமாமுல் அன்பியாயி வல் முர்ஸலீன்
அல்லாஹும்ம ஸல்லி அலா மன்ஹுவ இமாமு அஹ்லில் ஜன்னத்தி இபாதில்லாஹில் முஃமினீன்

இந்த ஸலவாத்துக்கு "ஸலவாத்து பாத்திமா" என்ற புகழுடன் உலக மக்களிடம் சிறப்பாக உச்சரிக்கப்படுகிறன இஸ்லாமிய பென்மனிகளே! நீங்களும் தஸ்பீஹ் பாத்திமா ஸலவாத்துப் பாத்திமா போன்றவற்றை ஓதி. பாத்திமா(ரலி) அவர்களின் பரிசுத்தமான புனித வாழ்க்கையை வாழ்ந்து அல்லாஹ்ரசூலின் பொருத்தத்தை பெற்று சுவனத்தில் பாத்திமா(ரலி) அவர்களோடு ஊழி ஊழிகாலமாய் சேர்ந்து வாழுங்கள்...அல்லாஹ் எல்லாருடைய ஹாஜத்தை நிறைவேற்றுவானாக ஆமீன்........
"மண்ணறையில் மாநபியின் மகளார்"
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் குடும்பத்தினருக்கு அது துயரமான இரவு சுவன தலைவி பாத்திமா(ரலி) அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிந்து மறு உலகப் பயணத்திற்காக தயாராக இருந்தார்கள்.
பாத்திமா(ரலி) அவர்கள் வஸியத் சொன்னது போல கனவர் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களும் அஸ்மா பிந்து உமைஸ்(ரலி) அவர்களும் பாத்திமா(ரலி) அவர்களை குளிப்பாட்டினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பனிவிடைப் பென்னான முன்னால் அடிமையான ஸல்மா(ரலி) அவர்களும் இவர்கள் கதிஜா(ரலி)பாத்திமா(ரலி) அவர்களை பெற்றெடுக்கும் போது பிரசவம் பாத்த பென்மனி ஆவார்கள்.
குளிப்பாடுவதில் உதவிக்கு சேர்த்து கொண்டார் பிறகு அப்பாஸ்(ரலி) அவர்கள் அலீ(ரலி) ஹஸன்(ரலி) ஹுஸைன்(ரலி) போன்ற குறிப்பிட்ட குடும்பத்தினர்கள் அபூதர் கிபாரி(ரலி) போன்ற ஒரு சில சஹாபா பெருமக்கள் அங்கு இருந்தனர் அதிகமான சஹாபாக்களுக்கு பாத்திமா(ரலி) அவர்களின் மரனச் செய்தியை அறிவிக்கவில்லை வழியும் கண்ணீரோடு பாத்திமா(ரலி) அவர்களின் மதினாவின் ஜன்னத்துல் பக்கீ என்ற பொது கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதற்கு முன் பாத்திமா(ரலி) அவர்களின் ஜனாஸா தொழுகையை ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் நடத்தினார்கள் ஈடு செய்ய முடியாத இழப்பை நினைத்து பிள்ளைகள் இரண்டு பேரும் பதறி கதறி அழுதனர் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
அப்போது ஹஜ்ரத் அபூபதர் கிபாரி(ரலி) அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களின் கப்ரைப் பார்த்து உருக்கமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள் ஏ....கப்ரே! இப்பொழுது உன்னிடம் ஒப்படைப்பதற்காக நாம் யாருடைய உடலை கொண்டு வந்து உள்ளோம் தெரியுமா? அகிலத்தின் அருக் கொடை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் உதிரத்திலிருந்து உதித்த உத்தம பத்தினி பாத்திமா(ரலி)
வீரத்தின் விளை நிலம் அஞ்சாநெஞ்சர் பார்போற்றும் ஹைதர் அலி(ரலி) அவர்களின் அருமை மனைவி பாத்திமா(ரலி) சுவனத்தின் தூண்களான ஹஸன்(ரலி) அவர்களின் உன்னத தாய் பாத்திமா(ரலி)
இவ் உலகத்துப் பெண்களுக்கெல்லாம் உன்னத தலைவி என்பதை நீ அறிவாய் எனவே இப்புனித உடலை நீ கண்ணியமாக பெரும் பக்தியுடன் ஏற்று கொண்டு பக்குவமாய் வைத்துக் கொள்வாயாக என்று கூறினார்கள். அப்போது கப்ரில் இருந்து ஓர் அசரீரி சத்தம் வந்தது....அபூதரே! இது பெருமை பாராட்டும் இடமன்று என்பது உமக்குத் தெரியாதா? இது ஆளைப் பார்க்க கூடிய இடமன்று" அமலைப் பார்க்க கூடிய இடம்.
அல்லாஹ்வை பய்ந்து உண்மையான தக்வாவோடு நல்ல அமல்கள் புரிந்து மனச்சாந்தியோடு இங்கு வந்தவர்கள் மட்டுமே வெற்றியடைவார்கள். என்று முழ்ங்கியது.
பின்பு சஹாபாக்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் குடும்பத்தினரும் அமைதியாக வீடு திரும்பினார்கள். புதன் காலை பொழுது சோகமாகவே விடிந்தது பல சஹாபாக்கள் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களிடம் வந்து பாத்திமா(ரலி) அவர்களின் மரணச் செய்தியை ஏன் எங்களுக்கு அறிவிக்கவில்லை? என்று கேட்டார்கள் அதற்கு பாத்திமா(ரலி) அவர்கள் இரவிலே நல்லடக்கம் உடனே செய்து விடுங்கள் யாருடைய பார்வையும் என்மீது பட்டு விடக்கூடாது என்று சொல்லி சென்ற வஸீயத்தைச் சொல்லி அமைதிப் படுத்தினார்கள்.
பிறகு தங்களின் அருமை மனைவி பாத்திமா(ரலி) அவர்கள் கூறிச் சென்ற வஸீயத்தின் பிரகாரம்.
பாத்திமா(ரலி) அவர்களின் மூத்த சகோதரி ஜய்னபு(ரலி) அவர்களின் அருமை மகள் உமாமா(ரலி) அவர்களை பாத்திமா(ரலி) அவர்கள் இறந்து சரியாக ஏழாவது நாளில் திங்கள் கிழ்மை ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் திருமனம் செய்து கொண்டார்கள்.
அப்போது ஒரு சஹாபி வந்து ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களிடம்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அற்புத மகளார் எப்படி பட்டவராக நடந்து கொண்டார்கள் என்று கேட்டார்.அதற்கு அலி(ரலி) அவர்கள் வாடிய பின்னரும் மணம் வீசும் ஒரு மலராக அவர்கள் இருந்தார்கள் என்று புகழ்ந்து கூறினார்கள்.
"சுவனத்துப் பேரரசியின் இறப்பும் ஈடு செய்ய முடியாத இழப்பும்"
ஹிஜ்ரி11-ம் (கி.பி.633) வருடம் ரமலான் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலைபொழுது...பாத்திமா(ரலி) அவர்கள் தங்களின் அருமை புதல்வர்களான ஹஸன் ஹுஸைன்(ரலி) இருவரையும் அழைத்துக் கொண்டு தங்களின் அருமை தகப்பனார் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கப்ருக்குச் சென்றார்கள் கால்கள் தள்ளாடிய நிலையில் கனத்த இதயத்துடன் அங்கு போய் நின்றார்கள் கண்கள் குளமாகும் அளவுக்கு தேம்பி தேம்பி அழுதார்கள். நீண்ட நேரம் துஆ செய்தார்கள். பின்பு குழந்தை களோடு வீட்டிற்கு வந்தார்கள் பிள்ளைகளை அன்பு கணவர் அலி(ரலி) அவர்களிடன் சென்று இருங்கள் என்று கூறினார்கள்.
இதற்கு முன்பு தங்களின் அருமை கனவரிடம் அமைதியாக அமர்ந்து நான் இறந்த பிறகு நீங்கள் எனது மூத்த சகோதரி ஜெய்னபு(ரலி) அவர்களின் அருமை அனாதை மகள் உமாமாவை மறுமணம் புரிந்து கொள்ள வேண்டும் நான் மெளத்தானபின் என்னை இரவிலே நல்லடக்கம் செய்யுங்கள் என்னுடைய ஜனாஸாவின் மீது எந்த எஹூதியின் பார்வையும் பட்டுவிடக் கூடாது என்று வஸீயத் சொன்னார்கள்.
பிள்ளைகளை கனவரிடம் அனுப்பி விட்டு நன்கு குளித்தார்கள் பின்பு வந்து தூய்மையான உடைகளை அணிந்து கொண்டார்கள். அப்போது அஸ்மா(ரலி) அவர்கள் அங்கு இருந்தார்கள்.அவர்களை நோக்கி நான் இறந்து விட்டால் நீங்களும் அலியும் தான் என்னை குளிப்பாட்ட வேண்டும் வேறு யாரையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளகூடாது என்று வஸீயத் சொன்னார்கள் இப்பொழுது இரவு நேரம் அஸ்மா(ரலி) அவர்களை நோக்கி இங்கிருந்து நீங்கள் சென்று விட வேண்டாம் என்று சொன்னார்கள். உடனே படுப்பதற்காக தங்களின் படுக்கையறைக்கு சென்று படுத்துக் கொண்டார்கள். அஸ்மா(ரலி) அவர்கள் வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே இருந்தார்கள்.
சிறிது நேரம் சென்றபின் வெளியில் இருந்து கொண்டே.அறைக்குள் சென்ற பாத்திமா(ரலி) அவர்களை அழைதார்கள்.
"சந்தூக்பெட்டி வந்த வரலாறும் பாத்திமா(ரலி) அவர்களும்"
கருனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களின் காதில் சொன்ன இரகசியம் முடியும் தருவாயில் வந்து நின்றது சுவனப் பேரரசி கண்மணி பாத்திமா(ரலி) அவர்கள் உடல் நிலை சரி இல்லாமல் இருந்தார்கள் அவர்களைப் பார்க்க மதினத்து மக்கள் வந்து போனார்கள்.
பாத்திமா(ரலி) அவர்களின் நோயை பற்றி விசாரிக்க கலீபா அபூபக்கர்(ரலி) அவர்கள் வீட்டிற்கு வந்து நோய்பற்றியும் உடல்நிலைப் பற்றியும் விசாரித்து சென்றார்கள்.
ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களின் உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். பாத்திமா(ரலி) அவர்களைப் பார்த்து "அல்லாஹ்வின் தூதரின் அன்பு மகளார் அவர்களே! உங்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நேசித்தது போல வேறு எவரையும் நேசித்ததை நான் பார்க்கவில்லை? என்று பாராட்டிக் கூறி சென்றார்கள்.
இப்பொழுது பாத்திமா(ரலி)அவர்களுக்கு 29வயது பூர்த்தியாகியது அவர்களின் அருகில் இருந்து பணிவிடை செய்ய அவர்களின் மனைவி அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) அவர்கள் உடன் இருந்தார்கள். (அலி(ரலி) அவர்களின் சகோதரர் ஜாபர் ரலி அவர்கள்) ஜாபர்(ரலி) அவர்கள் மூத்தாப் போரில் ஷஹிதானார்கள். பிறகு அவர்களை அபூபக்கர்(ரலி) அவர்கள் மறுமணம் புரிந்தார்கள். இருவரும் மிகவும் நேசமாக பாசமாக இருப்பார்கள், மூத்தாப் போரில் ஜாபர்(ரலி) அவர்கள் ஷஹிதானார்கள். என்ற செய்தியை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மதினாவில் இருந்து எடுத்துச் சொன்ன போது பாத்திமா(ரலி) அவர்கள் சற்று கதறி அழுதார்கள். அப்போது அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) கண்ணீரும் கம்பளையுமாக கதறி கொண்டிருக்கும் போது அருகில் இருந்து ஆறுதல் சொன்னவ்ர்கள் பாத்திமா(ரலி) அவர்கள் தான் அப்போது பாத்திமா(ரலி) அவர்களின் அழுகையைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களுக்கும் ஆறுதல் சொன்னார்கள்.
இப்போது பாத்திமா(ரலி) அவர்களின் அருகில் இருக்கும் அவர்களை நோக்கி அஸ்மாவே! இப்பொழுது நான் இருக்கும் நிலைமையை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கவலையோடு சொன்னார்கள். அதாவது நான் இறந்தும் போகும் நிலையில் இருக்கிறேன் என்று சூசகமாக சொன்னார்கள். பிறகு பெண்களுக்கு (சந்தூக்) ஜனாஸாபெட்டி எப்படி இருக்க வேண்டும்? என்பது பற்றி இருவரும் பேசி கொண்டார்கள்.
பாத்திமா(ரலி) அஸ்மா இப்பொழுது இறந்தவர்களை எடுத்துச் செல்லும் முறை எனக்கு திருப்தியாக தோன்றவில்லை மைய்யத்தை கட்டிலில் வைத்து மேலே ஒரு துணியைப் போர்த்தி விடுகின்றனர் பெண்களும் கோஷா இல்லாத நிலை அதிலிருந்து மையத்தின் உடல் அமைப்பு தெளிவாக தெரிகிறது என்றார்கள் அதற்கு அஸ்மா(ரலி) அவர்கள் ஆம் என கூறி விட்டுஅருமை நபிகளின் புதல்வியே! நான் அபீஸீனியா நாட்டில் இருக்கும் போது ஜனாஸாவைப் பார்த்திருக்கிறேன் உங்களுக்கு விருப்பமானால் அது போலவே இப்பொழுது செய்து காட்டுகிறேன் என்றார்கள். இவர்கள் அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்து அதன்பின் மதினாவுக்கு இரண்டாவது முறையாக ஹிஜ்ரத் செய்தவர்கள் அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) அவர்கள் தமது முதலாம் கணவர் ஜஃபர் தய்யார்(ரலி) அவர்களுடன் அபீஸீனியாவில் சில காலம் இருந்தார்கள்.
பாத்திமா(ரலி) அவர்கள் செய்து காட்ட சொன்னார்கள். உடனே ஒரு கட்டிலைக் கொண்டு வர சொன்னார்கள் அதன் இரு பக்கத்திலும் கட்டுவதற்காக பேரிச்ச மரத்து பச்சை மட்டைகளை வெட்டி வரும்படி ஏவினார்கள். பிறகு அதை அமைத்து ஒவ்வொரு கிளை மட்டையின் இரண்டு நுனிகளையும் வளைத்து பாதி வட்ட வளைவைப் போலச் செய்தார்கள். இந்த இரண்டு நுனிகளையும் கட்டிலில் இரண்டு ஓரங்களோடு சேர்த்துக் கட்டினார்கள். பிறகு மேல் ஒரு துணியைப் போட்டு மூடிக் காட்டினார்கள். இந்த முறை நல்ல கோஷா முறையாக இருக்கும் மைய்யத்தை யாரும் பார்க்க முடியாது என்று கூறினார்கள். இந்த ஜனாஸா பெட்டியை பார்த்த பாத்திமா(ரலி) அவர்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை இது நன்றாக இருக்கிறது இந்த முறை அமைப்பு மிக மிக நல்லது இதனால் இறந்தவர் ஆணா?பெண்ணா? என்று யாரும் பார்க்க முடியாது என்று பூரித்துப் போனார்கள். இவ்வாறு தான் எனது ஜனாஸாவையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தங்களின் இறுதி ஆசையை அவர்களிடம் சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வபாத்தாகி ஆறு மாதங்களுக்குள் இன்றுதான் அதுவும் புதுமாதுரியான கோஷா முறையுடன் அமைந்த இந்த ஜனாஸா பெட்டியைப் பார்த்து சந்தோஷமாக இருந்தார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
"பாத்திமா ரலிக்கு ஓர் படிப்பினை!
கண்மணி நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் மறைவுக்கு பின் அவர்களில் சொத்து சம்பந்தமாக அவர்கள் குடும்பங்களில் பதட்டம் ஏற்பட்டது. இதை அறிந்த பாத்திமா(ரலி) அவர்காள் தந்தையின் சொத்தில் நமக்கும் பங்கு இருக்கிறது. அதை ஏன் விட வேண்டும் வாங்கி நமது பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்ற கருத்திலும் தங்களின் அருமை கணவர் அலி(ரலி அவர்களின் ஆலோசனையை ஏற்றவர்களாக அப்போது ஆட்சியில் இருந்த கலீபா அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களிடம் சென்ரு மதினா ஃபிதக் கைபரைச் செர்ந்த கிராமங்களில் உள்ள தங்கள் தந்தையரின் சொத்துகள் எனக்கும் கொடுக்கப்படவேண்டும் என்ரு விண்ணப்பம் செய்தார்கள். இதை அறிந்த அபூபக்கர்(ரலி) அவர்கள். பாத்திமா(ரலி) அவர்களை நோக்கி நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் குடும்பத்தை என் குடும்பத்தாரைவிடவும் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் குழந்தைகளை என் குழந்தைகளை விடவும் நேசிக்கிறேன் ஆனால் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் நபிமார்களுக்கு வாரிசு கிடையாது என்ரு கூறியுள்ளார்கள். மேலும் நபிமார்களாகிய எங்களிடமிருந்து எவருக்கும் வாரிசு சொத்துரிமை கிடையாது நாம் விட்டுச் செல்வதெல்லாம் சதக்காவாகும் என்று சொன்னார்கள். அதனால் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் காலத்திலேயே நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்கள் குடுமப்த்தினருக்கு இந்த சொத்துகளின் வருமானத்திலிருந்து எவ்வளவு கொடுக்கப்பட்டதோ அது இப்பொழுதும் கொடுக்கப்படும் என்று கூறினார்கள். பிறகு நபி பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் அருமை மகளே! நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் செய்த ஒவ்வொரு செயல்களையும் நான் பின்பற்றி நடப்பேன் அவ்வாறு நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் வழியைப் பின்பற்றாமல் புறகணித்து நடந்தால் அது பெரும் பாவமாகும்.தவறான வழியுமாகும். எனவே நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் சொத்திலிருந்து பங்கு தர முடியதவனாக உள்ளேன் என்று பணிவாக கூறினார்கள்.
இது சுவன பேரரசி பாத்திமா(ரலி) அவர்களுக்கு சற்று மணவருத்தம் ஏற்பட்டது. இருந்தும் ஷரிஅத் வாழவேண்டும் அதுதான் இப்போது தேவையே தவிர அழியும் சொத்துகள் அல்ல என்று நினைத்தவர்களாக அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வாக்குவாதமோ வேறு எதுவுமோ பேசாமல் திரும்பிவிட்டார்கள்.

24 பிப்ரவரி, 2010

"துயரத்தின் விளிப்பிலே பாத்திமா(ரலி)"
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்த நேரத்தில் விண்ணும் அழுதத் மண்ணும் அழுதது அதைவிட சுவனமங்கை பாத்திமா(ரலி) அவர்களும் அழுதார்கள்.
அருமை தந்தையாரின் பிரிவு தாங்காமல் பாத்திமா(ரலி) அவர்கள் கதறி கதறி அழுதார்கள். என் மீது இன்று முஸீபத்துகள் கொட்டப்பட்டுள்ளது. இவைகளை பகள் மீது கொடினாலும் பகல் அழிந்து விடும் என்ரு கூறி அழுதார்கள்.
கருனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு அருமை சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அன்பு மகளான பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறவந்தார்கள்.சஹாபாக்களைப் பாத்து பாத்திமா(ரலி) அவர்கள். எனது அருமை தந்தையான அல்லாஹ்வின் தூதரின் புனித உடலை மண்ணில் கீழ் வைக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? என்று கேட்டு கேட்டு அழுதார்கள்.
அங்கு வந்த அனஸ்(ரலி) அவர்களை நோக்கி அனஸே என் அருமை தந்தையார் மீது மண்ணை தள்ள எவ்வாறு உமக்கு துணிச்சல் ஏற்பட்டது என்று கேட்டார்கள். அனஸ்(ரலி) அவர்கள் நடு நடுங்கி போனார்கள். அல்லாஹ்வின் விருப்பத்தை யாரால் தடுக்க முடியும்? என்ரு இதமாக பதிலளித்து விட்டு ஆறுதல் கூறினார்கள்.
ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் தங்களின் அன்பு ஆருயிர் மனைவிக்கு எவ்வளவோ ஆறுதல்களை அள்ளி கொட்டிக் கொண்டே இருந்தார்கள். அருமை மகள்களான ஹஸன் ஹுஸைன்(ரலி) இருவரும் அம்மாவைப் பார்த்து அழுது கொண்டிருக்கிறார்கள். பாத்திமா(ரலி) அவர்களின் சோகத்தை யாராலும் போக்க முடியவில்லை நடைப் பிணம் போல இருந்தார்கள். ஊண் குடிப்பு உறக்கம் இவைகளைத் துறந்தார்கள். இறப்புக்கு முன் இறந்தவர்கள் போலவே ஆகிவிட்டார்கள். மதினாவின் எந்த ஒரு மனிதராலும் அவர்களை ஆறுதல் படுத்த முடியாத அளவுக்கு உள்ளம் வேதனையில் மூழ்கி இருந்தது. அவர்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இறந்து பாத்திமா(ரலி) அவர்கள் இறப்பு வரை தொடந்து ஆறுமாத காலம் சோகமாகவே இருந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இறந்த பின் பாத்திமா(ரலி) அவர்கள் சிரித்ததை யாரும் பார்க்கவே இல்லை. தந்தையின் நினைப்பிலேயே நாட்களை நகர்த்தினார்கள் பாத்திமா(ரலி) அவர்கள் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களால் தனது அன்பு மனைவியை தேற்ற முடியவில்லை.அடிக்கடி கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அடக்க ஸ்தலத்திற்குச் செல்வார்கள் கண்ணீர் வடித்து தேம்பி தேம்பி அழுவார்கள். பிறகு அடக்கஸ்தலத்தில் மீது இருக்கும் புனித மண்ணை அள்ளி முகருவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அடக்கஸ்தலத்தின் மண்ணை அள்ளி அள்ளி முகர்ந்து விட்டு செல்வார்கள் கருமை நபியின் கப்ர் மண்ணை முகர்ந்தவ்ர்கள் தங்களின் வாழ்நாளில் வேறு வாசனையை முகர்ந்து பார்பார்களா? என்று கூறிக் கொள்வார்கள்.
சில சமயம் அழுது கொண்டே. எனக்கு ஏற்பட்டிருக்கும் துனபம் பகலுக்கு வந்தால் அது உடனே இரவாகி விடுமே என்பார்கள்.
சிலபொழுது மழைநீர் காணாமல் பூமி அழுவது போல என் அருமை தந்தையே உங்களை காணாமல் நாங்கள் அழுகின்றோமே என்பார்கள்.
வானம் இருண்டு சூரியன் சுருட்டப்பட்டு காலம் கருகி விட்டதே தந்தையே உங்களுக்கு பின் இந்த உலகம் வரண்டு விட்டது தந்தையே என்பார்கள்.
இப்படியும் புலம்புவார்கள் என் தந்தையை நினைத்து கிழக்கு வாசிகளும் அழுகிறார்கள் மேற்குவாசிகளும் அழுகின்றார்கள் மலைகளும் அழுகின்றது அரன்மனைகளும் அழுகின்றது தந்தையே! என் துயரத்தின் சுமையை தாங்க முடியவில்லையே என்று அழுவார்கள்.
சிலபொழுது என் உயிருக்கு உயிரான அன்பு தந்தையே நீங்கள் மறைந்தவுடன் வஹியின் பரக்கத் நின்று போய்விட்டதே, நீங்கள் இவ்வுலக வாழ்விலிருந்து பிரிந்து மண்ணில் இளைபாரும் காலத்திற்கு முன்பாகவே எனக்கு மரணம் வந்திருக்கக் கூடாதா? என்று கதறுவார்கள். அல்லாஹ் உங்கள் மீது அளப்பிரிய கிருமை செய்வானாக என்ரும் அடிக்கடி கூறிக் கொண்டே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை நினைத்துஏ ஐஸ் போல உருகிக் கொண்டிருப்பார்கள்.
பாத்திமா(ரலி) அவர்களின் இடைவிடாத அழுகையை கண்ட சஹாபாக்களில் ஆண்களும் பென்களும் பாத்திமா(ரலி) அவர்களிடம் வந்து இவ்வாறு இரவு பகலாக அழுது கொண்டிருந்தால் என்னாவது? ஒன்று பகலில் மட்டும் அழுங்கள் அல்லது இரவில் அழுங்கள் என்று அபிப்பிராயம் சொன்னார்கள்.
அக்கால மதினாவில் பாத்திமா(ரலி) என்றாலே சோகம் அழுகை துயரம் என்றுதான் பொருள் என் நினைக்கும் அளவுக்கு பாத்திமா(ரலி) அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருந்தது.
"விளக்கம் கேட்ட விண்ணுலக நாயகி"
சுவனத்துப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்கள் உலகில் அவர்கள் தந்தையை தவிர வேறு யாரின் மீது அதிகம் அன்பு செலுத்தவில்லை. இரவும் பகலும் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் வாயிலிருந்து எது சொன்னாலும் அதை அப்படியே பின்பற்றுவார்கள். ஒரு நாள் கன்மணி நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் அன்பு மகளார் வீட்டுற்கு வந்தார்கள். அப்போது பாத்திமா(ரலி) அவர்கள் கறி சமைத்து இருந்தார்கள். மகளார் வீட்டில் சாப்பிட்டார்கள். அப்போது பாங்கு சொல்லப்பட்டது. உடனே நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு உலூசெய்யாமல் உடனே தொழுகைக்கு தயாரானார்கள். இதை பாத்து கொண்டிருந்த பாத்திமா(ரலி) அவர்கள். எனதருமை தந்தையே! நீங்கள் ஒரு நாள் என்னிடம் நெருப்பில் சமைக்கப்பட்ட பொருளைச் சாப்பிடால் உளு முறிந்து விடும் என்று சொன்னீர்களே! இப்போது சமைத்ட உணவைத்தானே சாப்பிட்டீர்கள். உளு முறிந்து இருக்குமே, உளு இல்லாமல் தொழ செல்ல ஆயத்தமாகிறீர்களே! உளு செய்து செல்லுங்கள் என்று சொன்னார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் எனதருமை மகளே! இனி சமைத்த உணவுகளை சாப்பிட்டால் ஒழு முறியாது மீண்டும் ஒழு செய்ய அவசியமில்லை எல்லா உணவுகளும் நெருப்பில் தான் சமைக்கப்படுகின்றன என்ரு அன்பு மகளுக்கு விளக்கம் சொன்னார்கள்.
"பாத்திமாவே! என் உம்மத்திற்காக"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அந்திம நேரம் இறப்பின் பிடியில் கருனையே உருவான காத்தமுன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பீடிக்கப்பட்டிருந்தார்கள், பாத்திமா(ரலி) அவர்காள் தங்களின் பிரிய தந்தையைப் பார்க்க வந்தார்கள். கண்களில் கண்ணீர் கொட்டிய வண்ணம் அருமை தந்தை முன் வந்து நின்றார்கள். அப்போது ஆசையாய் வளர்த்த அருமை மகளைப் பார்க்காமல் வேறு பக்கம் தங்களின் முபாரக்கான முகத்தை திருப்பிக் கொண்டார்கள். மீண்டும் பாத்திமா(ரலி) அவர்கள் அந்த பக்கம் சென்று கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை பார்த்து பேச அழுது கொண்டு சென்றார்கள். இதையறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களின் முகத்தை இந்த பக்கம் திரும்பிக் கொண்டார்கள். பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை கடைசி நேரத்தில் என் முகத்தை கூட பார்க்காமல் திரும்பிக் கொள்கின்றார்களே ஏன்? என்று குழம்பிப் போய் பதறினார்கள். அப்போது கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களின் முகத்தை திரும்பிக் கொண்டே தங்களின் அன்பு மகளாரைப் பார்த்து. எந்தன்பு மகளே! இப்போது நான் என் உம்மத்தின் சிந்தனையில் இருக்கிறேன். நாளை என் உம்மத்தின் நிலை என்னவாகுமோ என்ற கவலையில் உள்ளேன். எனவே! அன்பு மகளே! நான் என் உம்மத்தின் சிந்தனையிலேயே கடைசியாக எனது ரப்பை சந்திக்கப் பிரியப்படுகிறேன் என்று கூறினார்கள். பிறகு அஸ்ஸலாத்தி யா உம்மத்தீ அஸ்ஸலாத்தியா உம்மத்தி அல்லாஹ்வாகிய உயர்ந்த தோழனுடன் என்று தாழ்ந்த குரலில் கூறினார்கள். மூன்று முறை முபாரக்கான பொற்கரம் பக்கத்தில் சாய்ந்தது. அவர்களின் ஒளிமையமான கன்கள் வானின் பக்கமாக பார்த்து அப்படியே நின்றது அதன்பின் முபாரக்கான கண்ணியமாக ஆன்மா அவர்களின் தூய உடம்பை விட்டு பிரிந்து சென்றது.
"உம்மஹாத்துமுஃமின்களின் போராட்டம்"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மனைவியரில்(1) கதிஜா பிந்த் குவைலித்(ரலி)(2) ஜெய்னப் பிந்த் குஜைமா(ரலி) ஆகிய இருவரும் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் வாழ்ந்திருக்கும் போதே இறந்து விட்டார்கள்.
மீதமுள்ள ஒன்பது மனைவியரும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரியும் போது உயிருடன் இருந்து அதற்கு மின் மரணமடைந்தார்கள்.
ஒன்பது மனைவியரும் இரு அனியினராக இருந்தார்கள்.
"அலீப் பகுதி"
1.தலைவி ஆயிஷா(ரலி)
2.ஸவ்தா (ரலி)
3.ஸபிய்யா(ரலி)
4.ஹப்ஸா(ரலி)
5.ஜெய்னபு பிந்த் ஜஹ்ஷ்(ரலி)

"பே" பகுதி
1. தலைவி: உம்முஸல்மா(ரலி)
2.உம்முஹபீபா(ரலி)
3.மைமூனா(ரலி)
4.ஜுவைரிய்யா(ரலி)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவர்களின் அனைத்து மனைவிமார்களோடு அன்பாகவும் நீதமாகவும் இருப்பார்கள். ஆய்ஷா(ரலி) அவர்கள் மீது இயற்கையாகவே பேரண்பு கொண்டவர்களாக இருந்தார்கள். இது பல சந்தர்ப்பங்களில் பல நிலழ்ச்சிகள் மூலம் நபி ஸல்லலலாஹு அலைஹிவ ஸல்லம் அவர்காள் சொல்லியும் செய்தும் காட்டியுள்ளார்கள். மதினாநகரில் அனைத்து மக்களுக்கும் இவ்விஷயம் நன்கு தெரியும் மதினாவில் மக்களிடம் ஒரு பழக்கம் இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் விஷ்யம் பேசவும் ஏதாவது ஒரு அபிப்பிராயம் கேட்கவும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை பார்த்து ஆதரவு கேட்கவும் குர் ஆன் அனுமதித்தது போல தங்களின் வேண்டுகோளுக்குச் சார்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு அன்பளிப்புகள் கொடுக்கவும் நாடுவார்களேயானால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் இருக்கும் போது தான் செல்வார்கள்அன்பளிப்புகளை கொடுப்பார்கள். காரனம் ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் இருக்கும் போது தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயமாக சென்றாலும் அதை உடனே கவனித்து நிறைவேற்றி தருவார்கள் என்ற நம்பிக்கை மதினாவில் மக்களிடம் அசைக்க முடியாத வகையில் இருந்தது. இதன் காரணமாக ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் அன்பளிப்புகள் குவிந்தன. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டிலில்லாமல் வேறு மனைவியர் வீட்டில் இருக்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரிந்தால், யாரும் அவ் வீடுகளுக்கு செல்லமாட்டார்கள். இது உம்முஸல்மா(ரலி) அவர்களுக்கும். அவர்கள் அணியினருக்கும் கடுமையான பொறாமையும். அவர்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் தலை தூக்கவாரம்பித்து ஆய்ஷா(ரலி) அவர்கள் அணியினருக்கு கொண்டாட்டம். உம்முஸல்மா(ரலி) அணியினருக்கு திண்டாட்டம். ஒரு நாள் உம்முஸல்மா(ரலி) அவர்கள். நாங்கள் அணியினரை ஒன்று சேர்த்து ஆலோசனை நடத்தினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அனைத்து மனைவியிடமும் நீதமாக உள்ளார்கள்? மக்களுக்கு என்ன நேர்ந்தது? இப்படி பாகுபாடு செய்கிறார்களே! இதற்கு ஒரு முடிவு கட்டாலம் விடக் கூடாது. என்று ஆலோசித்து, இது சம்பந்தமாக, ஒரு முடிவு தெரிய உம்முஸல்மா(ரலி) அவர்கள் தன் சார்பிலும் தங்கள் அணியினர் சார்பிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சென்று முறையிட்டார்கள் எப்படி? அல்லாஹ்வின் தூதரவர்களே! உங்கள் மனைவிகள் அனைவரும் சமமே! அப்படி இருக்க நீங்கள் எந்த மனைவி வீட்டில் இருந்தாலும் சரி மக்கள் அன்பளிப்புகளை அந்தந்த வீட்டில் கொண்டு வந்து கொடுப்பதுதான் நியாயம் குறிப்பிட்ட ஒரு மனைவி வீட்டில் இருக்கும் போது மட்டும் அன்பளிப்புகளை அள்ளிக்கொண்டு வந்து குவுப்பது அநியாயம்,அப்படி இல்லாமல் அன்பளிப்புகளை ஒத்துப் போடாமல் பொதுவாக நான் எந்த வீட்டில் இருந்தாலும் அங்கு வந்து அன்பளிப்புகளை கொடுங்கள் பாரபட்சனை காட்ட வேண்டாம் என்று உடனடியாக நீங்கள் மக்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிடுங்கள் என்று முறையிட்டார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்காள் மெளனமாக இருந்து விட்டார்கள். சில நாள்கள் கழித்து மீண்டும் உம்முஸல்மா(ரலி) தங்கள் அணியினர் சார்பாக வந்து அதே விஷயத்தை வலுயுறுத்தினார்கள். அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பதிலேதும் பேசவில்லை பிறகு கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் முறையிட்டார்கள்.மூன்று தடவை வந்து முறையிட்டார்கள். இப்போது கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பேச துவங்கினார்கள்.
ஆய்ஷாவைப் பொறுத்து என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். நானும் ஆய்ஷாவும் ஒரே போர்வையில் இருக்கும் போது தான் வஹிவருகிறது. வேறு எந்த மனைவியுடன் நான் இருக்கும் போது வஹி வந்ததில்லை. உங்கள் கோரிக்கை நியாயமானது தான். நான் என்ன செய்ய முடியும்? ஆய்ஷாவுடன் நான் இருக்கும் போது தவிர உங்களை தொல்லைகள் கொடுத்தற்காக நான் அல்லாய்விடம் மன்னிப்பு கேட்கின்றேன். இனிமேல் தொல்லை கொடுக்க வேண்டாமென்று பதிலளித்தார்கள். அங்கே இருந்து சென்ற உம்முஸல்மா(ரலி) அவர்கள் தங்கல் அணியினரை அழைத்து விஷயத்தை சொல்லி. மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று அலோசனை செய்தனர். முடிவில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு மிகப்பிரியமானவர் அவர்களின் மகள் பாத்திமா(ரலி) அவர்கள்தான் அவர்களை வைத்தே இப்பிரச்னைக்கு தீர்வுகாணலாம் என்று முடிவாகி பாத்திமா(ரலி) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார்காள் பாத்திமா(ரலி) வந்தவுடன் விஷயத்தைச் சொல்லி எங்கள் சார்பாக உங்கள் தந்தையிடம் ஒரு நியாயத்தை வழ்ங்குபடி செய்யுங்கள் என்று கூறினார்கள். பாத்திமா(ரலி) அவர்கள் இவ்விஷயத்தில் இறங்கி நியாயம் வாங்கி தருவதாக ஏற்றுக் கொண்டார்கள். தயக்கத்துடன் இருந்தாலும் பாத்திமா(ரலி) அவர்கள் மிக யோசனை உடையவர்கள். உடனடியாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடன் சென்று விஷயத்தை சொல்லவில்லை. ஒரு சில தினங்கள் யோசனைக்காக ஒத்திப் போட்டார்கள் உம்முஸல்மா(ரலி) அவர்கள் அணியினருக்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை உடனடி நியாயம்கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் அணியில் உள்ள உறுப்பினர் ஜய்னபு பிந்த ஜஹ்ஷி(ரலி) அவர்களை பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு அனுப்பி உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் பாத்திமா(ரலி) அவர்களை அனுப்பி வைக்கும் படி சொன்னார்கள் ஜய்னபு(ரலி) பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களை இது விஷயத்தில் வற்புறுத்தினார்கள். ஒத்திப் போடக் கூடாது என்று நினைத்த பாத்திமா(ரலி) அவர்கள் உடனே தங்களின் அருமை தந்தையிடம் சென்று அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட அத்தனை விஷயங்களையும் எடுத்துச் சொல்லி நியாயம் கேட்டார்கள். தாய்மார்களுக்காக மகள் நீதி கேட்டி வந்தது நினைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு உள்ளுக்குள் பெருமிதமாக இருந்தது. இருந்தாலும் தனது அன்புகளை நோக்கி...என் இளம் மகளே! நான் ஒன்று சொன்னால் நீ ஒன்று சொல்வியா? நான் பிரியப்படுவதை நீ பிடியப்படமாட்டாயா? என்று கேட்டார்கள். ஆம்....தந்தையே என்ரு சைகை மூலமாக பாத்திமா(ரலி) அவர்கள் ஆமோதித்தார்கள். அப்படியானால் நீ உன் சின்னம்மா ஆய்ஷாவை நேசிப்பாயாக என்ரு பக்கத்தில் இருந்த ஆய்ஷா(ரலி) அவர்களை சுட்டிக் காட்டினார்கள். பிறகு பாத்திமா(ரலி) அவர்களை நோக்கி மகளே! உன்னை இங்கு அனுப்பியது ஜெய்னபு தானே! என்று கேட்டார்கள் "ஜெய்னபும். மற்ற இரண்டாவது அணியினர் பெயர்களை சொன்னார்கள். பாத்திமா(ரலி) அவர்காள்.
நான் சத்தியம் செய்து சொல்வேன் இதனை தொடங்கி வைத்தவர்கள் ஜெய்னபு தான் என்று வற்புறுத்திக் சொன்னார்கள். ஆம் தந்தையே ஜெய்னபு(ரலி) தான் என்று பாத்திமா(ரலி) அவர்காள் சொன்னார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள். பாத்திமா(ரலி) அவர்கள் தங்களின் தந்தையாரிடம் விடைபெற்று இரண்டாவது அணியிடம் வந்து நடந்தவற்றை கூறினார்கள் பாத்திமா(ரலி) அவர்கள் சென்றும் சரியான முடிவு கிடைக்க வில்லையே என்று இரண்டாவது அணியினர் டென்ஷனானார்கள்.
அல்லாஹ்வின் தூதர் மகளே! நாங்க எல்லாம் உனது அம்மாக்களல்லவா? நீர் எங்களுக்காக எதையுமே பெற்று தரவில்லை? எனவே மீண்டும் உமது தந்தையிடம் சென்று நன்கு பேசி எங்களுக்கு நீதியை வாங்கிவிடுங்கள் என்று வற்புறுத்தினார்கள் உஷாராண பாத்திமா(ரலி) அவர்கள் இனியும் நான் என் தந்தையிடம் இது பற்றி முறையிட போகமாட்டேன் என்று கூறி மறுத்து விட்டு வீடு போய் விட்டார்கள். உடனே ஜெய்னபு (ரலி) அவர்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம்நீதி வாங்க அனுப்பி வைத்தார்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சென்று ஜெய்னபு(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! ஆய்ஷா(ரலி) விஷயத்தில் நீதி வேண்டும் என்று உங்கள் மனைவிமார்கள் கேட்கிறார்கள். இதற்கு ஒரு முடிவை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். ஜெய்னபு (ரலி) கோபமாக வேகமாக சத்தம் போட்டு பேசினார்கள். ஆய்ஷா(ரலி) அவர்களையும் கோபத்தில் பேசினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஜெய்னபிடம் ஆய்ஷாவை பேச சொன்னார்கள் ஆய்ஷா(ரலி) அவர்களும் விடவில்லை. பதிலுக்கு அவர்களும் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தார்கள். இரு மனைவிக்கும் கடுமையான மோதல் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒன்றும் குறுக்கே பேசாமல் இருவரின் சண்டையை ரசித்துக் கொண்டிருந்தார். இருவரும் சளைக்கவில்லை. ஆய்ஷா(ரலி) அவர்கள் அடுக்கடுக்காக ஆதாரங்களோடு தங்கள் தரப்பு நியாயத்தை அள்ளி வீசினார்கள். பிறகு இருவரையும் சமாதானம் செய்தார்கள். அமைதிப்படுத்தி ஜெய்னபு(ரலி) சென்ற பின்னர் ஆய்ஷா(ரலி) அவர்களை நோக்கி...ஆய்ஷா! நீர் உண்மையிலேயே அபூபக்கர் மகளேதான்!(அபூபக்கர் மகள் என்றால் மகள்தான்)என்று பாராட்டிப் பேசினார்கள்.

இஸ்லாமிய பெண்மணிகளே! இன்றே சபதமெடுங்கள்"

ஒரு சமயம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். அப்போழுது அலி(ரலி) பாத்திமா(ரலி) இருவரையும் நோக்கி நீங்கள் இருவரும் தஹஜ்ஜத் தொழுதீர்களா? என்று கேட்டார்கள்.

உடனே அலி(ரலி) அவர்கள் முந்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதரே! உங்கள் உயிர்கள் அல்லாஹ்விடம் இருக்கின்றன. அவன் விரும்பும் போது படைத்து விடுகிறான் என்று சொன்னார்கள்.

உயிர்களை அவற்றின் மரணத்தின் போது தம் உறக்கத்தில் மரணிக்காமலுள்ளதையும் அல்லாஹ்வே கைப்பற்றுகிறான். பிறகு எவற்றின் மீது மரணத்தை விதியாக்குகின்ரானோ அவற்றைக் தன்னிடமே தடுத்துக் கொள்கிறான். மற்றவற்றை குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்கு) அனுப்பி விடிகிறான் நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற கூட்டத்தினருக்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர் ஆன் அத்:39, வச:42)

மேற்கண்ட திருக்குர் ஆன் வசன கருத்தையொட்டி அலி(ரலி) அவர்கள் சொன்னார்கள்.

ஹஜ்ரத் அலி(ரலி) இவ்வாறு விளக்கம் சொல்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் விரும்பவில்லை. உடனே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் த்ங்களின் தொடையில் கையால் அடித்துக் கொண்டு முகத்தை சற்று திருப்பிக் கொண்டு.

"வகான இன்ஸானு அக்ஸர ஷய்கின் ஜதலா மனிதன் பெரும் பாலும் பேச்சில் சர்ச்சை செய்யக் கூடியவனாக இருக்கின்றான். என்று சொன்னார்கள் தம்பதிகள் இருவரும் மெளனமானார்கள். தாங்கள் இருவரும் தஹஜ்ஜத் தொழ உறுதி எடுத்துக் கொண்டார்கள்.

"கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் சொன்ன இரகசியம்"

"கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தார்கள். ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை சுற்றி அவர்களின் அருமை மனைவி மார்கள் இருந்தார்கள். அப்போது தந்தையை பார்ப்பதர்காக தங்களின் அருமை குழந்தைகளான ஹஸன்(ரலி) ஹுஸைன்(ரலி) இருவரையும் அழைத்துக் கொண்டு பாத்திமா(ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள் தங்களின் அருமை மகளை வரவேற்று பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்கள் அன்பு மகளைப் பார்த்து மகளே! உறவைப் போக்கி விடுவதும் ஆசைகளை தகர்தெறிவதும் இனத்தைப் பிரித்து விடுவதும் மனைவிகளை விதவைகளாக்கி விடுவதும் மக்களை அனாதையாக்கி விடுவதுமான மெளத்து இதுவே என்று சொன்னார்கள். இதைக் கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் அழவாரம்பித்தார்கள் பின் அருமை மகளை நெஞ்சோடனைத்து அவர்கள் காதில் ஏதோ இரகசியம் சொன்னார்கள். இதைக்கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் கொவென கதறி அழுதார்கள். பாத்திமா(ரலி)அவர்களின் அழுகையைப் பார்த்து பக்கத்திலிருந்த ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் தன் அருமை மனைவியை நோக்கி அவ்வாறு அழவேண்டாம் என்று கண்டித்தார்கள். உடனே கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அலி(ரலி) அவர்களை நோக்கி....அலியே அப்படி சொல்ல வேண்டாம் இறந்து தன் தந்தைக்காக பாத்திமாவை சிறிது கண்ணீர் வடிக்க விடுங்கள் என்று கூறினார்கள். பிறகு அருமை மகளின் அழுகையைப் பாத்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீண்டும் அருமை மகளை அருகில் அழைத்து மீண்டும் ஏதோ இரகசியம் சொன்னார்கள் இதை கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் மிகவும் சிரித்தவர்களாக சந்தோஷமடைந்தார்கள். இக்காட்சியை எப்பொழுதும் நான் பார்த்ததில்லை என்று ஆச்சரியமாக சொன்னார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்கள் அருமை மகளாருக்குச் சொன்ன அந்த இரண்டு இரகசியங்களை அறிந்துக் கொள்ள அயிஷா(ரலி) அவர்களுக்கு ஆசையாக இருந்தது. எப்படியும் மகளாரிடம் இரகசியங்களை அறிந்துக் கொள்ளலாம் என்ற துடிப்புடன் பாத்திமா(ரலி) அவர்கள் தந்தையாரிடம் விடைப் பெற்று வீட்டிற்கு சொல்லும் போது அருலே வந்து அருமை மகளே! நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தாங்களுக்கு சொன்ன அந்த இரகசியம் என்ன? என்று கேட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்ன இரகசியத்தை இப்பொழுது நான் வெளியிட மாட்டேன் . அது வெளிய சொல்ல கூடாத இரகசியம் என்று உறுதியாக கூறிவிட்டார்கள். பிறகு கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வபாத்தானார்கள். சில மதங்கள் கழித்து ஒரு நாள் ஆய்ஷா(ரலி) அவர்கள் பாத்திமா(றலி) அவர்களை சந்தித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கொன்ன அந்த இரகசியம் என்ன? அல்லாஹிவின் பெயரால் கேட்கிறேன் அந்த இரகசியததை சொல்லுங்கள் அருமை மகளே! உங்களுடைய மாற்றாந்தாய் என்ற வகையில் எனக்கு இரகசியத்தை அறிந்து கொள்ள உரிமை இருக்கிறது. அந்த உரிமையில் உங்களிடம் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன? என்று கேட்டார்கள்.
இன்று எனது அருமை தந்தை இல்லை அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்று விட்டார்கள் அதனால் இரகசியத்தை நான் சொல்கிறேன் முதலாவதாக எனதருமை தந்தை என்னிடம் மகளே! ஒவ்வொரு ஆண்டிலும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் குர் ஆனை ஒரு தடவை ஓதிக் காட்டுவார்கள் நான் அவருக்கு ஒரு முறை ஓதிக் காட்டுவேன். இது தான் வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் என்னிடம் இரண்டு தட்வை குர் ஆன் ஓதினார்கள். ஆகையால் என் வாழ்நாள் முடிந்து இவ்வுலகை விட்டும் பிரியப்போகிறேன். எனவே பாத்திமா! நீ பொறுமையை கடைப்பிடிப்பாயாக. நான் உமக்கு நல்வழி காட்டியான தந்தையாவேன். என்று சொன்னார்கள். இதைக் கேட்டு நான் அழ ஆரம்பித்தேன். என்னுடைய அழிகையின் உச்சத்தைக் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீண்டும் என் காதில் மகளே! என் குடும்பத்தாரில் நீயே என்னிடம் முதலாவதாக வந்து என்னை சந்திப்பாய் என்றும் மேலும் சுவனத்துப் பெண்களுக்கு நீர்தாம் தலைவியாய் இருப்பாய் இது உனக்கு சந்தோஷம் இல்லையா? என்று சொன்னார்கள். இதைக் கேட்டவுடன் நான் சிரிக்க வாரம்பித்தேன் என்று இரகசியத்தை வெளியிட்டார்கள்.

21 பிப்ரவரி, 2010

"பாத்திமா(ரலி) அவர்களின் மதிநுட்பம்"

ஒரு சமயம் "ஹிஜ்ர்" என்ற இடத்தில் மக்கத்து குறைஷி காபிர்கள் அனைவரும் ஒன்ரு கூடி கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை கடுமையாக தாக்கி காயப்படுத்த வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். அந்த சமயத்தில் சிறு வயதினராய் இருந்த சிறுமி பாத்திமா(ரலி) அவர்கள் அந்தப் பக்கமாய் ஒரு வேலையாக சென்ற போது குறைஷிகள் இந்த சதி திட்டத்தை அறிந்தார்கள். உடனே ஒட்டமாய் வீட்டிற்கு ஓடி வந்து தங்களின் அருமை தந்தையாரிடம் விஷயத்தை சொன்னார்கள்.

சின்னஞ்சிறு அருமை மகளின் இவ்வார்த்தையைக் கேட்ட கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் எனதருமை மகளே! கவலைப்பட வேண்டாம் என்று கூறிவிட்டு உடனே கஃபத்துல்லாஹ்விற்கு போனார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கஃபாவில் நுழைவதை குறைஷி காபிர்கள் பார்த்துவிட்டார்கள். குறைஷி காபிர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் பார்த்து விட்டார்கள் உடனே அங்கு ஒரு பிடி மண்னை அள்ளி குறைஷிகள் மீது விசி "ஷாஹத்தில் உஸூஹு" என்றுக் கூறினார்கள். பின்பு கஃபாவில் இறை வணக்கத்தில் திளைத்து விட்டார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் இச்செய்கை காபிர்களின் உள்ளத்தில் ஒரு திடுக்கத்தை உண்டாக்கியது நடு நடுங்கிப் போனார்கள்.

"பெண்கள் அணியிம் நகைகள்???"
ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மஸ்ஜித் நபவியிலிருந்து வெளியே வந்தார்கள் அப்போது ஒரு ஏழை மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களைப் பார்த்து. அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டார். அந்த சமயத்தில் தன்னிடம் ஏதும் இல்லை என உணர்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவ்வேளை மனிதரின் மீது இரக்கம் கொண்டவர்களாக ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை அழைத்து இந்த ஏழை மனிதரை எனது அருமை மகள் பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு அழைத்து போங்கள் அவர்கள் ஏதாவது உதவி செய்வார்கள் என கூறினார்கள்.
ஹஜ்ரத் பிலால்(ரலி) அவர்கள் அவ்வேழை மனிதரை பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விபரத்தைச் சொன்னார்கள்.
அப்போது பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டின் நிலவரம் மிக வறுமையில் வாடி இருந்தது. மூண்று நாட்களாக பாத்திமா(ரலி) அவர்கள் பட்டினியோடு இருந்த சமயம் அது அல்லாஹ்வின் தூதர் ஒரு ஏழைமனிதரை அனுப்பி விட்டார்கள் அவரை வெறும் கையோடு அனுப்பிட விடக்கூடாது என்று நினைத்த பாத்திமா(ரலி) அவர்கள் அவ்வேழை மனிதரிடம் தற்சமயம் போர்த்திக் கொள்ள ஒரு போர்வைதான் இருக்கிறது அதை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி கொடுத்தார்கள்.
போர்வையை வாங்கி கொண்ட ஏழைமனிதர் அம்மா? இந்த போர்வையை குளிருக்கு போர்த்துக் கொள்வேன் வயிற்றை பாடாய்ப்படுத்தும் பசியை போர்த்த நான் என்ன செய்வேன்? என்ர்று சொன்னார்கள்.
இதைக் கேட்ட பாத்திமா(ரலி) அவர்களின் உள்ளம் வேதனை அடைந்தது உடனே வீட்டுக்குள் சென்று தங்களின் அருமை தாயார் உம்முஹாத்துல் முஃமினின் கதிஜா(ரலி) அவர்களின் பாரம்பரியமிக்க நினைவுச் சின்னமாக மீதி இருந்த அந்த ஒரே ஒரு கழுத்து நகை அதை எடுத்து வந்தார்கள். நகையை ஏழை மனிதரிடம் கொடுத்து இந்த நகையை விற்று உங்களின் பசி போக்கி கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

"அல்லாஹ் சொன்ன ஆறுதல்"

ஒரு சமயம் பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டில் வேலைகளில் ஈடுபட்டிருந்ததர்கள். அப்போது ஒரு நபர் வந்து அல்லாஹ்வின் தூதர் தங்களை கூப்பிடுகின்றார்கள் என்று சொல்லி சென்றார். தந்தையின் அழைப்பு அவர்கள் உள்ளத்தின் தேன்போல் பாய்ந்தது உடனே சீக்கிரமாக வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இருக்கும் இடம் நோக்கி விரைந்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் முகம் வாடிப்போய், உடல் நடு நடுங்கி கொண்டிருந்தது. இருவரின் அழுகை அல்லாஹ்வுக்கு இரக்கத்தை உண்டு பண்ணியது. அச்சமூட்டி எச்சரிக்கை வசனங்கள் இருவரின் உள்ளத்தை ஆட்டி படைத்ததை அறிந்த அல்லாஹ்! தனது வல்லமை கிருமை இரக்கம் மன்னிப்பு போன்ற வசனங்களை இறக்கி வைத்தான். ஆறுதலான வசனங்கள் வந்ததும் இருவரும் ஆறுதல் அடைந்தார்கள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்

"தந்தை மகளின் துயர நிலை"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் ஏறத்தாழப் பத்து நாட்கள் காய்ச்சலின் வேகம் நீடித்திருந்தது. பாத்திமா(ரலி) அவர்கள் தனது அருமை தந்தையின் நிலை கண்டு கண்ணீர் விட்டழுதார்கள்.
நோயின் வேகத்தால் சில நேரம் ஒரு காலை நீட்டுவார்கள். மற்றொரு காலை மடக்குவார்கள். ஒரு சமயம் நோயின் கடுமையால் மயக்கம் அடைந்தார்கள் பாத்திமா(ரலி) அவர்கள் தனது அருமை தந்தையை அனைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதார்கள் எனது தந்தையின் கஷ்டமே என்ரு சொன்னார்கள். உடனே கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அருமை மகளே! உமது தந்தைக்கு இன்றைக்குப் பிறகு கஷ்டமே இருக்காது. வெறும் தப்பிக்க முடியாத ஒரு நிலைமை உமது தந்தைக்கு இப்போது வருகிறது இனிமே மறு உலகில் சந்திப்பு ஏற்படும் மகளே! அழ வேண்டாம் நான் இவ்வுலகத்தை விட்டு சென்ற பிறகு இன்னாலில்லாஹு வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறுவாயாக! ஏனெனில் இந்த வாசகத்தில் மனிதனுடைய துன்பங்களுக்கெல்லாம் மருந்து இருக்கிறது என்று சொன்னார்கள். இதைக் கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் தேம்பி தேம்பி அழுதார்கள்.
"பாத்திமா(ரலி) அவர்களின் சூடான பதில்"
ஹிதைய்பிய்யா உடன் படிக்கைக்கு பின் மக்கத்து குறைஷிகள் அடிக்கடி உடன்படிக்கையை மீறினார்கள். உண்டபடிக்கையை முறிக்கும் பல காரியங்களை செய்தார்கள் புனித பிரதேசங்களின் உள்ளேயே தாக்குதல் நடத்தினார்கள். ஒப்பந்தத்திற்கு பிறகும் பனீபக்கர்களின் சில மக்கள், குஸா அக்களின் பனீ-க அப் மக்களிடம் உண்டான பகைமையை தொடர்ந்து கொண்டிருந்தனர்.
குஸாக்கள் இது பற்றி சொல்ல மதினாவுக்கு சில தூதுவர்களை அனுப்பி வைத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் நடந்த விஷயங்களை எடுத்துக் கூறி உதவி கேட்டு நின்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் உதவி செய்ய வாக்குறுதி அளித்தார்கள்.
இந்த சம்பவங்களால் ஏற்படக் கூடிய விளைவுகளை நினைத்து பயந்த மக்கத்தினர் அபூஸுப்யானை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் தூது அனுப்பி இருந்தார்கள். அபூஸுப்யான் செல்லும் வழியில் குஸாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை சந்தித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். பயந்து போன அபூஸுப்யான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் வந்து ஓ முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ஹுதைபியா உடன் படிக்கையின் போது நான் இருக்கவில்லை. இப்போது நாம் அதனை மேலும் உறுதி செய்வோம் அதன் காலத்தை நீட்டிக் கொள்வோம் என்றார்.
ஏன்? அதற்கு பங்கும் விளையும் வகையில் உங்கள் தரப்பில் ஏதும் நடந்து விட்டதா? என்று மட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். நிம்மதி இழந்த அபூஸுப்யான் இறைவன் மன்னிக்க வேண்டும் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவ்வாறே நாமும் ஹுதைய்பியாவில் நாம் ஒப்புக் கொண்ட காலம் வரையும் உடன் படிக்கை படியே நடப்போம் அதனை நாங்கள் மாற்றவும் மாட்டோம். அதனிடத்தில் வேறு ஒன்றை ஏற்கவும் மாட்டோம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் இனிகாரியம் ஆகாது நம் சார்பில் சிபாரிசு மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சென்று நம் கோரிக்கையை வாங்கலாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அருமை மனைவியும் அபூஸுப்யானின் இளைய மகளுமான உம்முஹபீபா(ரலி) அவர்களிடம் அபூபக்கர்(ரலி) இன்னும் ப சஹாபாக்களையும் பிறகு அலி(ரலி) அவர்களிடமும் சென்று யாரும் முன் வராதடால் கடைசியால் பாத்திமா(ரலி) அவர்களிடம் வந்தார். பாத்திமா(ரலி) அவர்கள் அபூஸுப்யானை வரவேற்றார்கள். அபூஸுப்யான் அமர்ந்தார் அப்போது பாத்திமா(ரலி) அவர்களின் முன் சிறுவர் ஹஸன்(ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். முஹம்மதின் அருமை மகளே! மனிதர்களுள் ஒருவருக்கொருவரிடையே பாதுகாப்பு உறுதி ஒன்றைதான் அளிப்பதாக கூறும் படி உம் மகனிடம் சொல்லும். அதன் மூலம் உமது மகன் அரபிகள் அனைவருக்கும் நிரந்தரமான தலைவராக உருவாக முடியும் என்று தந்திரமாக பேசி பாத்திமா(ரலி) அவர்களை பணிய வைக்க முன்வந்தார்.
அபூஸுப்யானின் சூழ்ச்சி பாத்திமா(ரலி) அவர்களுக்கு புரியாத என்ன? பாத்திமா(ரலி) என்ன சளைத்தவர்களா? அபூஸுப்யானுக்கு சுடச்சுட அழகான பதிலளித்தார்கள்.அபூஸுப்யான் அவர்களே! சிறுவர்களுக்கு பாதுகாப்புறுதி வழங்குவதில்லை என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் என்றார்கள் அபூஸுப்யான் வாயடைத்துப் போனார்.

20 பிப்ரவரி, 2010

"பாத்திமா(ரலி) அவர்களின் துஆ"
ஒரு சமயம் ஹஜ்ரத் பாத்திமா(ரலி) அவர்கள் தொழுது முடித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் உம்மத்துகளுக்காக அதிகமாக துஆ செய்தார்கள். இதை பார்தத கொண்டிருந்த அருமை மகளார் ஹஸன்(ரலி) அவர்கள். எனதருமை அம்மாவே! நீங்கள் தொழுது எல்லாருக்காகவும் துஆ செய்கின்றீர்கள். ஆனால் உங்களுக்காக அல்லாஹ்விடம் எதுவும் கேட்கவில்லையே என்று கேட்டார்கள். தனது அருமை மகனின் கேள்வி பாத்திமா(ரலி) அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. எனதன்பு மகனே! நாம் முதலாவது அக்கம் பக்கத்து வீட்டுகாரர்களுக்கும். அண்டை அயலார்களின் நலத்திற்கும் துஆ செய்ய வேண்டும் அதன் பிறகு தான் நமக்காக துஆ செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.
"கணவன் எவ்வழியோ அவ்வழி"
மக்கா வெற்றியின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் உடன் பாத்திமா(ரலி) அவர்களும் சென்றிருந்தனர். மக்காவின் உறவினர்கள். பலர் தங்களின் வீடுகளில் தங்க வேண்டும் என்று கெஞ்சினார்கள். நான் எந்த ஒரு வீட்டுக்கும் நுழைய மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார்கள். பள்ளிக்கு அருகாமையில் அபூராபீ (ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் ஒரு கூடாரத்தை அமைத்தார்கள். அதில் பாத்திமா(ரலி) உம்முஸல்மா(ரலி) மைமுனா(ரலி) ஆகியோர் தங்கி இருந்தனர். இன்னும் அக் கூடாரத்துக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வரவில்லை. அதற்குள் மக்காவில் எந்த வீட்டில் த்ங்கி இருக்கும் போது மிஃராஜ் சொல்லும் வாய்ப்பு ஏற்பட்டதோ அந்த அன்புச் சடோதரி உம்முஹானீ(ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். அவர்களின் உறவினர்களான இரண்டு முஸ்லிம் ஆகாத மக்ஸுமிகள் இருந்தனர். அவர்களுக்கு உம்முஹானீ(ரலி) அவர்கள் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு அளித்திருந்தார்கள் உம்முஹானி(ரலி) அவர்களைப் பார்க்க அப்போது அலீ(ரலி) அவர்கள் அங்கு நுழைந்தார்கள். அங்கு இரண்டு மக்ஸூமிகளையும் பார்த்து கோபம் கொண்டு தன் வாளை உருவினார்கள். உடனே உம்முஹானீ(ரலி)அவர்கள் அவ்விருவர் மீது ஒரு போர்வையை வீசி அவர்களுக்கிடையே நின்று அல்லாஹ்வின் பெயரால் கூறுகிறேன் முதலில் என்னை கொண்று போடு. என்று சொன்னார்கள். உடனே அலி(ரலி) அவர்கள் வெளியேறி விட்டார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாத்திமா(ரலி) அவர்கள் தனது கனவர் செய்ய வந்தது சரி இஸ்லாம் உயர்ந்த மார்க்கம் அதை விட்டி விட்டு ஷிர்க்கிலும் குஃப்ரிலும் கிடப்பவர்களுக்கு என்ன பெருமம இருக்கு என்று நினைத்தவர்களாக உம்முஹானீ(ரலி) அவர்களை பார்த்து உம்முஹானியே நீர் சிலை வணங்கிகளுக்கு தஞ்சம் அளிக்கின்றீரா? கூடாது என்று கனவன் சார்பில் நின்று பேசினார்கள். அப்போது அங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நுழைந்தார்கள். தனது ஒன்று விட்ட சகோதரியை அன்புடன் உபசரித்தார்கள். இங்கு நடந்தவற்றை உம்முஹானி(ரலி) அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அவ்வாறு இங்கு எதும் நடந்து விடாது கவலை வேண்டாம் நீர் யாருக்கு தஞ்சம் கொடுக்கிறாயோ அவர்களுக்கு நாம் தஞ்சம் கொடுக்கிறோம் நீர் யாரை பாதுகாக்கிறாயே அவர்களை நாம் பாதுகாக்கிறோம் என்று ஆறுதல் கூறினார்கள்.

18 பிப்ரவரி, 2010

"பாத்திமா(ரலி) அவர்களின் சாதுர்யம்"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் உடல் நலம் குறி நோய்வாய்பட்டிருந்த காலத்தில் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை தனது அருமை தந்தையின் அருகே இருந்து நன்கு பணிவிடைகள் செய்து வந்தார்கள். கண்மணி பாத்திமா(ரலி) அவர்கள். வழக்கம் போல நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனைவி வீட்டில் தங்கி வந்தார்கள். பாத்திமா(ரலி) அவர்களும் தந்தை கூட ஒவ்வொரும் நாளும் தங்கள் சின்னம்மாக்கள் விட்டுக்குச் சென்று சொண்டிருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு நோய் அதிகரித்து விட்டது. அப்படி இருந்தும். நாலைக்கு யார் முறை நாளைக்கு யார் வீட்டில் தங்குவது? நாளைக்கு எந்த வீட்டில் நான் இருப்பது?நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கேடு கொண்டே இருந்தனர்.பாத்திமா (ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்க போகும் வீட்டை சொல்வார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நோய்வார் பட்ட முதல் நாள் மைமுனா(ரலி) அவர்கள் வீட்டில் தங்கினார்கள் அதிலிருந்து வரிசையாக ஒவ்வொரு மனைவி வீடுகளிலும் தங்கினார்கள். அருமை தந்தையாரின் கஷ்டங்களை அருகிலிருந்து பார்த்த அருமை மகளார் பாத்திமா(ரலி) அவர்கள் யோசனை சொன்னார்கள் தந்தையாரின் இக்கேள்விகள் சின்னம்மா அயிஷா(ரலி) அவர்கள் வீட்டில் தங்கத்தார் ஆசைப்படுகிறார்கள். என்ற முடிவுக்கு வந்தார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவர்களின் அனைத்து மனைவியரையிம் ஒன்று கூட்டிப் பேசினார்கள் என் அருமை தந்தை தாங்கள் வீடுகளுக்கு முறைதவறாமல் வருவதால் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். எனவே நீங்கள் ஒரு முடிவு செய்து என் தந்தையை ஒரே வீட்டில் இருக்க அனுமதியுங்கள். அனைவரும் வந்து பணிவிடை செய்யுங்கள் என்று சாதுரியமாக பேசினார்கள். இதைக் கேட்ட அனைத்து மனைவிமார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் தங்கட்டும் என்ற முடிவுக்கு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் அனைவரும் வந்து சொன்னார்கள். பாத்திமா(ரலி) அவர்களின் சாதுர்ய பேச்சி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை ஆய்ஷா(ரலி) வீட்டுக்கு கொண்டு வந்தது. புன் முறுவல் பூத்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒரு போர்வையால் தங்களைப் போர்ட்த்திக் கொண்டார்களாக ஹஜ்ரத் அலி, ஹஜ்ரத் பழ்ள் இப்னு அப்பாஸ் (ரலி) இருவரின் தோளின் மீது தங்களின் முபாரக்கான கைகளை வைத்து தாங்கிக் கொண்டவர்களாக உம்மஹாத்துல் முஃமீன்ன் ஆய்ஷா(ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் இதற்குப் பிறகு நாளை யார் வீட்டில் தங்குவேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கேட்பதே இல்லை...
"பத்தினிப் பெண்கள் யார்?"
சுவனப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்காள் வீட்டை விட்டு அடிக்கடி வெளியே செல்ல மாட்டார்கள். இந்த விஷயம் மதினாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஒரு நாள் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒரு சஹாபியின் இறப்புக்குச் சென்று தொழ வைத்து அடக்கம் செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது...தெருவோரத்தில், தங்களின் அருமை மகளார் பாத்திமா(ரலி) அவர்கள் சென்று கொண்டிருப்பதத பார்த்து விட்டார்கள். ஆச்சரியப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்கள் அருமை மகளின் அருகில் சென்று என தருமை மகளே! எதற்காக வெளியே வந்தீர்கள் என்று கேட்டார்கள்.
அதற்கு பாத்திமா(ரலி) அவர்கள் என தருமை தந்தையே, அண்டை வீட்டில் ஒரு துக்கம் விசாரித்து வருவதற்காக வந்தேன் என்று சொல்லி அந்த குடும்பத்தை பற்றி சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். மகளோடு வீட்டுக்குச் சென்றார்கள்.
"பாத்திமா(ரலி)அவர்களின் பெருந்தன்மை"
ஒரு சமயம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு தூமா நாட்டின் அரசை அகீதர் என்பவர் ஒரு பட்டாடையை அன்பளிப்பாக அனுப்பி இருந்தார். அதை பெற்றுக் கொண்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களிடம் கொடுத்த. அலீயே உமது வீட்டில் உள்ள மூன்று பாத்திமாக்களுக்கு தலையை போர்த்துவதற்கு இந்த ப்அட்டாடையை கொடுத்து விடும் என்று சொன்னார்கள். ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் வீட்டில் மூன்று பாத்திமாக்கம் இருந்தார்கள். எப்படி?
1. ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களின் தாயார் பாத்திமா (ரலி)
2. ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களின் மனைவி பாத்திமா (ரலி)
3. ஹஜ்ரத் ஹம்ஸா(ரலி) அவர்களின் மகள் பாத்திமா(ரலி) ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கொடுத்த பட்டாடையை வீட்டில் கொடுத்தார்கள் மூன்று பேரும் சமமாக பங்கிட்டுக் கொண்டார்கள்.