"பாத்திமா(ரலி)யின் பசி போக்கிய துஆ"
ஒரு நாள் பாத்திமா(ரலி)அவர்கள் கடுமையான பசியுடன் தன் தந்தையைப் பார்க்க வந்தார்கள். பாத்திமாவைப் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பக்கத்தில் அழைத்து உட்கார வைத்தார்கள் பசியின் கடும் கொடுமையால் முகம் வெளுத்து இருந்தது. முகம் சோகை பிடித்துப் போய் இருந்ததைப் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களின் முபாரக்கான கையை மகள் மீது வைத்து ஒரு துஆ செய்தார்கள்.
பசியின் கொடுமையை தீர்ப்பவனே! தேவைகளை நிறைவு செய்பவனே! குறைகளை பூர்த்தி செய்பவனே! குறைகளை எல்லாம் நிறையாக மாற்றுபவனே! முஹம்மதின் மகள் பாத்துமாவைப் பசிக் கொடுமையிலிருந்து நீக்கி கிருபை செய்வாயாக என்றார்கள்.
உடனே பாத்திமா(ரலி) அவர்களின் சோகை முகம் மாறி இரத்த ஒட்டம் நிறைந்ததாக ஆகியது. இந்த துஆவிற்குப் பிறகு சுவனத்துப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் பசியுடனே இருக்கவே இல்லை. இதை பாத்திமா(ரலி) அவர்களே சொன்னார்கள். கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் துஆவை அல்லாஹ் கபூல் செய்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக