18 பிப்ரவரி, 2010

"பாத்திமா(ரலி) அவர்களின் சாதுர்யம்"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் உடல் நலம் குறி நோய்வாய்பட்டிருந்த காலத்தில் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை தனது அருமை தந்தையின் அருகே இருந்து நன்கு பணிவிடைகள் செய்து வந்தார்கள். கண்மணி பாத்திமா(ரலி) அவர்கள். வழக்கம் போல நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனைவி வீட்டில் தங்கி வந்தார்கள். பாத்திமா(ரலி) அவர்களும் தந்தை கூட ஒவ்வொரும் நாளும் தங்கள் சின்னம்மாக்கள் விட்டுக்குச் சென்று சொண்டிருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு நோய் அதிகரித்து விட்டது. அப்படி இருந்தும். நாலைக்கு யார் முறை நாளைக்கு யார் வீட்டில் தங்குவது? நாளைக்கு எந்த வீட்டில் நான் இருப்பது?நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கேடு கொண்டே இருந்தனர்.பாத்திமா (ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்க போகும் வீட்டை சொல்வார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நோய்வார் பட்ட முதல் நாள் மைமுனா(ரலி) அவர்கள் வீட்டில் தங்கினார்கள் அதிலிருந்து வரிசையாக ஒவ்வொரு மனைவி வீடுகளிலும் தங்கினார்கள். அருமை தந்தையாரின் கஷ்டங்களை அருகிலிருந்து பார்த்த அருமை மகளார் பாத்திமா(ரலி) அவர்கள் யோசனை சொன்னார்கள் தந்தையாரின் இக்கேள்விகள் சின்னம்மா அயிஷா(ரலி) அவர்கள் வீட்டில் தங்கத்தார் ஆசைப்படுகிறார்கள். என்ற முடிவுக்கு வந்தார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவர்களின் அனைத்து மனைவியரையிம் ஒன்று கூட்டிப் பேசினார்கள் என் அருமை தந்தை தாங்கள் வீடுகளுக்கு முறைதவறாமல் வருவதால் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். எனவே நீங்கள் ஒரு முடிவு செய்து என் தந்தையை ஒரே வீட்டில் இருக்க அனுமதியுங்கள். அனைவரும் வந்து பணிவிடை செய்யுங்கள் என்று சாதுரியமாக பேசினார்கள். இதைக் கேட்ட அனைத்து மனைவிமார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் தங்கட்டும் என்ற முடிவுக்கு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் அனைவரும் வந்து சொன்னார்கள். பாத்திமா(ரலி) அவர்களின் சாதுர்ய பேச்சி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை ஆய்ஷா(ரலி) வீட்டுக்கு கொண்டு வந்தது. புன் முறுவல் பூத்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒரு போர்வையால் தங்களைப் போர்ட்த்திக் கொண்டார்களாக ஹஜ்ரத் அலி, ஹஜ்ரத் பழ்ள் இப்னு அப்பாஸ் (ரலி) இருவரின் தோளின் மீது தங்களின் முபாரக்கான கைகளை வைத்து தாங்கிக் கொண்டவர்களாக உம்மஹாத்துல் முஃமீன்ன் ஆய்ஷா(ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் இதற்குப் பிறகு நாளை யார் வீட்டில் தங்குவேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கேட்பதே இல்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக