24 பிப்ரவரி, 2010

"விளக்கம் கேட்ட விண்ணுலக நாயகி"
சுவனத்துப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்கள் உலகில் அவர்கள் தந்தையை தவிர வேறு யாரின் மீது அதிகம் அன்பு செலுத்தவில்லை. இரவும் பகலும் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் வாயிலிருந்து எது சொன்னாலும் அதை அப்படியே பின்பற்றுவார்கள். ஒரு நாள் கன்மணி நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் அன்பு மகளார் வீட்டுற்கு வந்தார்கள். அப்போது பாத்திமா(ரலி) அவர்கள் கறி சமைத்து இருந்தார்கள். மகளார் வீட்டில் சாப்பிட்டார்கள். அப்போது பாங்கு சொல்லப்பட்டது. உடனே நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு உலூசெய்யாமல் உடனே தொழுகைக்கு தயாரானார்கள். இதை பாத்து கொண்டிருந்த பாத்திமா(ரலி) அவர்கள். எனதருமை தந்தையே! நீங்கள் ஒரு நாள் என்னிடம் நெருப்பில் சமைக்கப்பட்ட பொருளைச் சாப்பிடால் உளு முறிந்து விடும் என்று சொன்னீர்களே! இப்போது சமைத்ட உணவைத்தானே சாப்பிட்டீர்கள். உளு முறிந்து இருக்குமே, உளு இல்லாமல் தொழ செல்ல ஆயத்தமாகிறீர்களே! உளு செய்து செல்லுங்கள் என்று சொன்னார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் எனதருமை மகளே! இனி சமைத்த உணவுகளை சாப்பிட்டால் ஒழு முறியாது மீண்டும் ஒழு செய்ய அவசியமில்லை எல்லா உணவுகளும் நெருப்பில் தான் சமைக்கப்படுகின்றன என்ரு அன்பு மகளுக்கு விளக்கம் சொன்னார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக