13 ஆகஸ்ட், 2010

இறுதி நாள்..

அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவனுக்கே புகழ்னைத்தும். கருனையும் ஈடேற்றமும் நபி மார்கள் ரசூல் மார்கள். அனைவரினும் மீதும் அவர்களின் குடும்கத்தார்கள் தோழ்ர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
நிச்சயமாக மறுமை நாளை நம்புவது ஈமானின் அடிப்படைகளிலும் அதன் ஆறு கடமைகளிலும் ஒன்றாகும். எனவே மறுமை தொடர்பாக இறைவேதத்திலும் ஆதாரப்பூர்வமாக நபிவழிகளிலும் வந்த வற்றை நம்பாதவரை ஒருவன் இறைவிசுவாசியாக ஆக முடியாது.. நிச்சயமாக மறுமை நாளை அறிந்து அதை அதிகமாக நினைவு கூருவது மனித வாழ்க்கையைச் சீர்ப்படுத்துதல் இறையச்சத்தை ஏற்படுத்துதல் இறைமார்க்கத்தில் உறுதியாக இருந்தல் போன்ற பல நன்மைகளுக்கு வழிகோலும் எனவே மறுமை நாளின் அமளிகள். கடுமைகள் குறித்து பாரமுகமாக இருப்பதுதான் பெருமளவில் மனிதனின் உள்ளத்தைக் கல்லாக்கி அவனைப் பாவங்கள் புரீந்திட தூண்டக்கூடியதாக உள்ளது.
ம்றுமை நாளை குறித்து அல்லாஹ் கூறுகிறான். அந்நாள் குழ்ந்தைகளை நரைக்கச் செய்துவிடும்(73:17) மனிதர்களே நீங்கள் உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக இறுதி நாளின் அதிர்ச்சி மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும். அந்தாளில் பாலூட்டும் குழ்ந்தையை மறந்து ஒவ்வொரு தாயும் தான் பாலூட்டும் குழ்ந்தையை மறந்து விடுவதையும் ஒவ்வொரு கர்ப்பிணியும் தான் சுமந்திருக்கும்
குழ்ந்தையைப் பெற்றெடுத்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். மேலும் மனிதர்களை மதிமங்கியவர்களாகக் காண்பீர்கள். அவர்கள்(மதுவில்)மயங்கியவர்கள் அல்லர்.எனினும் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்(22:1,2)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக