"உங்கள் மகளிடமே கேளுங்கள்."
ஒரு நாள் பாத்திமா(ரலி) அவர்களுக்கும், சின்னம்மா ஆயிஷா(ரலி) அவர்களுக்கும் இடையே ஏதோ இரு காரனத்திற்காக பிரச்சனை ஏற்பட்டது அபோது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வெளியே சென்றுயிருந்தனர். நபி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வீடு வந்ததும். உடனே ஆயிஷா(ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் இந்த பிரச்சனனயைப் பற்றி தான் முறையிட்டார்கள். அமைதியான நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். ஆயிஷா(ரலி) அவர்களை நோக்கி உங்கள்யிருவருக்குமிடையே என்ன நிகழ்ந்தது? என்று விசாரித்தார்கள். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் இந்த பிரச்சினையை உங்கள் மகள் பாத்திமா(ரலி) அவர்களிடமே விசாரித்துக் கொள்ளுங்கள். உங்கள் மகள் ஒரு போதும் பொய் கூற மாட்டார் என்ன நிகழ்ந்ததோ அதனை அப்படியே சொல்லி விடுவார் என்றார்கள் பின்பு பாத்திமா(ரலி) அவர்களிடம் பேசி. இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக