9 பிப்ரவரி, 2010

"மணவறையில்பாத்திமா(ரலி)"
ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்களுக்கு திருமணம் முடிந்தது அன்புமகள் பாத்திமா(ரலி) அவர்களின் நெற்றியில் அன்பு முத்தம் ஒன்றை பரிசாக தந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். அங்கு நின்ற பென்கள் வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மணமக்களுக்காக துஆ செய்தார்கள். பிறகு " என் அருமை மகளே! நம் குடும்பத்துலுள்ள அனைவரையும் காட்டிலும். எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவருக்கே உன்னை திருமணம் செய்து வைத்துள்ளேன் என்று கூறினார்கள். அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் தனித்து விடப்பட்டார்கள். முதல் இரவு இருவரும் அன்பான வார்த்தைகளால் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். குடும்ப வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்ற திட்டங்களை அன்பு மனைவியிடம் அலி(ரலி) அவர்கள் பேசி கொண்டிருந்தனர். திடீரென பாத்துமா(ரலி) அவர்கள் தேம்பி தேம்பி அழத்துவங்கினார்கள். ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களுக்கோ ஒன்றும் புடியவில்லை. உடனே மனைவியிடம் எனதருமை மனைவியே என்னை திருமணம் செய்து கொண்டது உங்களுக்கு திருப்தியை அளிக்க வில்லையா? என்று கேட்டார்கள்.
அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் நான் எதிர்ப்பார்த்ததை விட சிறந்த கணவராக அல்லாஹ் உங்களை தந்துள்ளான். என் இரப்பின் போது என் நிலை என்னவாகும்மோ என்றும் நாளை அல்லாஹ்வின் முன்னால் கணவரின் கடமைகளை சரியாக செய்தாயா? என்று தான் அழுகிறேன் என்றார்கள்.,இதைக் கேட்ட அலி(ரலி) அவர்கள் ஆச்சிரியத்தில் மூழ்கினார்கள். இப்படிப்பட்ட ஒரு அற்புத மனைவி கிடைத்திருப்பதை நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். அப்போது பாத்துமா(ரலி) அவர்கள் எனதன்பு கனவரே! தாங்கள் தொழும் இடத்தைக் காட்டுங்கள். அங்கு நான் அல்லாஹ்வை வணங்கப் போகிறேன். நீங்க்ளும் அதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். இது தான் என்னுடைய விருப்பமாகும் என்றார்கள். தொழும் இடத்தைக் காட்டியதும் இருவரும் இரவு முழுவதும் அல்லாஹ்வின் வணக்கத்தில்லே இருந்தார்கள் புதுதம்பதிகள் மூன்று நாளைக்கு பிறகு தான் தங்களின் இல்லற வாழ்வை துவங்கினார்கள் சுப்ஹானல்லாஹ்!

1 கருத்து: