உலகில் நடந்த அற்புதங்கள்.
கேள்வி: நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்த வருஷம் குறைஷி மக்களுக்கு மாபெரும் வெற்றிகிடைத்த வருஷமாக இருந்தது. மேலும் நல்ல செழிப்பாகவும் இருந்தது. இதற்கு முன்னர் குறைஷியர் பஞ்சத்தால் கஷ்ட்டப்பட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் பிறந்த வருஷத்தில் நல்ல மழை பெய்ததால் மரங்கள் தளிர்ந்து பூத்துக் கனிகளை அதிகமாகத் தந்தன.
ஈரான் சக்கரவர்த்தியான கிஸ்ராவின் மாளிகை மாபெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி அதிலுள்ள பதினான்கு ஸ்தூபிகளும் விழுந்துவிட்டன. இதற்கு பின்பு நடந்த நிகழ்ச்சிகளை கவனிக்கும் போது இன்னும் பதினான்கு பேர்கள் தான் அந்த நாட்டு அரியனையில் அமர்ந்து அரசாட்சி செலுத்துவார்கள். அதற்குப் பின்பு அந்த அரசாங்கமே இல்லாமல் போய்விடும் என்பதற்கு முன்னறிவிப்பாக இருந்தது என்று சொல்லப்படுகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்ததிலிருந்து நான்கு ஆண்டுகளில் பத்துப் பேர் ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி பட்டத்துகு வந்தார்கள். இதற்குப்புறம் ஹலரத் உதுமான்(ரலி) அவர்கள் கலீபாவாக பதிவி வகிக்கும் காலம் வரையில் நால்வர் பட்டத்துக்கு வந்தார்கள் பின்பு அந்தஹ் நாடு முஸ்லிம் அரசாங்கத்தின் இரு பாகமாக மாறி மாமன்னன் கிஸ்ராவின் அரசாங்கம் நிரந்தரமாக மறைந்துவிட்டது.
பலஸ்தீனத்திலுள்ள தப்ரியா நகரிலுள்ள ஏரியில் தண்ணீர் வற்றி வறண்டு போய்விட்டது. இப்பிரதேச மக்களுக்கு பெரும் போர் ஏற்பட்டு கஷ்டம் வரும் என்பதற்கு இது முன்னறிவிப்பாக இருந்தது. அதேபோல் பின்னர் ஹலரத் உமர் பாரூக் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் போர் ஏற்பட்டு முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.
பாரசீகர் பெருமபாலும் நெருப்பை வணங்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.இவர்கள் வணங்கி வந்த பெரும் நெருப்புக்குண்டம் அனைந்து விட்டது.இது ஆயிரம் ஆண்டுகளாக அவர்களால் பாதுகாக்கப்பட்ட நெருப்புக் குண்டமாகும். இந்நெருப்பு அனைந்ததானது எதிர்காலத்தில் இவர்களின் மத்திற்கு எந்தவித செல்வாக்கும் இல்லாமல் போகும் என்பதற்கு முன் அடையாளமாக இருந்தது.
வானில் எரிகொள்ளிகள் அதிமகாயின இதற்கு முன்னரும் இருந்தன ஆனால் அவ்வள்வு அதிகமாக இல்லை ஏனென்றால் ஷைத்தான்கள் வானத்திற்குச் செல்வது தடுக்கப் பட்டிருப்பதாகவும் ஷைத்தான்கள் அங்கு செல்லும் போதெல்லாம் மலக்குகள் அவர்களை எரிகொள்ளிகளால் துரத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் இவ்வுலகில் நடக்கப்போகும் செய்திகளை திருட்டுத் தனமாக கேட்டு வந்து குறிகொல்பவர்கள் கோடாங்கி காரர்களிடமும் அச்செய்திகளை கூட்டிக் குறைத்துச் சொல்லி பாமர மக்களை வழி தவறச் செய்து கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக