கேள்வி : ஜுஹைர்ருப்னு பத்ர் என்பவர் செய்த சூழ்ச்சி என்ன?
பதில் : அரபு நாட்டு மக்கள் செய்தியறிந்து மன வேதனையுடன் இருக்கும் நேரத்தில் ஹுஹைருப்னு பத்ர் என்பார் அப்ரஹா கட்டிய தேவாலயத்தை அசிங்கப் படுத்துவேன் என்று சபதம் செய்து கொண்டு நேரடியாக ஸன் ஆவுக்கு வந்து அவ்வாலயத்தில் பயபக்தியுடன் வணங்குவது போல நடித்தார் இவருடைய நடிப்பை உணராத் தேவாலயத்தை சார்ந்தோர் அங்குள்ள ஊழியர்களில் ஒருவராக அவரைத் தேர்ந்தோர் அங்குள்ள ஊழியர்களில் ஒருவராக அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இதன் பின்னர் ஜுஹைர் தக்க தருணத்தில் தம் சபதத்தை நிறைவேற்றி அந்த ஆலயத்தை அசுத்தப்படுத்தி விட்டு மறைந்துவிட்டார்.
கேள்வி : இச்செய்தி அறிந்த அப்ரஹா என்ன செய்தான்?
பதில் : தாங்க முடியாத அளவுக்கு ஆவேசமும், ஆத்திரமும் அடைந்து திருமக்காவிலுள்ள கஃபாவை இடித்தெறிந்தால் தான் இவ்வவமதிப்புக்குத் தக்க பரிகாரம் ஆகும் என முடிவு கட்டினான். மேலும் கஃபா இருக்கும் வரையில் தன் தேவாலயத்திற்கு எந்த மதிப்பும் இராது என்பதை உண்ர்ந்து, அபிஸீனிய மன்னனுக்குச் செய்தி தெரிவித்து மாபெரும் படையோடு மக்காவை நோக்கிப் புறப்பட்டான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக