24 பிப்ரவரி, 2010

"உம்மஹாத்துமுஃமின்களின் போராட்டம்"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மனைவியரில்(1) கதிஜா பிந்த் குவைலித்(ரலி)(2) ஜெய்னப் பிந்த் குஜைமா(ரலி) ஆகிய இருவரும் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் வாழ்ந்திருக்கும் போதே இறந்து விட்டார்கள்.
மீதமுள்ள ஒன்பது மனைவியரும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரியும் போது உயிருடன் இருந்து அதற்கு மின் மரணமடைந்தார்கள்.
ஒன்பது மனைவியரும் இரு அனியினராக இருந்தார்கள்.
"அலீப் பகுதி"
1.தலைவி ஆயிஷா(ரலி)
2.ஸவ்தா (ரலி)
3.ஸபிய்யா(ரலி)
4.ஹப்ஸா(ரலி)
5.ஜெய்னபு பிந்த் ஜஹ்ஷ்(ரலி)

"பே" பகுதி
1. தலைவி: உம்முஸல்மா(ரலி)
2.உம்முஹபீபா(ரலி)
3.மைமூனா(ரலி)
4.ஜுவைரிய்யா(ரலி)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவர்களின் அனைத்து மனைவிமார்களோடு அன்பாகவும் நீதமாகவும் இருப்பார்கள். ஆய்ஷா(ரலி) அவர்கள் மீது இயற்கையாகவே பேரண்பு கொண்டவர்களாக இருந்தார்கள். இது பல சந்தர்ப்பங்களில் பல நிலழ்ச்சிகள் மூலம் நபி ஸல்லலலாஹு அலைஹிவ ஸல்லம் அவர்காள் சொல்லியும் செய்தும் காட்டியுள்ளார்கள். மதினாநகரில் அனைத்து மக்களுக்கும் இவ்விஷயம் நன்கு தெரியும் மதினாவில் மக்களிடம் ஒரு பழக்கம் இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் விஷ்யம் பேசவும் ஏதாவது ஒரு அபிப்பிராயம் கேட்கவும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை பார்த்து ஆதரவு கேட்கவும் குர் ஆன் அனுமதித்தது போல தங்களின் வேண்டுகோளுக்குச் சார்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு அன்பளிப்புகள் கொடுக்கவும் நாடுவார்களேயானால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் இருக்கும் போது தான் செல்வார்கள்அன்பளிப்புகளை கொடுப்பார்கள். காரனம் ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் இருக்கும் போது தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயமாக சென்றாலும் அதை உடனே கவனித்து நிறைவேற்றி தருவார்கள் என்ற நம்பிக்கை மதினாவில் மக்களிடம் அசைக்க முடியாத வகையில் இருந்தது. இதன் காரணமாக ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் அன்பளிப்புகள் குவிந்தன. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டிலில்லாமல் வேறு மனைவியர் வீட்டில் இருக்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரிந்தால், யாரும் அவ் வீடுகளுக்கு செல்லமாட்டார்கள். இது உம்முஸல்மா(ரலி) அவர்களுக்கும். அவர்கள் அணியினருக்கும் கடுமையான பொறாமையும். அவர்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் தலை தூக்கவாரம்பித்து ஆய்ஷா(ரலி) அவர்கள் அணியினருக்கு கொண்டாட்டம். உம்முஸல்மா(ரலி) அணியினருக்கு திண்டாட்டம். ஒரு நாள் உம்முஸல்மா(ரலி) அவர்கள். நாங்கள் அணியினரை ஒன்று சேர்த்து ஆலோசனை நடத்தினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அனைத்து மனைவியிடமும் நீதமாக உள்ளார்கள்? மக்களுக்கு என்ன நேர்ந்தது? இப்படி பாகுபாடு செய்கிறார்களே! இதற்கு ஒரு முடிவு கட்டாலம் விடக் கூடாது. என்று ஆலோசித்து, இது சம்பந்தமாக, ஒரு முடிவு தெரிய உம்முஸல்மா(ரலி) அவர்கள் தன் சார்பிலும் தங்கள் அணியினர் சார்பிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சென்று முறையிட்டார்கள் எப்படி? அல்லாஹ்வின் தூதரவர்களே! உங்கள் மனைவிகள் அனைவரும் சமமே! அப்படி இருக்க நீங்கள் எந்த மனைவி வீட்டில் இருந்தாலும் சரி மக்கள் அன்பளிப்புகளை அந்தந்த வீட்டில் கொண்டு வந்து கொடுப்பதுதான் நியாயம் குறிப்பிட்ட ஒரு மனைவி வீட்டில் இருக்கும் போது மட்டும் அன்பளிப்புகளை அள்ளிக்கொண்டு வந்து குவுப்பது அநியாயம்,அப்படி இல்லாமல் அன்பளிப்புகளை ஒத்துப் போடாமல் பொதுவாக நான் எந்த வீட்டில் இருந்தாலும் அங்கு வந்து அன்பளிப்புகளை கொடுங்கள் பாரபட்சனை காட்ட வேண்டாம் என்று உடனடியாக நீங்கள் மக்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிடுங்கள் என்று முறையிட்டார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்காள் மெளனமாக இருந்து விட்டார்கள். சில நாள்கள் கழித்து மீண்டும் உம்முஸல்மா(ரலி) தங்கள் அணியினர் சார்பாக வந்து அதே விஷயத்தை வலுயுறுத்தினார்கள். அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பதிலேதும் பேசவில்லை பிறகு கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் முறையிட்டார்கள்.மூன்று தடவை வந்து முறையிட்டார்கள். இப்போது கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பேச துவங்கினார்கள்.
ஆய்ஷாவைப் பொறுத்து என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். நானும் ஆய்ஷாவும் ஒரே போர்வையில் இருக்கும் போது தான் வஹிவருகிறது. வேறு எந்த மனைவியுடன் நான் இருக்கும் போது வஹி வந்ததில்லை. உங்கள் கோரிக்கை நியாயமானது தான். நான் என்ன செய்ய முடியும்? ஆய்ஷாவுடன் நான் இருக்கும் போது தவிர உங்களை தொல்லைகள் கொடுத்தற்காக நான் அல்லாய்விடம் மன்னிப்பு கேட்கின்றேன். இனிமேல் தொல்லை கொடுக்க வேண்டாமென்று பதிலளித்தார்கள். அங்கே இருந்து சென்ற உம்முஸல்மா(ரலி) அவர்கள் தங்கல் அணியினரை அழைத்து விஷயத்தை சொல்லி. மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று அலோசனை செய்தனர். முடிவில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு மிகப்பிரியமானவர் அவர்களின் மகள் பாத்திமா(ரலி) அவர்கள்தான் அவர்களை வைத்தே இப்பிரச்னைக்கு தீர்வுகாணலாம் என்று முடிவாகி பாத்திமா(ரலி) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார்காள் பாத்திமா(ரலி) வந்தவுடன் விஷயத்தைச் சொல்லி எங்கள் சார்பாக உங்கள் தந்தையிடம் ஒரு நியாயத்தை வழ்ங்குபடி செய்யுங்கள் என்று கூறினார்கள். பாத்திமா(ரலி) அவர்கள் இவ்விஷயத்தில் இறங்கி நியாயம் வாங்கி தருவதாக ஏற்றுக் கொண்டார்கள். தயக்கத்துடன் இருந்தாலும் பாத்திமா(ரலி) அவர்கள் மிக யோசனை உடையவர்கள். உடனடியாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடன் சென்று விஷயத்தை சொல்லவில்லை. ஒரு சில தினங்கள் யோசனைக்காக ஒத்திப் போட்டார்கள் உம்முஸல்மா(ரலி) அவர்கள் அணியினருக்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை உடனடி நியாயம்கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் அணியில் உள்ள உறுப்பினர் ஜய்னபு பிந்த ஜஹ்ஷி(ரலி) அவர்களை பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு அனுப்பி உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் பாத்திமா(ரலி) அவர்களை அனுப்பி வைக்கும் படி சொன்னார்கள் ஜய்னபு(ரலி) பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களை இது விஷயத்தில் வற்புறுத்தினார்கள். ஒத்திப் போடக் கூடாது என்று நினைத்த பாத்திமா(ரலி) அவர்கள் உடனே தங்களின் அருமை தந்தையிடம் சென்று அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட அத்தனை விஷயங்களையும் எடுத்துச் சொல்லி நியாயம் கேட்டார்கள். தாய்மார்களுக்காக மகள் நீதி கேட்டி வந்தது நினைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு உள்ளுக்குள் பெருமிதமாக இருந்தது. இருந்தாலும் தனது அன்புகளை நோக்கி...என் இளம் மகளே! நான் ஒன்று சொன்னால் நீ ஒன்று சொல்வியா? நான் பிரியப்படுவதை நீ பிடியப்படமாட்டாயா? என்று கேட்டார்கள். ஆம்....தந்தையே என்ரு சைகை மூலமாக பாத்திமா(ரலி) அவர்கள் ஆமோதித்தார்கள். அப்படியானால் நீ உன் சின்னம்மா ஆய்ஷாவை நேசிப்பாயாக என்ரு பக்கத்தில் இருந்த ஆய்ஷா(ரலி) அவர்களை சுட்டிக் காட்டினார்கள். பிறகு பாத்திமா(ரலி) அவர்களை நோக்கி மகளே! உன்னை இங்கு அனுப்பியது ஜெய்னபு தானே! என்று கேட்டார்கள் "ஜெய்னபும். மற்ற இரண்டாவது அணியினர் பெயர்களை சொன்னார்கள். பாத்திமா(ரலி) அவர்காள்.
நான் சத்தியம் செய்து சொல்வேன் இதனை தொடங்கி வைத்தவர்கள் ஜெய்னபு தான் என்று வற்புறுத்திக் சொன்னார்கள். ஆம் தந்தையே ஜெய்னபு(ரலி) தான் என்று பாத்திமா(ரலி) அவர்காள் சொன்னார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள். பாத்திமா(ரலி) அவர்கள் தங்களின் தந்தையாரிடம் விடைபெற்று இரண்டாவது அணியிடம் வந்து நடந்தவற்றை கூறினார்கள் பாத்திமா(ரலி) அவர்கள் சென்றும் சரியான முடிவு கிடைக்க வில்லையே என்று இரண்டாவது அணியினர் டென்ஷனானார்கள்.
அல்லாஹ்வின் தூதர் மகளே! நாங்க எல்லாம் உனது அம்மாக்களல்லவா? நீர் எங்களுக்காக எதையுமே பெற்று தரவில்லை? எனவே மீண்டும் உமது தந்தையிடம் சென்று நன்கு பேசி எங்களுக்கு நீதியை வாங்கிவிடுங்கள் என்று வற்புறுத்தினார்கள் உஷாராண பாத்திமா(ரலி) அவர்கள் இனியும் நான் என் தந்தையிடம் இது பற்றி முறையிட போகமாட்டேன் என்று கூறி மறுத்து விட்டு வீடு போய் விட்டார்கள். உடனே ஜெய்னபு (ரலி) அவர்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம்நீதி வாங்க அனுப்பி வைத்தார்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சென்று ஜெய்னபு(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! ஆய்ஷா(ரலி) விஷயத்தில் நீதி வேண்டும் என்று உங்கள் மனைவிமார்கள் கேட்கிறார்கள். இதற்கு ஒரு முடிவை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். ஜெய்னபு (ரலி) கோபமாக வேகமாக சத்தம் போட்டு பேசினார்கள். ஆய்ஷா(ரலி) அவர்களையும் கோபத்தில் பேசினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஜெய்னபிடம் ஆய்ஷாவை பேச சொன்னார்கள் ஆய்ஷா(ரலி) அவர்களும் விடவில்லை. பதிலுக்கு அவர்களும் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தார்கள். இரு மனைவிக்கும் கடுமையான மோதல் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒன்றும் குறுக்கே பேசாமல் இருவரின் சண்டையை ரசித்துக் கொண்டிருந்தார். இருவரும் சளைக்கவில்லை. ஆய்ஷா(ரலி) அவர்கள் அடுக்கடுக்காக ஆதாரங்களோடு தங்கள் தரப்பு நியாயத்தை அள்ளி வீசினார்கள். பிறகு இருவரையும் சமாதானம் செய்தார்கள். அமைதிப்படுத்தி ஜெய்னபு(ரலி) சென்ற பின்னர் ஆய்ஷா(ரலி) அவர்களை நோக்கி...ஆய்ஷா! நீர் உண்மையிலேயே அபூபக்கர் மகளேதான்!(அபூபக்கர் மகள் என்றால் மகள்தான்)என்று பாராட்டிப் பேசினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக