தண்ணீர் இல்லையே தந்தையே!
ஒரு சமயம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவட்கள் தமது அருமை பாத்திமா ரலி அவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்கள் வீடு நெருங்கியதும் பாத்திமா ரலி அவர்கள் வீட்டில் குழ்ந்தைகள் அழும் சப்தம் வெளியே கேட்கிறது துடிதுடித்து போன நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் உடனே வீட்டிற்குள் நுழைந்தார்கள் பாத்திமா ரலி அவர்களை அழைத்து என தரும பேரர்கள் ஏன் அழுகிறார்கள் என்று கேட்டார்கள்
வீட்டில் தண்ணீர் இல்லை தந்தையே தாகத்தால் குழந்தைகள் அழுகின்றார்கள் என பாத்திமா ரலி அவர்கள் சொன்னார்கள் அப்போது வறட்சியான நேரம் அக்கம் பக்கத்துல் தண்னீர் கேட்டும் அங்கும் தண்ணீர் தட்டுப் பாடுதான் என்ன செய்வது? உடனே அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களின் முபாரக்கான நாக்கை நீட்டி குழ்ந்தைகளின் வாயில் வைத்து சப்பச் சொன்னார்கள் குழ்ந்தைகள் தாகம் தீர சுவைத்தார்கள். முபாரக்கான நாக்கில் புனிதமான நீரை அல்லாஹ் வரவழைத்தான் இதைக் கண்டு பாத்திமா ரலி அவர்கள் முகுந்த சந்தோஷப் பட்டார்கள்.
படிப்பினை:
கடுமையான கோடை காலம் எங்கும் தண்ணீர் பஞ்சம் குழ்ந்தைகள் தண்ணீர் கேட்டு தாகத்தால் அழும் அளவுக்கு தண்ணீர் இல்லாத நிலை இன்று தண்ணீர் செழிப்பை அல்லாஹ் நமக்கு தந்துள்ளான் அதன் அருமை பெருமை தெரியாமல் வீண்விரயம் செய்து வருகிறோம். தண்ணீர் விஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் சுவனத்து இளைஞ்ர்களுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் முபாரக்கான நாவிலிருந்து நீரூற்றையே அல்லாஹ் வெளிபாக்கி காட்டினான். இது நமது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் முஃஜிஸாவாகும். பாத்திமா ரலி குடுப்பத்துற்கு கிடைத்த மாபெரும் பேராகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக