18 பிப்ரவரி, 2010

"பாத்திமா(ரலி)க்கு உதவிய பிலால்(ரலி)"
ஒரு சமயம் பிலால்(ரலி) அவர்கள் ஒரு வேலையாக வெளியே சென்றிருந்தார்கள். திரும்பி வரும் போது பாத்திமா(ரலி) அவர்களின் வீட்டின் வழியாக வந்தார்கள் அப்போது பாத்திமா(ரலி) அவர்கள் திருகையில் கைநோக மாவு அடைத்துக் கொண்டிருந்தார்கள் அவர்களின் அருமை குழ்ந்தை ஹஸன்(ரலி) அவ்ர்களழுது கொண்டிருந்தார்கள்.ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் வீட்டில் இல்லை. குழந்தையின் அழுகை சத்த்ம் கேட்டு துடித்துப் போன பிலால்(ரலி) அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களிடம் சென்று நீங்கள் வேலையில் ஈடுபட்டுள்ளீர்கள் குழந்தை அழுகிரது. நீங்கள் விரும்பினால் அனுமதி கொடுத்தால் குழ்ந்தையை நான் தூக்கி வைத்து கொள்கிறேன். என்று கேட்டார்கள். அதற்கு பாத்திமா(ரலி) அவர்கள் குழந்தை உங்களிடம் இருக்க பிரியப்படும் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். பாத்திமா(ரலி) அவர்கள் மாவு அரைத்து முடியும் வரை குழந்தையை கவனித்துக் கொண்டார்கள். அந்த நேரத்தில் பாங்கு சொல்லப்பட்டது தொழுகையின் வக்த்தும் நெருங்கி விட்டது. ஆனால் பிலால்(ரலி) அவர்கள் குழ்ந்தையை கவனித்துக் கொள்வதிலேயே கவனமாக இருந்து. பின்பு தாமதமாக தொழுகையில் சேர்ந்து கொண்டார்கள்.
பிலால்(ரலி)தொழுகைக்கு தாமதமாக வந்த காரணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வினவிய போது. மேற்கண்ட விஷயத்தைச் சொன்னார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக