11 மார்ச், 2010

கேள்வி : அப்ரஹாவின் நிலை என்ன ஆயிற்று?
பதில் : திருமக்காவினுள் நுழைவதற்கு அப்ரஹா தயாராகி முதன் முதலில் தன்னுடைய படைகளில் இருந்த யானைகளை முன்னே செல்லக் கட்டளையிட்டான். இந்த யானைகளில் தலைமையானதும் பல சண்டைகளுக்குச் சென்று வந்ததுமான யானையின் பெயர் மஹ்மூது என்பதாகும்.
இந்த யானையை மக்காவின் திசையை நோக்கி ஓட்டும் போதெல்லாம் அது வேறு திசையிலே செல்லும் மீண்டும் இதை மக்காவை நோக்கிக் திருப்பிவிட்டால் அது ஹரம் எல்லையில் படுத்துக் கொள்ளும் அப்படியே செய்தன. இந் நிலையில் இறைவனால் அனுப்பப்பட்ட அந்தப் இரண்டிலும் வைத்திருந்த கற்களை அப்படை வீரர்களின் மீது வீசின.
இந்தக் கற்கள் இரும்புக் கவசங்களையும் துளைத்துக் கொண்டு உடம்பில் பாயும் சக்தியை பெற்றவையாக இருந்தன. பறவைகளின் பாயும் சக்தியை பெற்றவையாக இருந்தன. பறவைகளின் கல்லடி தாங்க முடியாமல் படைகள் நாலாபக்கமும் சிதறி ஓடின. பெரும்பாலான படை வீரர்கள் அடிதாங்க முடியாமல் மடிந்தனர் உயிர் தப்பியவர்களும் அப்ரஹாவும் எமன் நாட்டின் திசை நோக்கிச் சென்றனர்.
ஆனால் பறவைகள் அப்ரஹாவிஅயும் விட்டு வைக்க வில்லை. அவனுக்கு பலத்த அடி கொடுத்ததில் அவனது உடம்பெல்லாம் இனங் காணமுடியாத கடுமையான நோய் ஏற்பட்டு விரல்களெல்லாம் துண்டு துண்டாக விழுந்து விட்டன சிறகு ஒடிந்த பறவையைப் போல் தன்னுடைய நாட்டிற்குச் சென்று சில நாட்களில் மரணமடைந்தான்.
மலைமீது இருந்து கொண்டு படைபவரும் திசையை எதிர்பார்த்த வண்ணமிருந்த அப்துல் முத்தலிபு படைகள் ஏன் வரவில்லை என்று அறிவதற்காகத் தாமே அப்ரஹாவின் படைவீரர்கள் இருந்த இடத்திற்குப் போனார். அங்கு முஸ்தலிபாவிற்குப் பக்கத்தில் ஹரம் ஷரிபின் எல்லை யோரத்தில் அவர்கள் பெரும்பாலோர் இறந்து கிடப்பதைப் பார்த்தார்.
பின்னர் அந்த ஆப்ரவிடம் படைவீரர்கள் விட்டுச் சென்ற முக்கிய தளவடங்களையும் தங்கம் வெள்ளி சாமான்களையும் எடுத்துக் கொண்டு மறைந்திருந்த மக்கத்து மக்களுக்குச் செய்தியைச் சொல்லி அவர்களை ஊருக்குள் அழைத்து வந்தார்,
அன்புள்ள வாசகர் பெருமக்களே! கஃபாவை இடிக்க வேண்டும் என்ற நோக்கோடு பெரும் படைகளைதிரட்டிக் கொண்டு வந்தான் அப்ரஹா அவனுடைய எண்ணம் மட்டும் நிறைவேறி இருந்தால் அன்றே மக்காவில் அபிசீனிய ஆட்சி நுழைந்திருக்கும் அரபு நாட்டு மக்கள் அபிசீனிய அடிமையாக வாழ்ந்து தம் அரசியல் சுதந்திரத்தையும் இழந்திருப்பார்கள். எனவே தாங்கள் காப்பாற்றப்பட்ட இந்த நிகழ்ச்சியை அரபு மக்கள் பெரிதென மதித்து அரபி வருடத்தை கணித்தார்கள். இந்த சம்பவம் பற்றி அருள் மறையாம் திருமறையில் ஸூரத்துல்பீல் என்ற அத்தியாயத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக