"வீட்டுக்கு உழைத்த வீரப்பெண்மணி"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொந்த பந்தங்கள் மற்றும் பணிவிடை செய்யக் கூடியவர்கள் என்று ஒரு சிறு கூட்டமே இருந்தது. மஸிஜித் நபவியில் திண்னைத் தோழர்கள் வேறு இருந்தார்கள். அப்போது பாத்திமா(ரலி) அவர்காளுக்கு திருமனம் நடக்காத காலம் தின்னைத் தோழர்களுக்கு வேண்டிய உணவுகள் உடைகளை கொடுத்து அவர்களை நன்கு உபசரித்து வருவார்கள் பாத்திமா(ரலி) அவர்கள், வீட்டு வேலைகளில் கைக்கு ஆள் குறைவில்லாமல் இருந்தது. பாத்திமா(ரலி) செல்ல பிள்ளையாக பொறுப்புடன் ஆளுக்கு ஒரு வேலையை செய்வதால் பாத்திமா(ரலி) அவர்களுக்கு எந்த கஷ்டமும் அதிக வேலையும் இல்லை., தங்களின் அருமை சகோதரி உம்மு குல்தூம்(ரலி) தங்களின் அருமை தங்கை பாத்திமாவுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் பாத்து கொள்வார்கள். உம்மு அய்மன்(ரலி) அவர்களும் வேலைகளில் துனையாக இருந்தார்கள். உம்முஸுலைம்(ரலி) தனது 10வயது மகன் அனஸ்(ரலி) அவர்களின் பணிவிடைக்கு அர்ப்பணித்தார்கள். சிறுசிறு வேலைகள். வெளி வேலைகளுக்கு அனஸ்(ரலி) உதவியாக இருந்தார்கள். மேலும் உம்முஸுலைம்(ரலி) அவர்கள் கணவர் அபூதல்ஹா(ரலி) இருவரும் எப்போதும் வீட்டு, வெளி வேலைகளுக்கு உதவியாக இருந்தார்கள். இப்னுமஸ்வூது(ரலி) நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் குடும்பத்தின் ஹித்மத்துக்காக காத்து கிடந்தார்கள்.அப்பாஸ்)ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு பணிவிடை செய்ய அபூராபியை அன்பளிப்பு செய்து இருந்தார்கள். உத்மான் இப்னு-மஸ்வூனின் விதவை கவ்லா என்ற பென்மனி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வீட்டு பனிவிடைக்காக நீண்ட காலமாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் குடும்பத்திலேயே இருந்து வந்தார்கள். வீட்டு வேலைகளுக்கு பெரும் கூட்டமே காத்து கிடந்தது அதனால் பாத்திமா(ரலி) அவர்களுக்கு கஷ்டம் தெரியவில்லை. எப்போதும் திருமனம் ஆனதோ, வீட்டில் வேலை செய்ய ஆட்கள் இல்லாமல் பாத்திமா(ரலி) அவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டார்கள். வீட்டில் வருமை வாட்டியது. பசியின் கொடும்பிடியில் சிக்கிதவித்தார்கள். திருமனத்துக்கு முன்பு இருந்த நிலையை அடிக்கடி பாத்திமா(ரலி) அவர்கள் நினைத்துப்பார்ப்பார்கள்.எந்த அளவு வருமை என்றால், ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் வெளியே சென்று பலருக்கும் தண்ணீர் அள்ளிக் கொடுத்து, கஷ்டப்பட்டு தூக்கி சுமந்து சம்பாதித்து வருவார்கள். பாத்திமா(ரலி) அவர்கள் அக்கம் பக்கத்து வீட்டுகளின் தானியங்களை தங்கள் வீட்டு திருகையில் கூலிக்காக அரைத்துக் கொடுத்து உழைத்து வந்தார்கள்.
ஒரு நாள் கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது......தங்களின் கஷ்டங்களை பரிமாறிக் கொண்டார்கள்.
எனது கைகளைப் பாருங்கள் கொப்புளங்கள். கொப்புளங்கள் ஏற்படும் வரை நான் தானியங்கள் அரைத்து உழைத்துள்ளேன் என்றார்கள் பாத்திமா(ரலி) அவர்கள். அன்பு மனனவியின் நிலைக்கண்ட ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் தங்களின் அன்பு மனைவியைப் பார்த்து என் நெஞ்சைப் பாருங்கள்......ஒரு நாள் முழுவதும் என் நெஞ்சில் வல் ஏற்படும் அளவுக்கு நான் தண்ணீர் இழுத்துள்ளேன் என்றார்கள்.
ஒரு நாள் கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது......தங்களின் கஷ்டங்களை பரிமாறிக் கொண்டார்கள்.
எனது கைகளைப் பாருங்கள் கொப்புளங்கள். கொப்புளங்கள் ஏற்படும் வரை நான் தானியங்கள் அரைத்து உழைத்துள்ளேன் என்றார்கள் பாத்திமா(ரலி) அவர்கள். அன்பு மனனவியின் நிலைக்கண்ட ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் தங்களின் அன்பு மனைவியைப் பார்த்து என் நெஞ்சைப் பாருங்கள்......ஒரு நாள் முழுவதும் என் நெஞ்சில் வல் ஏற்படும் அளவுக்கு நான் தண்ணீர் இழுத்துள்ளேன் என்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக