மரணம்
மரணம் இவ்வுலகில் உயிருள்ளோரின் இறுதிக் கட்டமாகும். அல்லாஹ் கூறுகிரான். ஒவ்வொரு ஆன்மாவும் மரனத்தை சுகித்தே தீர வேண்டும்.(3:185) பூமிமீதுள்ள எல்லோரும் அழிந்துபோகக்கூடியவர்களே.(55:26) நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான்: நபியே நிச்சயமாக நீரும் மரணிக்கக் கூடியவரே இன்னும் அவர்களும் மரணிக்கக்கூடியவர்களே(39:20)
இவ்வுலகம் எந்த மனிதருக்கும் நிரந்தரமானதல்ல. அல்லாஹ் கூருகிறான் நபியே உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தர வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை.(21:34)
1. மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக விஷயமாகும். இவ்வாறிருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை மறந்திருக்கின்றனர், ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் மரணத்தை சந்திக்கத் தயாராக இருப்பதும் அவசியமாகும். இவ்வாறே அவன் தன் மறுமை வாழ்விற்காக இவ்வுலக வாழ்வில் அதற்குறிய நேரம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை செய்து தாயாராகிக் கொள்வது அவசியமாகும்..
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். 5 நிலைமைகள் ஏற்படுவதற்கு முன் 5 நிலைமைகளைப் பேணிக் கொள். மரணத்திற்கு முன் வாழ்வையும் நோய் வரும் முன் ஆரோக்கியத்தையும் வேலைக்கு முன் ஓய்வையும் வயோதிகத்திற்கு முன் வாலிபத்தையும் ஏழ்மைக்கு முன் செல்வத்தையும் பேணிக் கொள்.
உலகிலிருந்து எந்தப் பொருளும் இறந்து விட்ட வனுடன் அவனுடைய மண்ணறைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை நிச்சயமாக அவனுடன் தங்கியிருப்பது அவனுடைய செயல்கள் மட்டுமே. எனவே நற்செயல்களைச் சித்தப்படுத்திக் கொள்வதில் நீ அக்கறை கொள். அதன் மூலம் தான் நீடித்த நற்பாக்கியத்தை நீ அடைய முடியும். அல்லாஹ்வின் உதவியால் வேதனையிலிருந்து ஈடேற்றமும் பெற முடியும்.
2. தெரிந்துக் கொள். மனித வாழ்க்கை தவனை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாத அளவு தெளிவில்லாத விஷயமாகும். எனவே யார் எப்போது எந்த இடத்தில் மரண்மடைவார் என்பதை யாரும் அறிய முடியாது. திண்ணமாக இது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த மறைவான நானங்களுள் ஒன்றாகும்.
3. மரணம் வந்து விட்டால் அதைத் தடுக்கவோ பிற்படுத்தவோ அதை விட்டு வெருண்டோடவோ முடையாது . அல்லாஹ் கூறுகிறான். ஒவ்வொரு சமுதாயத்தவர்களுக்கும் ஒரு தவணையுள்ளது. அவர்களின் தவணை வந்து விட்டால் அவர்கள் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.(7:34)
4. ஒரு முஃமீனுக்கு மரணம் வந்து விட்டால் நறுமணம் வீசுகின்ற அழ்கிய தோற்றத்துடன் மலக்குல் மெள்த் உயிரைக் கைப்பற்றும் வானவர் அவனிடம் வருகிறார். அவருடன் சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறும் அருளுக்குரிய மலக்குகளும் வருகிறார்கள்.
இவ்வுலகம் எந்த மனிதருக்கும் நிரந்தரமானதல்ல. அல்லாஹ் கூருகிறான் நபியே உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தர வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை.(21:34)
1. மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக விஷயமாகும். இவ்வாறிருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை மறந்திருக்கின்றனர், ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் மரணத்தை சந்திக்கத் தயாராக இருப்பதும் அவசியமாகும். இவ்வாறே அவன் தன் மறுமை வாழ்விற்காக இவ்வுலக வாழ்வில் அதற்குறிய நேரம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை செய்து தாயாராகிக் கொள்வது அவசியமாகும்..
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். 5 நிலைமைகள் ஏற்படுவதற்கு முன் 5 நிலைமைகளைப் பேணிக் கொள். மரணத்திற்கு முன் வாழ்வையும் நோய் வரும் முன் ஆரோக்கியத்தையும் வேலைக்கு முன் ஓய்வையும் வயோதிகத்திற்கு முன் வாலிபத்தையும் ஏழ்மைக்கு முன் செல்வத்தையும் பேணிக் கொள்.
உலகிலிருந்து எந்தப் பொருளும் இறந்து விட்ட வனுடன் அவனுடைய மண்ணறைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை நிச்சயமாக அவனுடன் தங்கியிருப்பது அவனுடைய செயல்கள் மட்டுமே. எனவே நற்செயல்களைச் சித்தப்படுத்திக் கொள்வதில் நீ அக்கறை கொள். அதன் மூலம் தான் நீடித்த நற்பாக்கியத்தை நீ அடைய முடியும். அல்லாஹ்வின் உதவியால் வேதனையிலிருந்து ஈடேற்றமும் பெற முடியும்.
2. தெரிந்துக் கொள். மனித வாழ்க்கை தவனை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாத அளவு தெளிவில்லாத விஷயமாகும். எனவே யார் எப்போது எந்த இடத்தில் மரண்மடைவார் என்பதை யாரும் அறிய முடியாது. திண்ணமாக இது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த மறைவான நானங்களுள் ஒன்றாகும்.
3. மரணம் வந்து விட்டால் அதைத் தடுக்கவோ பிற்படுத்தவோ அதை விட்டு வெருண்டோடவோ முடையாது . அல்லாஹ் கூறுகிறான். ஒவ்வொரு சமுதாயத்தவர்களுக்கும் ஒரு தவணையுள்ளது. அவர்களின் தவணை வந்து விட்டால் அவர்கள் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.(7:34)
4. ஒரு முஃமீனுக்கு மரணம் வந்து விட்டால் நறுமணம் வீசுகின்ற அழ்கிய தோற்றத்துடன் மலக்குல் மெள்த் உயிரைக் கைப்பற்றும் வானவர் அவனிடம் வருகிறார். அவருடன் சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறும் அருளுக்குரிய மலக்குகளும் வருகிறார்கள்.
nalla karuthukkal
பதிலளிநீக்கு