"கண்ணீரில் மிதந்த பாத்திமா(ரலி) குடும்பம்"
ஹுஸைன்(ரலி)அவர்கள் பிறந்து விட்டார்கள் சிறிது நேரத்தில் பேரப்பிள்ளையைப் பார்க்க அருமை நலி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அங்கு வந்து விட்டார்கள்.பேரப்பிள்ளையைப் தமது மடியிலே வாங்கி வைத்துக் கொண்டார்கள். பேரப்பிள்ளையைப் பார்த்த சந்தோஷம் மிகுதியால் முகமொல்லாம் பூர்த்துப் போனது உடனே குழ்ந்தையின் உதட்டிலும் குரல் வளையிலும் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
சற்று நேரத்தில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அங்கு வந்தார்கள் யாரசூலல்லாஹ்! அல்லாஹ் தங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிரான். அத்துடன் துக்கம் விசாரிக்கும் படியும் சொல்லி அனுப்பினான் என்றார்கள். இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இரகசியங்களை அல்லாஹ்வே நங்கு அறிந்தவன். ஜிப்ரயீலே! அல்லாஹ்வின் வாழ்த்துக்கு அர்த்தம் எனக்குப் புரிகிறது. அவனது துக்க விசாரிப்புக்கு எனக்கு அர்த்தம் புரிய வில்லையே என்று கேட்டார்கள்.
ஜிப்ரயீல்(அலை) அவர்கள் மிகவும் கவலை அடைந்தவர்களாக அல்லாஹ்வின் ரசூலே! தாங்கள் சற்று முன் வாஞ்சையும்,மகிழ்ச்சியுமாக இந்த குழ்ந்தையை முத்தமிட்டீகளே! இந்த குழந்தையின் குரல் வலையில் கூரிய ஆயுதம் பாய்ச்சப் படவிறுக்கிறது. இந்த குழந்தையின் அம்மா சகோதரர் இருவர் மறைவுக்குப் பின்னால் இது நடக்கும் என்றார்கள்.
இனத உரையாடல் நடக்கும் போது. ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் அங்கு அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் இதை அவர்கள் அறிந்து கொள்ள முடியவில்லை.
கருனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கண்களில் கண்ணீர் துளிகள் விழுவதைப் பார்த்த அலி(ரலி) அவர்கள் நடுங்கி போய் அருமை நபியே ச்தாங்கள் திடீரென அழுவதற்கு காரணம் என்ன? என்று வினவினார்கள்.
உங்களது மகக் ஹுஸைன் படுகொலை செய்யப் படுவார் என்று நான் அறிவிக்கப்பட்டேன் அதனால் தான் என்றார்கள்.
ஹஜரத் அலி(ரலி) அவர்களுக்கு அழுகையை அடக்க முடியாமல் எழுந்து போனார்கள். கணவர் அழுகையை கண்ட பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஒன்றும் ஓடவில்லை. விசாரித்த போது உன்னை புரிந்து விட்டது தந்தையிடம் வந்தார்கள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.எனதருமை தந்தையே எனது அருமை மகன் ஹுஸைன் கொல்லப்படுவாரா? என்று கதரினார்கள்.
ஆம் மகளே! ஆம் என்றார்கள் அதுவும் தங்கள் உம்மத்தினாராலேயே கொல்லப்படுவாரா? என்று கேட்டார்கள் அப்படித்தான் அறிவிக்கப்பட்டிருக்கிறேன் என்றார்கள் இதைக் கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் வீரிட்டு அழுதார்கள். தங்களின் முபாரக்கான கைகளில் பச்சிள்ம் பாலகன் ஹூஸைன்(ரலி) அவர்களை தூக்கி கான்பித்து, தங்களது புனித உதிரத்தின் உயிரின் வாரிசான இப்பாலகரைக் கொலை செய்யக் கூடிய மாபாத்கர்கள் தங்கள் உம்மத்திலேயே இருக்கிரார்களா? தாங்கள் முத்தமிட்ட இத்திருமேனியில் வாள் வீசும் கைகள் இந்த மண்ணாகத்திலேயே இருக்கிறதா? எனதருமை தந்தையே எவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட இக்குழந்தை என்ன குற்றம் செய்தது? என்று தேம்பி தேம்பி அழுதார்கள்.
கருனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களின் அருமை மகளின் அழுகையைப் பார்த்து வேதனை அடைந்தவர்களாக தாடி நனையும் அளவுக்கு அழுதார்கள்.
அருமை மகளே! அப்படுகொலை இக் குழ்ந்தைப் பருவத்தில் நடக்காது. அப்படுகொலை நடக்கும் போது நானும் இருக்க மாட்டேன் நீயும் இருக்க மாட்டா௧ அலியும் இருக்க மாட்டார். ஹஸனும் இருக்க மாட்டார்கள்.
பாத்திமா (ரலி) அவர்களின் துக்கம் அதிகமாகிறது உடனே பச்சிளங் குழ்ந்தையை தூக்கிப் பிடித்தவர்களாக, மகளே! நீ அனி்நியாயம் செய்யப்படும் போது நாங்கள் யாரும் இருக்க மாட்டோம் அகிலத்திற்கெல்லாம் அருட்கொலையாய் அவதரித்த காத்தமுன் நபியின் பேரரான நீ அனாதையாக்கப்பட்டுக் குத்திக் கொல்லப்படும் போது மகனே! உனக் கென்று கண்ணீர் சிந்த நான் கூட இருக்க மாட்டேனாம்.
எனதன்பு மகனே! என் உயிருக்குயிரான செல்வமே! அப்போது நான் மாத்திரம் இருந்தால் இவ்வுலகில் புதிய கண்ணீர் ஆறு ஒன்று உருவாகி விடாதா என கண்ணீர் விட்டு கதறினார்கள். அன்று குடும்பமே கண்ணீரில் மிதந்தது. பாத்திமா(ரலி) அவர்களை அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்ககாள சமாதானப்ப்டுத்தினார்கள்.
ப்பு இவ்வளவுதான் முஸ்லீம்களின் யோக்கியதை.வாளால் உருவாக்கப்பட்ட இசுலாம் வாளால் அழிந்தது.
பதிலளிநீக்கு