5 டிசம்பர், 2012

வயதிர்க்குத்தக்க வரிசை 

அபூமன்சூர் மாதுரீதி(ரஹ்) உடைய ஆசிரியருக்கு அவருடைய எண்பதாவது வயதில் மரணம் நெருங்கிவிட்டது அவர் நோய்வாய்பட்டு கிடக்கும் போது அவருடைய வயதை யொத்த அடிமையோருவனை விலைக்கு வாங்கி உரிமை விட்டு வரும்படி  மாதுரீதி(ரஹ்) இடம் கூறினார். அவர் கடைத்தெரு வெங்கும் தேடியும் அந்தப் பிராயமுள்ள ஓர் அடிமை கிடைக்கவில்லை. அவர் யார் யாரிடம் விசரித்தாரோ அவர்களெல்லாம் எண்பது வயது வரை உரிமை பெறாமலிருக்கும் அடிமை எங்கு கிடைக்க போகிறான் என்றனர்.அவர் விருதே திரும்பித் தம் ஆசிரியரிடம் வந்து அவர்கள் சொன்னதை அவரிடம் கூறினார்.அதைக் கேட்ட அந்த ஆசிரியப் பெரியார் தமது சிரசை நிலத்தில் வைத்து சஜ்தா செய்தவண்ணம் ஒருவன் எண்பது ஆண்டுக் காலம் அடிமைபட்டிருப்பதை மக்கள் சகிக்காமல் அவனுக்கு விடுதலை அளித்து விடுகிறார்கள். நான் எண்பது வயது அடைந்திருக்கும் இத்தருணத்தில் நீ எவ்வாறு என்னை நரக வாதையிலிருந்து விடுதளையளிக்காது விட்டு விடுவாய்! நீயோ வள்ளல் பெருங்கொடையாளன் அடியவர் நன்றியை உணர்பவன் என்று இறைஞ்சினார். அந்த அழகிய வேண்டுகொளிற்காக அல்லாஹு தஆலா  அவருக்கு விடுதலை யளித்து விட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக