9 பிப்ரவரி, 2010

" நின்று தொழ முடியவில்லையே"
ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தனது அருமை மகள் பாத்திமா (ரலி) அவர்களை பார்க்கச் சென்றார்கள். அப்போது பாத்திமா(ரலி) அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.மகளின் அழுகையைப் பார்த்து வேதனைப் பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மகளின் நிலையைப் பார்த்தார்கள் வயிறு ஓட்டி இருந்தது. பல நாட்களாக பசியின் கோரப்பிடியில் சிக்கி தரித்துக் கொண்டிருக்கும் நிலை புரிந்தது.
அருமை மகளே! பசியில் அழுகிறாயா? என்று கேட்டார்கள். அருமை தந்தையே பசியின் கொடுமையால் நான் அழவில்லை. நீங்கள் தான் சொன்னீர்கள் நின்று தொழுதால் நூறு நன்மைகள். உட்க்கார்ந்து தொழுதால் 40 நன்மைகள் என்றீர்கள். நான் இன்று நின்று தொழமுடியவில்லையே, அதனால் 100 நன்மைகளை இழந்தவளாகி விட்டேனே என்றார்கள். இதைக் கேட்ட கருனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தனது மகளின் மறுமையின் சிந்தனையை நினைத்து அழுதார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக