இஸ்லாமிய பெண்மணிகளே! இன்றே சபதமெடுங்கள்"
ஒரு சமயம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். அப்போழுது அலி(ரலி) பாத்திமா(ரலி) இருவரையும் நோக்கி நீங்கள் இருவரும் தஹஜ்ஜத் தொழுதீர்களா? என்று கேட்டார்கள்.
உடனே அலி(ரலி) அவர்கள் முந்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதரே! உங்கள் உயிர்கள் அல்லாஹ்விடம் இருக்கின்றன. அவன் விரும்பும் போது படைத்து விடுகிறான் என்று சொன்னார்கள்.
உயிர்களை அவற்றின் மரணத்தின் போது தம் உறக்கத்தில் மரணிக்காமலுள்ளதையும் அல்லாஹ்வே கைப்பற்றுகிறான். பிறகு எவற்றின் மீது மரணத்தை விதியாக்குகின்ரானோ அவற்றைக் தன்னிடமே தடுத்துக் கொள்கிறான். மற்றவற்றை குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்கு) அனுப்பி விடிகிறான் நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற கூட்டத்தினருக்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர் ஆன் அத்:39, வச:42)
மேற்கண்ட திருக்குர் ஆன் வசன கருத்தையொட்டி அலி(ரலி) அவர்கள் சொன்னார்கள்.
ஹஜ்ரத் அலி(ரலி) இவ்வாறு விளக்கம் சொல்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் விரும்பவில்லை. உடனே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் த்ங்களின் தொடையில் கையால் அடித்துக் கொண்டு முகத்தை சற்று திருப்பிக் கொண்டு.
"வகான இன்ஸானு அக்ஸர ஷய்கின் ஜதலா மனிதன் பெரும் பாலும் பேச்சில் சர்ச்சை செய்யக் கூடியவனாக இருக்கின்றான். என்று சொன்னார்கள் தம்பதிகள் இருவரும் மெளனமானார்கள். தாங்கள் இருவரும் தஹஜ்ஜத் தொழ உறுதி எடுத்துக் கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக