5 டிசம்பர், 2012


முதியோரை மதி 

அல்லாஹ் தாஆலா நாள் தோறும் காலையிலும் மாலையிலும் வயோதிகர்கள் முகத்தை நோக்கி என் அடிமையே! உனது வயது முதிர்ந்து விட்டது. உனது மெல்லினம் பட்டுவ்ட்டது. உனது எலும்பு தளர்ந்து விட்டது. உனது தவணை காலம் நெருங்கிவிட்டது. என்னிடம் நீ வந்து சேரும் நேரம் வந்து விட்டது. நீ என்னை நினைத்து வெட்கப்படு. நான் உனது நரையைப் பார்த்து உன்னை நரகில் தள்ள வெட்கப்படுகிறேன் என்று கூறுகிறார்.என்று நாயகம் சல்லல்லாஹு அளைஹிவசல்லம் அவர்கள் கூறியதாக ஆனசு இப்னு மாலிக்கு (ரலி) கூறினார்கள்.

கிருஸ்த்துவ கிழவனும் ஹஜ்ரத் அலியும் 

ஒரு நாள் சையுதுனா அலி (ரலி) அவர்கள் காலைத் தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாயிலே நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தனர் இடைவழியில் அன்னாருக்கு முன்னே முதியவர் ஒருவர் மேதுவார் நடந்து போய்க் கொண்டுரிந்தார். அவருக்கு மரியாதையை செய்யும் நோக்கத்தோடு சையுதுனா அலி (ரலி) அவர்கள் நமது நடையை தாழ்த்தி அவர் பின்னே செல்லலாயினர் பள்ளிவாயிலை அடைந்த பொழுது அம்முதியவர் பள்ளிவாசலில் நுழையாது தன வழியே போகலானார் அப்பொழுதான் அவர் முஸ்லிமல்ல ஒரு கிறிஸ்த்துவர் என அன்னாருக்கு தெரியவந்தது .
உடனே அன்னார் பள்ளிக்குள் சென்று பார்க்கும் போது நாயகம் சல்லல்லாஹு அளைஹிவசல்லம் அவர்கள் இரண்டு ரூகூவின்  நேரம் அளவு நீண்ட ரூகூவின் இருக்கக் கண்டு அன்னாருடன் தொழுகையில் சேர்ந்து கொண்டனர்.தொழுகை முடிந்த பின்னர் எங்கள் நாயகமே இந்தத் தொழுகையில் மட்டும் வழக்கத்திற்கு விரோதமாக ரூகூவை ஏன் நீத்திக்கொந்டிரிந்தீர்கல் என சையுதினா அலி(ரலி) அவர்கள் வினவியதற்கு என்பெருமானார் அவர்கள் நான் வழக்கம்போல இந்த தொழுகையின் ருகூவில்  இருக்கும் போது ஜிப்ரீல் (அலை) என்னும் வானவர் வந்திறங்கி நான் எழுந்திருக்க விடாது எனது முதுகில் அவருடைய இறக்கையை வைத்து கொண்டார்.அவர் தனது இறக்கையை எடுத்த பின்னர் நான் தலையை உயர்த்தி எழுந்தேன் என்று கூறினார்.
அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்று சஹாபாக்கள் கேட்க்க அது பற்றி நான் அவர்தம் விசாரிக்கவில்லை என்று அன்னார் பதிலளித்தார். அதற்குள்ளாக ஜிப்ரீல் (அலை) வந்திறங்கி முஹம்மதே! அலி ஜமாத்தை பின்பற்ற வீட்டிலிருந்து விரைவாக வந்து கொண்டிருந்தார். வழியில் கிறிஸ்த்துவர் ஒருவர் குறுக்கிட்டார்.அவர் கிறிஸ்த்துவர் என்பது அவருக்குத் தெரியாது அவருடைய நரைக்கு மரியாதையை செய்யும் முறையில் அவரைத் தாண்டி முன்னே நடவாது அலி பின்வாங்கிகொண்டார்.ஆதலால் அவர் பள்ளிவாயிலில் வந்து தொழுகையில் உம்முடன் சேரும்வரை உம்மைத் தடுத்து வைக்கும்படி அல்லாகுத் தஆலா எனக்கு கட்டளையிட்டான்.இது ஒரு ஆச்சரியமல்ல அலி வந்து தொலுகையிர்  சேர்ந்து கொள்ளும் வரை சூரியனை உதயமாகாது தடுத்து வைக்கும்படி அல்லாகுத் தஆலா மீக்காயில்(அலை) என்னும் வானவருக்கு கட்டளையிட்டான் அது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக