16 பிப்ரவரி, 2010

"மணவறை விசேஷம்"
பாத்திமா(ரலி) அவர்கள் நிகாஹ் முடிந்தபின் புதுமண தம்பதிகள் தனிமையில் இருந்தனர். அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அலி(ரலி) அவர்க்ளிடம் நான் ஒரு அலுவலாக வெளியே செல்கிறேன். திரும்பி வரும் வரை உங்களது மனனவியை நெருங்க வேண்டாம் என்று கூறிச் சென்றார்கள்.
கல்யான வீட்டில் கடைசி விருந்தினர் வீட்டை விட்டு வெளியேறவும் நபி ஸல்லலலாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்துசேரவும் சரியாக இருந்தது. அப்போது அங்கு வீட்டை ஒழுங்கு படுத்திச் கொண்டிருந்த உம்மு அய்மனிடம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரும்படி ஏவினார்கள். தண்ணீர் கொண்டு வரப்பட்டது தன்னீரை வாய் நிறைய எடுத்துக் கொப்பளித்து அதனை அந்தப் பாத்திரத்துனுள்ளேயே உமிழ்ந்தனர். பின்பு அலி(ரலி) அவர்களை தன் முன் அமர வைத்தார்கள். கையில் சிறிது தண்ணீர் எடுத்து அலி(ரலி) அவர்களின் தோள்களிலும் மார்பிலும் கைகளிலும் தெளித்தார்கள். பிறகு அருமை மகளார் பாத்திமா(ரலி) அவர்களை அழைத்த போது தனது அருமை தந்தையின் மேலிருந்த மதிப்பும் மரியாதையும் காரணமாக அவசரத்தில் தன் மேலாடையில் தடுக்கியவராக முன் வந்து நின்றார்கள். ஹஜ்ரத் அலி(ரலி) க்கு போல நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களுக்கும் தண்ணீர் தெளித்தார்கள் பின் அவர்களிருவருக்கும் அவர்களது சந்ததியினருக்கும் துஆ செய்தார்கள். பின்பு புதுமனத் தம்பதியருக்கான மணவறை பதனிடப்பட்ட ஒரு ஆட்டுத்தோல் அதன் மேல் கோடிடப்பட்ட நிறம் மங்கிப் போன ஒரு யமன் புடவை விரிப்பாகப் போடப்பட்டிருந்தது. இங்கு இருவரையும் தனினையில் விட்டு. விட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் திரும்பினார்கள்.

1 கருத்து:

  1. இசுலாத்தில் இந்து மதத்தில்உள்ளதுபோல் தண்ணீா்சடங்குகள் உள்ளது. இந்து கோவில்களில் செய்யப்பட்டால் ஹராம் என்பது முட்டாள்தனம்.

    பதிலளிநீக்கு