"உஹதில் பாத்திமா ரலியின் அழுகை"
உஹதுப் போர் முஸ்லிம்களுக்கு பெரும் படிப்பிரனைப் போராக அமைந்தது. 70 சஹாபாக்கள் ஷஹீதானார்கள். கண்மணி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கடுமையான கஷ்டத்தை கொடுத்த போர் உஹது போர்தான்.
அவர்களின் முபாரக்கான பல் ஷஹிதானது, முகத்தில் காயங்கள் ஏற்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்காள் இறந்து விட்டார்கள் என்ற மாபெரும் வதந்தி காட்டுத் தீ போல மதினா முழுவதும் பரவியது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் குடும்பத்தினரில் மிக முக்கியமானவர்கள் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவ்ர்களின் பெரிய தகப்பனார் ஹஜ்ரத் ஹம்ஸா(ரலி) அவர்களின் மரணம். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குடுபத்தினர்களை பெரும் சிரம்த்துள்ளாக்கியது. இச்செய்திகள் மதினாவுக்கு எட்டியதும்,மதினத்துப் பென்கள் உஹதை நோக்கி ஓடிவந்தார்கள் பென்கள் போர்க்களத்தை நோக்கி ஓடிவரும் அளவுக்கு வதந்திகள் பெரும் வலிமையாக இருந்தது. ஸபிய்யா(ரலி) ஆயிஷா(ரலி) உம்மு அய்மன்(ரலி) இவர்கள் தான் முதலில் உஹதுக்கு வந்து சேர்ந்தார்கள். இவர்களுக்கு பிறகு பாத்திமா(ரலி) மற்றும் பல பென்கள் வந்து சேர்ந்தார்கள். ஸபிய்யா(ரலி) அவர்கள் தனது சகோதரி உமையாவின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் உடலருகில் நின்று துஆ செய்தார்கள். அவர்கள் கூட பாத்திமா(ரலி) அவர்களும் சேர்ந்து கொண்டார்கள். இருவரும் தங்களின் குடும்பத்தில் இறந்தோருக்காக கண்ணீர் வீட்டு அழுது துஆ செய்தனர். இவர்களின் அழுகையை கண்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு மிக ஆறுதலாக இருந்தது. இதன் பின் தனது அருமை தந்தைக்கு பாத்திமா(ரலி) அவர்கள் காயங்களுக்கு மருந்து போட்டு மருந்துவம் செய்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக