"பாத்திமா(ரலி) அவர்களின் துஆ"
ஒரு சமயம் ஹஜ்ரத் பாத்திமா(ரலி) அவர்கள் தொழுது முடித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் உம்மத்துகளுக்காக அதிகமாக துஆ செய்தார்கள். இதை பார்தத கொண்டிருந்த அருமை மகளார் ஹஸன்(ரலி) அவர்கள். எனதருமை அம்மாவே! நீங்கள் தொழுது எல்லாருக்காகவும் துஆ செய்கின்றீர்கள். ஆனால் உங்களுக்காக அல்லாஹ்விடம் எதுவும் கேட்கவில்லையே என்று கேட்டார்கள். தனது அருமை மகனின் கேள்வி பாத்திமா(ரலி) அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. எனதன்பு மகனே! நாம் முதலாவது அக்கம் பக்கத்து வீட்டுகாரர்களுக்கும். அண்டை அயலார்களின் நலத்திற்கும் துஆ செய்ய வேண்டும் அதன் பிறகு தான் நமக்காக துஆ செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக