25 பிப்ரவரி, 2010

"உங்களுக்கு என் சலாம் உண்டாவதாக!"
அகிலத்துப் பெண்களின் தலைவியும் சுவனத்து பேரரசியும் அன்பு மனைவியுமான பாத்திமா(ரலி) அவர்களின் பிரிவு அன்பு கணவர் அலி(ரலி) அவர்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்று வெயிலில் வாடிய புழுபோல் துடுத்துக் கொண்டிருந்தார்கள். ஈடு செய்ய முடியாத இழப்பு அவர்க்ளின் உள்ளத்தின் கடுமையான ரணத்தை உண்டாக்கியது ஆருயிர் மனைவியை நினைத்து நினைத்து துயரத்தில் மூழ்கி சோகமே உருவாய் இருந்தார்கள்.
அன்பு மனைவியின் பிரிவை நினைத்து பல கவிதைகளை பாடி பாடி மகிழ்ந்தார்கள்.
ஒரு நாள் அவர்களின் கால்கள் அன்பு மனைவி பாத்திமா(ரலி) அவர்களின் கபர்ஸ்தானுக்கு இழுத்துச் சென்றன. புகைக்குழியை கண்டதும் புன்னாகிய புனித உள்ளம் பாத்திம(ரலி) அவர்களுடன் கழித்த நாட்களை நினைத்து நினைத்து கண்களில் தாரை தாரையாக கண்ணீரை வடித்தார்கள்.
தங்களின் அவலக் குரலில் கவிதையொன்றினை பாடினார்கள் இதே அந்த கவிதைத்துளிகள்......"நான் முஸ்லிம்களின் அடக்கஸ்தலத்தில் "ஸலாம்" சொன்னவனாக நடந்துச் செல்கிறேன்.
"முதலில் மன்னர் நபியை இழ்ந்தேன் நான் அவர்களின் ஈரக்குலை துண்டை இனி எங்கு கான்பேன் என் அன்பு மனைவியின் பரிசுத்த கப்ரிலிருந்து என் துயர் போக்கும் ஆறுதல் வார்த்தை..
ஒன்றாவது வராமலிருக்கிறதே" என் அருமை மனைவியின் கப்ரே! உன்னை அழைப்பவனுக்கு நீ விடை அளிக்காதிருக்கிறாய்! அவ்வாறுசெய்ய உனக்கு என்ன துன்பம் பிடித்திருக்கிறது. பாத்திமாவே! என்னை விட்டு பிரிந்து விட்டதால் என் மீதிருந்த நட்பில் உங்களுக்கு விரக்தி ஏற்பட்டு விட்டதோ அந்தோ என் வெந்துப்போன உள்ளத்தின் புண்ணைஆற்றுவதற்கு யார் இங்கிருக்கிறார்கள்?
இப்படி உள்ளம் உருகி உருகி கவிதைகளைப் பாடி..பாடி கண்ணீர் துளிகளை கொட்டி கொட்டி கொண்டிருந்தார்கள்.
திடீரென பாத்திமா(ரலி) அவர்களின் இனிப்பாருங்கள்.....உங்கள் ஆருயிர் தோழி பாத்திமா சொல்கிறாள் நான் செய்த அமல்களுக்கு நானே பொறுப்பாளி என்ற நிலையில் எனக்கு என்ன நடக்கப் போகிறாதோ என்று அறியாது கல்லுக்கும் மண்ணுக்கும்மிடையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கையில் என்னால் உங்களுக்கு என்ன பதில் தான் சொல்ல முடியும்!.
தோழ்ரே என் அழகை எல்லாம் மண் திண்று விட்டது அதனால் தான் நான் உங்களை மறந்து விட்டேன்..."கப்ரு" என்னும் இப் புதை குழியானது என் உற்றார். உறவினர்களுடன் உரையாடுவதை விட்டும் என்னை தடை செய்து விட்டது.
உங்களுக்கு என் சலாம் உண்டாவதாக! இன்று முதல் நம்மிருவருக்குமிடையில் இருந்து வந்த நட்புறவு அறுந்து போய்விட்டது....போய் வாருங்கள்.

படிப்பினை:
மேற்கண்ட சோக நிகழ்ச்சி நமக்கொல்லாம் பெரும் உச்சக்கட்ட படிப்பினையாக அமைந்திருக்கிறது.. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்ப் போலவே பாத்திமா(ரலி) அவர்களின் இழப்பும் ஈடு செய்ய முடியாதவைதான் இறந்தவர்களை நினைத்து நினைத்து அழுது அழுது என்ன பயன்? இனி அவர்களுக்காக துஆ செய்தும் அவர்கள் வாழ்ந்த பரிசுத்தமான வாழ்க்கையையும் வாழ்ந்து காட்ட நாம்முன் வர வேண்டும் உற்றார் உறவினர்களை மனைவி மக்களை கணவன் சான்றோர்களை பிரிந்து விடும் மரணத்தை அனுதினமும் நினைத்து வாழ்வேண்டும்.
இஸ்லாம் மரணத்தை கண்டு பயப்பட சொல்லவில்லை மெளத்தை நினையுங்காள் என்று தான் நமக்கு சொல்லித் தருகிறது.
நல்ல அமல்களை மட்டுமே பார்க்க கூடிய கப்ருக்கு நாம் என்ன முன்னேற்பாடுகள் செய்து வைத்துள்ளோம் எந்தருமை இஸ்லாமிய தாய்மார்களே! சகோதரிகளே! சற்று சிந்தித்தும் பாருங்கள் அழியும் அற்ப உலகில் கிடைக்கும் கொஞ்ட சொத்து சுகங்களுக்காக சுவனத்துப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்கள் கூட சுவனத்து சுகங்களை அனுபவிக்க வேண்டுமானால் இவ்வுலகில் பாத்திமா(ரலி) அவர்களின் பரிசுத்த வாழ்க்கையை வாழ் முன்வாருங்கள்.
பாத்திமா(ரலி) அவர்கள் இற்ந்த பின் பலகாலங்களுக்கு பிறகு அல்லாமாஷைகு அப்துல் அஜீஸ் நப்பாக (ரஹ்) "ரூஃபியா" என்னும் காட்சியில் இப்படி கண்டார்கள்.
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் அவர்களின் புனித தோழ்ர்களான சஹாபா பெருமக்களும் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார்கள் அமர்ந்து கீழ் கானும் சலவாத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள்.
"அல்லாஹும்ம ஸல்லி அலா மன்ரூஹூஹூ
மிஹ்ராபுல் அர்வாஹி வல் மலாயிக்கத்தீவல் கவ்ன்
அல்லாஹும்ம ஸல்லி அலா மன்ஹூவ இமாமுல் அன்பியாயி வல் முர்ஸலீன்
அல்லாஹும்ம ஸல்லி அலா மன்ஹுவ இமாமு அஹ்லில் ஜன்னத்தி இபாதில்லாஹில் முஃமினீன்

இந்த ஸலவாத்துக்கு "ஸலவாத்து பாத்திமா" என்ற புகழுடன் உலக மக்களிடம் சிறப்பாக உச்சரிக்கப்படுகிறன இஸ்லாமிய பென்மனிகளே! நீங்களும் தஸ்பீஹ் பாத்திமா ஸலவாத்துப் பாத்திமா போன்றவற்றை ஓதி. பாத்திமா(ரலி) அவர்களின் பரிசுத்தமான புனித வாழ்க்கையை வாழ்ந்து அல்லாஹ்ரசூலின் பொருத்தத்தை பெற்று சுவனத்தில் பாத்திமா(ரலி) அவர்களோடு ஊழி ஊழிகாலமாய் சேர்ந்து வாழுங்கள்...அல்லாஹ் எல்லாருடைய ஹாஜத்தை நிறைவேற்றுவானாக ஆமீன்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக