கிழவியின் மகளே!
ஒரு சமயம் பாத்துமா(ரலி) அவர்களுக்கும் ஆய்ஷா(ரலி) அவர்களுக்கும் வாய் சண்டை வந்து தகராறு ஏற்பட்டது. பாத்துமா(ரலி) அவர்களை விட வயதில் ஆயிஷா(ரலி) அவர்கள் இளையவர். பாத்துமா(ரலி) அவர்களைப் பார்த்து உங்களைத் தெரியாதா? நீங்க கிழவியின் மகள் தானே! என்று துடுக்காக பேசிவிட்டார்கள்.இவ்வார்த்தை பாத்திமா(ரலி) அவர்களின் உள்ளத்தில் முள் போல தைத்து விட்டது துடிதுடித்துப் போனார்கள். மறுபேச்சுப் பேசாமல் உடனே அருமம தந்தையிடம் ஓடினார்கள். எனதருமை தந்தையே எனக்கும் சின்னம்மாவுக்கும் சிறிய தகராறு ஏற்பட்டது. அப்போது என்னை பேசி இருந்தாலும் பரவா இல்லல பொறுத்துக் கொள்வேன். என் தாயை பற்றி இழிவாக கிழவியின் மகளே! என்ற வெறுப்பாக சொல்லி விட்டார்கள். என்னால் பொறுக்க முடியவில்லல தந்தையே என்று முறையிட்டார்கள். அருமை மகளின் முறையீட்டை அமைதியாய் கேட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். நீ உனது சின்னம்மாவிடம் சென்று, எனது தாய் 40 வயது கிழவியாக இருந்தாலும் 25 வயது வாலிபரை நிக்காஹ் செய்து கொண்டார்கள் ஆனால் நீங்களோ 9 வயது குமரியாக இருந்து 50 வயது கிழவனை அல்லவா? நிக்காஹ் செய்து கொண்டீர்கள். ஆதனாலே நீங்கள் "கிழவனுடடய மனைவி என்று கூறி விட்டு வாங்க என்று தனது மகளுக்கு ஐடியா சொல்லி கொடுத்தார்கள். பாத்திமா (ரலி) அவர்களும் அது போலவே சொல்லி விட்டார்கள். ஆய்ஷா(ரலி) அவர்களுக்கு கோபம் உச்சியில் ஏறிவிட்டது. உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சென்று நீங்கள் கிழவனாம் நான் கிழவனின் மனைவியாம் உங்கள் மகள் சொல்லி விட்டார். இதைப்பற்றி உங்கள் மகளிடம் உடனே விசாரியுங்கள் என்று முறையிட்ட போது. ஆய்ஷா! நான் என்ன குமரனா? நீ மட்டும் கிழவியின் மகள் என்று பாத்திமாவின் மனதை புண்படுத்தி இருக்கிறாயே. அதற்கு இது சமமாகி விட்டது இத்துடன் பிரச்சனையை தீர்த்து சமாததனம் ஆகிவிடுங்கள் என்று சாமாதானம் செய்து அனுப்பினார்கள்.
வீட்டிற்கு வீடு வாசல்படி.
பதிலளிநீக்குமகம்மதின் குடும்பம் என்றாலும் வீண் பிரச்சனைகளுக்குப் பஞ்சம் இல்லை.