7 டிசம்பர், 2012


கல்வியின் பெருமை 
இம்மையிலும் மறுமையிலும் மாலன் தரத்தக்க கல்வியில் ஒரு அத்தியாயத்தை ஒருவர் கற்றுக் கொண்டால் இவ்வுலக ஆண்டுகளில் எழுபதாயிரம் ஆண்டுக் காலம் பகலில் நோன்பிருந்து இரவில் விழித்திருந்து தவன்ஜ்செய்த பலனை விட சிறந்த பலனை அல்லாஹு தஆலா அவருக்கு அளிக்கிறான் என்று நாயகம் சல்லல்லாஹு அலைகிவசல்லம் கூறினார். 
குர்ரான் ஊதல் கொஞ்சத்தைக் கொண்டு திருப்தியடைபவர் செயல். தொழுதல் இயலாதார் செயல் நோன்பிருத்தல் எளியோர் செயல்.தஸ்பீகு ஓதல் மாதர் செயல்.தர்மம் செய்தல் கொடையாளியின் செயல்.சிந்தித்தல் சக்தியற்றோர் செயல்.வீரர்களின் செயல் யாது? என்பதை உங்களுக்கு தெரிவிக்கட்டுமா என நாயகம் சல்லல்லாஹு அளைஹிவசல்லம் அவர்கள் சகாபக்களிடம் வினவ எங்கள் நாயகமே அது யாது? என அவர்கள் கேட்கலானார்கள் அதற்கு அன்னார் கல்வி பயல்வது அது முஹ்மீனான பக்தர்களுக்கு ஈருலகிலும் ஒளியளிக்கும் என்றனர் இந்த இரு நபி  போதனகளையும் இப்ராஹீம் (ரலி)அறிவித்துள்ளார் 
நான் கல்வி நகர் அலி, அதன் தலைவாயில் என்று நாயகம் சல்லல்லாஹு அலைகிவசல்லாம் கூறியிருக்கின்றனர்.
செயுதுனா அழியும் காரிஜாக்களும் 
இதைக் கேள்விப்பட்ட இஸ்லாமியப் பெருங்குடி மக்களின் எதிர்கட்சியை சேர்ந்த "கவாரிஜு '' எனப்படுவோர் அலி (ரலி) அவர்கள் மீது பொறுமை கொண்டு அவர்களின் அறிஞர்கலாயுள்ளவர்களின் பத்து பேர்கள் கூடி நாம் அனைவரும் ஒரே கேள்வியை ஒவ்வொருவராக சென்று கூறி விடை விடைகேட்போம் அவர் என்ன சொல்கிறார் என பார்ப்போம் நம்மில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விடை அளிப்பராயின் அவர் நாயகம் சல்லல்லாஹு அலைகிவசல்லாம் கூறிய படி கல்வியின் தலைவாயிலே எனக் கூடி பெரி அவர்களின் ஒருவரை அன்னாரிடம் அனுப்பி வைத்தனர்.அவர் வந்து அலியே கல்வி மேலானதா? செல்வம் மேலானதா? என வினவினார். அன்னார் செல்வத்தை விட கல்வியே மேலானது என்றார்.அதற்க்கு ஆதாரமென்ன? எனக்கேட்டார். அதற்க்கு அன்னார் கல்வி நபிமார்கள் விட்டு சென்ற சொத்து. செல்வமோ காரூன் ஷத்தாது ப்ரவுன் முதலியோர் விட்டு சென்றது. இந்த மறுமொழியை கேட்டவுடன் அவர் ஒன்றும் பேசாமல் போய்விட்டார்.
இரண்டாமவர் வந்து அதே வினாவை கேட்டார். அதற்க்கு அன்னார் பொருளைவிடக் கல்வியே மேலானது என்றார்.அதற்க்கு ஆதாரமென்ன என்று அவரும் கேட்டார். கல்வி உன்னை காப்பாற்றும் பொருளை நீ காப்பாற்றவேண்டும் என்றார்.அவர் சென்று விட்டார்.
மூன்றாமவர் வந்தார் அவரும் அதே கேள்வியை கேட்க அன்னார் பொருளை விட கல்வியே மேலானது என்றார். அதற்க்கு ஆதாரமென்ன? என அவர் கேட்க,போருளுடையாருக்கு விரோதிகள் அதிகம். கல்வியுடையாருக்கு தன்பர்கள் அதிகம் என்றார்.அவர் சென்று விட்டார்.
நான்காமவர் வந்து அதே வினாவை கேட்க அன்னார் கல்வியே மேலானதுன்றார். அதற்கு ஆதாரமென்ன?என அவர் கேட்க அன்னார் பொருளை  அது குறையும்.கல்வியை செலவிட்டால் து பெருகும் என்றார்.அந்த விடையை கேட்ட அவர் ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டார்.அதன் பின் ஐந்தாமவர் வந்து அதே கேள்வியை கேட்க கல்வியே மேலானது என அன்னார் பதிலளிக்க. அதற்க்கு ஆதாரமென்ன? என அவர் வினவ. அன்னார் பொருளுள்ளவன் உலுத்தன்.உலோபி என்று அழைக்கப்படுவான் என்றனர்.மறுமொழி கேட்க அவர் வாயடைத்து ஒன்றும் பேசாது போய் விட்டார்.
அவருக்கு பின் ஆராமர் வந்து அதே கேள்வியைக் கேட்க அன்னார் கல்வியே மேலானது என்றனர். அதற்கு ஆதாரமென்ன? என அவர் வினவ அன்னார் பொருளுக்கு திருடன் பயமுண்டு.கல்விக்கு திருடன் பயமில்லை என்றனர்.அவர் எழுந்து போய்விடவே ஏழாமவர் வந்து அதே கேள்வியை கேட்க அன்னார் கல்வியே மேலானது என்று பதில் கூறினார்.அதற்க்கு ஆதாரமென்ன? என வினவ. அன்னார் பொருளின் வரவு செலவுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் உத்தரவாதியாக வேண்டிய திருக்கும் கல்வி அதனை கற்றவருக்கு சிபாரிசு செய்யும் என்றனர்.அவரும் பேசாது போய்விட்டார்.
எட்டாமவர் வந்து அதே கேள்வியைக் கேட்க அனார் கல்வியே மேலானது என்றார்.அதற்கு ஆதாரமென்ன? அன்னார் காலஞ் செல்ல செல்ல பொருள் அழியும்.கல்வியோ எத்தனை காலமாயினும் அழிந்து போகாது என்றனர்.அவர் எழுந்து போய்விட்டார்.
ஒன்பதாமவர் வந்த அதே வினாவை விடுத்தார் அனார் அதே விடையை கூறினார். அதற்கு அவர் ஆதாரம் கேட்டார்.அன்னார் கூறினார் பொருள் மனதை இறுக்கி இருளடைய செய்யும் கல்வியோ அதற்கு ஒளி அளிக்கும் என்றார்.அவரும் எழுந்து போய்விட்டார்.
பத்தாமவர் வந்து அதே வினாவை விடுத்தார்.அன்னார் கல்வியே மேலானது என்றனர்.அவர் அதற்கு ஆதாரம் கேட்டனர் அன்னார் பணக்காரர் தன பணத்தின் காரணத்தால் திமிர் கொள்வர் கல்விமான் தன கல்வியுன் காரணத்தால் பணிவை மேற்கொள்வான் என்று கூறிவிட்டு என் ஆயுட்காலம் வரை மக்கள் இதே கேள்வியை கேட்டுக்கொண்டு இருந்தாலும் நான் விதவிதமான பதில் கொடுத்துகொண்டே இருப்பேன் என்றனர். இந்த விடைகளை கேட்ட அவர்கள் அன்னாரின் கல்வித்திறமையை பாராட்டி அவர்களின் தப்பான போக்கைக் கைவிட்டுத் திருந்தி இஸ்லாமியப் பெருங்குடி மக்களுடன் சேர்ந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக