"பாத்திமா(ரலி) வாழ்வில் ஓர் புயல்"
ஒரு சமயம் மதீனத்துப் பெண்களிடையே பெரும் பரப்பரப்பாக ஒரு செய்தி காட்டுத் தீப்பொல பரவியது எங்கு பார்த்தாலும் இதே செய்தி. இச் செய்தி கண்மணி பாத்திமா(றலி) அவர்களுக்குதெரிந்த போது உள்ளம் ஒடிந்தார்கள். அனலில் இட்ட புழுப்போல துடித்தார்கள் என்ன என்ன விஷயம் தெரியுமா?
"ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள். அபூஜஹ்லுடைய மகளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்யப் போகிறார்கள் என்பது தான் அந்த அபாயச் செய்தி."
அன்று ஹஜ்ரத் அலி(ரலி)வெளியே சென்றிருந்தார்கள். இச்செய்தி கேட்டு யாரிடம் சொல்லி ஆறுதல் அடைவது? என்று தெரியாமல் துடித்துக் கொண்டிருந்தார்கள். இச்செய்தி அருமை தந்தைக்கு தெரிந்தால் அவர்கள் இதயம் தாங்குமா? என்று மனப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள் கண்மனி பாத்திமா(ரலி) அவர்கள்.
கடைசியில் தந்தையிடமே சென்று முறையிட முடிவு செய்து தந்தையை பார்க்க புறப்பட்டார்கள். மகளாரின் சோகமும் கண்டு பதறிப் போன நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் என்ன நடந்தது? சொல்லுங்கள் என வேண்டினார்கள். விஷயத்தை அழுது கொண்டே சொன்ன போது துடிதுடித்து விட்டார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், உடனே மகளை அழைத்துக் கொண்டு மருகனைப் பார்க்கப் புறப்பட்டார்கள். எங்கும் கானவில்லை பள்ளியில் இருப்பதாக ஒருவர் கூறினார். உடனே பள்ளியை நோக்கி நடந்தார்கள். அங்கு அலி(ரலி) இருந்தார்கள் அவர்களை அழைத்து கூறிய முதல் வார்த்தை இது.
பாத்திமா(ரலி) அவர்கள் என்னுடைய உடலின் ஒரு பகுதியாகும் அவருக்கு வேதனை தருபவர் தனக்கு வேதனை தந்தவர் போன்றவராவார் என்று சொன்னார்கள்.
பாவம் அலி(ரலி) அவர்கள்.திடீர் என் மாமாவும் மனைவியும் வந்து நின்று கொண்டு இப்படிப்பட்ட வார்த்தை கனைகளை அள்ளி வீசுகின்றார்களே! என்று கலங்கி போய் விட்டார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதரவர்களே! தாங்கள் கோபத்திற்கு என்ன காரனம் என்று எனக்குதெரியவில்லையே! உங்கள் மகள் பற்றி கூறியது எனக்கு நன்கு தெரியும் அல்லாஹ்வின் அருமம தூதரே! என்று சொன்னார்கள்.
அப்படியானால் நீர் அபூஜஹலின் மகளை திருமணம் செய்ய எப்படி துணிந்தீர்? அவளை நீர் திருமணம் செய்ய நாடினால். திருமனம் செய்து கொள்ளும் என் மகள் பாத்துமாவுக்கு விடுதலை அளித்துவிடு ஏனென்றால். அல்லாஹ்வின் தூதரின் மகளும். அல்லாஹ்வின் எதிரியின் மகளும் ஒரே வீட்டில் இருக்க முடியாது என்றார்கள். இதைக் கேட்ட அலி(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இந்த எண்ணம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை இது பொய்யான வதந்தியாகும் என்று சொன்னார்கள். இதைக் கேட்ட பின்புதான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கும் . கண்மனி பாத்திமா (ரலி) அவர்களுக்கும் மனம் ஆறுதல் அடைந்தது.
வீண் வதந்தியை நம்பி விட்டோமே என்று பாத்திமா(ரலி) அவர்கள் தலை தாழ்த்தி நின்றார்கள். உடனே தனது அருமம மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று தனது அன்பு எவ்வளவு என்பதை எடுத்துச் சொன்னார்கள்.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹஜ்ரத் பிலாலை அழைத்து இப்படிப் பட்ட பொய் செய்திகளை பரப்பி பிறர் மனதை நோவினை செய்பவர்கள் யார்? அவர்களை அழைத்து வாருங்கல் என்று ஏவினார்கள். அங்கு மக்கள் திரளாக கூடி விட்டார்கள். அந்த கூட்டத்தைப் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறரின் மகிழ்ச்சியை அழித்து நிம்மதியை பிடுங்கும் இழிச் செயலை இட்டு கட்டான பொய் வதந்திகளை செய்யாதீர்கள் என்று உபதேசித்தார்கள்.
"ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள். அபூஜஹ்லுடைய மகளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்யப் போகிறார்கள் என்பது தான் அந்த அபாயச் செய்தி."
அன்று ஹஜ்ரத் அலி(ரலி)வெளியே சென்றிருந்தார்கள். இச்செய்தி கேட்டு யாரிடம் சொல்லி ஆறுதல் அடைவது? என்று தெரியாமல் துடித்துக் கொண்டிருந்தார்கள். இச்செய்தி அருமை தந்தைக்கு தெரிந்தால் அவர்கள் இதயம் தாங்குமா? என்று மனப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள் கண்மனி பாத்திமா(ரலி) அவர்கள்.
கடைசியில் தந்தையிடமே சென்று முறையிட முடிவு செய்து தந்தையை பார்க்க புறப்பட்டார்கள். மகளாரின் சோகமும் கண்டு பதறிப் போன நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் என்ன நடந்தது? சொல்லுங்கள் என வேண்டினார்கள். விஷயத்தை அழுது கொண்டே சொன்ன போது துடிதுடித்து விட்டார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், உடனே மகளை அழைத்துக் கொண்டு மருகனைப் பார்க்கப் புறப்பட்டார்கள். எங்கும் கானவில்லை பள்ளியில் இருப்பதாக ஒருவர் கூறினார். உடனே பள்ளியை நோக்கி நடந்தார்கள். அங்கு அலி(ரலி) இருந்தார்கள் அவர்களை அழைத்து கூறிய முதல் வார்த்தை இது.
பாத்திமா(ரலி) அவர்கள் என்னுடைய உடலின் ஒரு பகுதியாகும் அவருக்கு வேதனை தருபவர் தனக்கு வேதனை தந்தவர் போன்றவராவார் என்று சொன்னார்கள்.
பாவம் அலி(ரலி) அவர்கள்.திடீர் என் மாமாவும் மனைவியும் வந்து நின்று கொண்டு இப்படிப்பட்ட வார்த்தை கனைகளை அள்ளி வீசுகின்றார்களே! என்று கலங்கி போய் விட்டார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதரவர்களே! தாங்கள் கோபத்திற்கு என்ன காரனம் என்று எனக்குதெரியவில்லையே! உங்கள் மகள் பற்றி கூறியது எனக்கு நன்கு தெரியும் அல்லாஹ்வின் அருமம தூதரே! என்று சொன்னார்கள்.
அப்படியானால் நீர் அபூஜஹலின் மகளை திருமணம் செய்ய எப்படி துணிந்தீர்? அவளை நீர் திருமணம் செய்ய நாடினால். திருமனம் செய்து கொள்ளும் என் மகள் பாத்துமாவுக்கு விடுதலை அளித்துவிடு ஏனென்றால். அல்லாஹ்வின் தூதரின் மகளும். அல்லாஹ்வின் எதிரியின் மகளும் ஒரே வீட்டில் இருக்க முடியாது என்றார்கள். இதைக் கேட்ட அலி(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இந்த எண்ணம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை இது பொய்யான வதந்தியாகும் என்று சொன்னார்கள். இதைக் கேட்ட பின்புதான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கும் . கண்மனி பாத்திமா (ரலி) அவர்களுக்கும் மனம் ஆறுதல் அடைந்தது.
வீண் வதந்தியை நம்பி விட்டோமே என்று பாத்திமா(ரலி) அவர்கள் தலை தாழ்த்தி நின்றார்கள். உடனே தனது அருமம மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று தனது அன்பு எவ்வளவு என்பதை எடுத்துச் சொன்னார்கள்.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹஜ்ரத் பிலாலை அழைத்து இப்படிப் பட்ட பொய் செய்திகளை பரப்பி பிறர் மனதை நோவினை செய்பவர்கள் யார்? அவர்களை அழைத்து வாருங்கல் என்று ஏவினார்கள். அங்கு மக்கள் திரளாக கூடி விட்டார்கள். அந்த கூட்டத்தைப் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறரின் மகிழ்ச்சியை அழித்து நிம்மதியை பிடுங்கும் இழிச் செயலை இட்டு கட்டான பொய் வதந்திகளை செய்யாதீர்கள் என்று உபதேசித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக