ஆப்ரஹாவின் ஏமாற்றம்
கஃபாவை இடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதற்காகத் தான் அப்துல் முத்தலிபும் அவருடைய ஆட்களும் வந்திருக்கின்றார்கள் என்று என்னி பெருமகிழ்ச்சி அடைந்து அப்துல் முத்தலிபையும் அவரோடு வந்திருப்பவர்களையும் அப்ரஹா மரியாதையாக வரவேற்றுத் தன் அரியசனத்தை விட்டு இறங்கித் தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் அப்துல் முத்தலிப்புக்கு அருகில் அமர்ந்து சிரித்த முகத்தோடு, "அப்துல் முத்தலிபு அவர்களே! தாங்கள் இங்கு வந்த நோக்கம் என்ன? என்று கேட்டான்.
அதற்கு அப்துல் முத்தலிபு: அரசே! என்னுடைய ஒட்டகங்கள் காட்டில் மேய்ந்து கொண்டிருந்தன அவற்றைத் தங்களுடைய ஆட்கள் ஓட்டிக் கொண்டு வந்து விட்டனர் அவற்றை எங்களிடத்தில் ஒப்படைந்து விட வேண்டும் என்று சொல்லித்தாங்கள் அவர்களுக்குக் கட்டளை இடவேண்டும் என்ரு சொல்லத்தான் நான் தங்களைப் பார்க்க வந்தேன் என்றார்.
இதைக் கேட்ட அப்ரஹா ஆச்சரியத்துடன் தாங்கள் கஃபவைப் பற்றி எந்தப் பேச்சுமே பேசவில்லையே ஏன்? அதனை இடிப்பதற்குத் தானே நான் வந்திருக்கின்றேன். பூரிவீக காலமாகவே இதில் தானே உங்களது பெருமையும் சிறப்பும் அடங்கியுள்ளது இதன் காரணமாகத்தானே உங்களுக்குப் பாதுகாவல் இருந்து வருகின்றது அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாலம் கேட்கின்றீர்களே? என்றான்.
அதற்கு அப்துல் முத்தலிபு அவர்கள் ஒட்டகைக்கு நான் சொந்தக்காரன் கஃபாவிற்கு நான் சொந்தக்காரன் அல்லன் அதற்குரியவன் வேறு இதற்கு முன்பு ஸைபுன்னு தீயத்னைன். இஸ்ரா போன்றாரை விட்டும் அவன் தான் காப்பாற்றினான்! இப்போதும் அவனே அதைக் காப்பபற்றிக் கொள்வான்! என்றார்கள்.
அப்ரஹா இதைக் கேட்டு கடுங்கோபங் கொண்டு அதிகாரிகளைப் பார்த்து அப்துல் முத்தலிபின் ஒட்டகங்களைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்னைத் தவிர இந்த கஃபாவை யார் காப்பாற்றுவார்? என்பதை அவர் பார்க்கட்டும் என்றான்.
அப்துல் முத்தலிப் தம் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு மக்காவிற்கு வந்துவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக